நேற்று ஜெயா தொலைக்காட்சியில் கோலிவுட் கோர்ட் என்ற நிகழ்ச்சியில் மிருகம் பட இயக்குநர் சாமி "Animal Welfare Association" இடமிருந்து NOC வாங்குவது பற்றிப் பொங்கிக் கொண்டிருந்தார்.மிருகம் படத்தில் சுமார் 10 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகள் தூக்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் கூறியிருந்தார்.(சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா?? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்).
இதே போல் சென்ற வாரத்தில் தங்கர்பச்சான் ஒன்பது ரூபாய் நோட்டின் கள்ளக்குறுந்தகடு (நன்றி சுகுணா திவாகர்) 30 ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்டுபிடித்து அதைப் போலீஸில் புகார் செய்திருந்தார்.(ஏற்கனவே அந்தப் படத்தில் கள்ளக்குறுந்தகட்டிற்கு எதிராக ஒரு காட்சியும் வைத்திருப்பார்).இவரும் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது.
நன்று.அப்படியே எங்கள் பிரச்சினைகளையும் சொல்கிறோம். அதையும் அங்கே சொல்லுங்கள்.
ரசிகர்கள் இளிச்சவாயர்களா???
சென்னையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் திரைப்படங்கள் வெளிவருகிறது.அதை அந்த வார இறுதியில் கவுண்டரில் டிக்கெட் எடுத்து யாராவது பார்த்தால் அவர்கள் பெயரை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.உன்னை யாருய்யா அந்த வாரமே பார்க்கச் சொன்னா?? என்று கேள்வி எழுப்பாதீர்கள்.அடுத்த வாரங்களில் அந்தத் திரைப்படங்கள் அந்தத் திரையரங்குகளில் ஓடுவதில்லை.வேறு புதிய படங்கள் வந்து அதையும் பிளாக்கில் பார்க்க வேண்டிய நிலைதான் உள்ளது.சுருக்கமாகச் சொல்லப்போனால் "First come first serve" லாம் இப்போது இல்லை. "கையில காசு வாயில தோசை" தான் உள்ளது.
இந்தியாவின் மொத்தக் கருப்புப்பணத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட்ட உச்ச நடிகரின் திரைப்படந்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று கேள்வி.(சென்னையில் அதன் ஒரு டிக்கெட்டின் விலை 300 - 1000 வரை).
இப்போது உங்கள் டார்கெட் மார்க்கெட் பணம் ஜாஸ்தியாகக் கொடுக்க மறுக்கும் நடுத்தரக்குடும்பமோ அல்லது குடும்பப் பெண்களோ இல்லை தான்.பர்ச்சேஸிங் பவர் ஜாஸ்தியாக உள்ள இளைஞர்கள் தான்.ஆனால் அதற்காக வழக்கமான கட்டணத்தை விட 5 மடங்கு எல்லாம் கொஞ்சம் ஓவர்.
அந்த மார்க்கெட்டை அழிக்க எப்படி டி.வி யும், கள்ளக்குறுந்தகடும் வந்ததோ அதே போல் இந்த மார்க்கெட்டையும் அழிக்க ஏதொவொன்று வரும்.அதற்கு முன்பாகவே முடிவு நீங்கள் தான் எடுக்க வேண்டும்.
தரமான படங்களைச் சரியான கட்டணங்களோடு நல்ல தியேட்டர் வசதிகளுடன் எங்களுக்குக் கொடுங்கள்.இப்படி இருந்தால் தான் நாம் அனைவரும் ஒரு product (திரைப்படம்) மூலம் சந்தோசமடைய முடியும்.கள்ளக்குறுந்தகடும் இன்ன பிற பிரச்சினைகளும் தாமாகவே அழிந்துவிடும்.
(பில்லா படத்திற்குச் சென்று டிக்கெட் விலை கேட்டு நாங்கள் எங்கள் எதிர்ப்பைத்தெரிவிக்க அன்று படத்திற்குச் செல்லவில்லை :)))