சாம்பார்வடை என்ற பதிவர் "நீங்கள் சிபாரிசு செய்யும் படங்கள்" என்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று பதிவர் கோவி.கண்ணண் அவர்கள் சிபாரிசு செய்த படங்களின் வரிசையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அதில் அவர் குறிப்பிட்டு இருந்த படங்களில் அவ்வை சண்முகியும் ஒன்று.அக் கருத்தில் இருந்து மாறுபடுவதால் இந்தப் பதிவு.
கேள்வி : அவ்வை சண்முகி தரமான நகைச்சுவைப் படமா?
என் பதில் : இல்லை.மூன்றாம் தரமான நகைச்சுவைப் படம்.
பொருள்:
படத்தைப் பற்றிக் கூறும் முன்பு படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்பது விதி.படத்தின் ஒன்லைன் "குழந்தைக்காக மனைவியை விட்டுப் பிரிந்த ஒரு ஆண்,பெண்ணாக மாறுவதால் ஏற்படும் குழப்பங்கள்".நன்றாகத் தான் உள்ளது(மிஸஸ் டவுட் பயரில் இருந்து சுட்டது ஆச்சே)
ஆனால் படத்தை எடுத்திருக்கும் விதம்.முழுக்க முழுக்க ஆபாசம்.இரட்டை அர்த்த வசனங்களையும்,விரசமான காட்சிஅமைப்புகளாலும் மட்டுமே காட்சிகளை நகர்த்தி இருப்பார்கள்.
தான் பெண்ணல்ல ,ஆண் என்று மீனாவிற்கு கமல் சொல்லும் உச்சக் கட்ட காட்சி ஒரு உச்சக் கட்ட உதாரணம்.இதே கதையை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி எடுத்த சன் தொலைக்காட்சி நாடகம் (பதி சபாபதி)இதை விட எவ்வளவோ பெட்டர்.
சுருளிராஜன்,வெண்ணிற ஆடை மூர்த்தி வகையறாக்கள் இருந்தாலும் நாம் அனைவரும் சிலாகிப்பது நாகேஷைப் பார்த்து தான்.
என்னுடைய தரமான நகைச்சுவைப் படங்களின் லிஸ்ட்:
1)காதலிக்க நேரமில்லை.
2)இன்று போய் நாளை வா.
3)தேன்மழை.
4)சபாபதி.
5)சபாஷ்மீனா+வாலிபவிருந்து=உள்ளத்தை அள்ளித்தா.
முடிவுரை:
இது என் கருத்து. அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.மாறுபட்ட கருத்துக்கள் தான் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன.
குறிப்பு:
1) நானும் கமல் ரசிகன் தான்.
2) கோவிச்சுக்காதீங்க கோவி(இதான முரண்தொடை)
இக்கட்டுரைக்கு எத்தன மார்க் கொடுப்பீங்க