Tuesday, February 26, 2008

காதலிப்பவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்களா???

என்ன நிசமாலுமே லவ் பண்றியா?...போடா லூசு(காதல் திரைப்படம்)

நிசமாத்தான் சொல்றீயா??(கற்றது தமிழ்)

நான் அழகா இருக்கேனா???(கண்ணாடில பாத்தாலே தெரியுமே!!)

என்னை ஏமாத்திற‌ மாட்டியே???(இது ஒட்டுக் கேட்ட‌து)

இன்னும் ஆயிர‌ம் ஹார்மோன்த‌ன‌மான கேள்விக‌ள் இருந்தாலும் பின்வ‌ரும் முக்கிய‌மான‌ கேள்விக‌ளை சாய்ஸில் விட்டு விடுகிறார்க‌ள் என்றே நினைக்கிறேன்.

1)உன் எதிர்கால‌ க‌ன‌வு என்ன?(என் ச‌ம்ப‌ள‌ம் 6500 ரூபாய்தான்.)

2)க‌ல்யாண‌த்திற்கு அப்புற‌மா உங்க‌ அப்பா அம்மாவையும்,எங்க‌ அப்பா அம்மாவையும் நாடு க‌ட‌த்திர‌லாமா?இல்ல‌ இங்க‌யே இருந்து தொலைக்க‌ட்டுமா?

3)க‌ல்யாண‌த்திற்கு அப்புறமா கொஞ்ச நாட்களிலேயே என‌க்கு டி.வில‌ கிரிக்கெட்,உன‌க்கு டி.வி ல‌ சீரிய‌ல் ஓ.கே வா?

4)இனிமே வரப்போற 40 வருசத்துக்கும் இதே மூஞ்சிதான்.பரவாயில்லையா?(இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்...என்ன பண்றது விதி)

பின்குறிப்பு:

Annexure 1

எனக்கு இந்த அனுபவம் இல்லை.காரணம் என் கல்லூரிப் பருவத்தின் ஒரு தலைக்காதலைத் திரைப்படமாக எடுத்தால் அது அவ்வாண்டின் சிறந்த நகைச்சுவைப் படமாக அமையும்.அதன் ஒன்லைன் இதான்...

"என் வாழ்க்கை எனும் சினிமாவில் அவளை நான் ஹீரோயினாகப் பார்க்க அவள் என்னைக் காமெடியனாகப் பார்த்தாள்.:-((

Annexure 2

Phone-in நிகழ்ச்சியில்..
நான்:மேடம் என்னை யாரும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்க...

டெலிபோன் பெண்:அப்படியா?நீங்க எப்படி இருப்பீங்க சொல்லுங்க...

நான்:ரஜினி மாதிரி

டெ.பெ:ஸ்டைலாவா??

நான்:இல்ல கருப்பா....S.P.B மாதிரி...

டெ.பெ:நல்லா பாடுவீங்களா???

நான்:இல்ல குண்டா இருப்பேன்.அப்புறம் நம்ம S.J சூர்யா மாதிரி...

டெ.பெ:அய்யய்யோ....Better Luck Next ஜென்மம்!!!!

4 comments:

செல்வம் said...

வாங்க கப்பி...ஸ்மைலிக்கு நன்றி

KARTHIK said...

எய் ஜுபறுப

மங்களூர் சிவா said...

//
Phone-in நிகழ்ச்சியில்..
நான்:மேடம் என்னை யாரும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்க...

டெலிபோன் பெண்:அப்படியா?நீங்க எப்படி இருப்பீங்க சொல்லுங்க...

நான்:ரஜினி மாதிரி

டெ.பெ:ஸ்டைலாவா??

நான்:இல்ல கருப்பா....S.P.B மாதிரி...

டெ.பெ:நல்லா பாடுவீங்களா???

நான்:இல்ல குண்டா இருப்பேன்.அப்புறம் நம்ம S.J சூர்யா மாதிரி...

டெ.பெ:அய்யய்யோ....Better Luck Next ஜென்மம்!!!!
//

:-)))))))))

நல்ல நகைச்சுவையா இருந்தது.

சூப்பர்.

செல்வம் said...

வாங்க சிவா..வருகைக்கு நன்றி.