<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770</id><updated>2012-01-28T10:11:03.507-08:00</updated><category term='புத்தகத் திருவிழா'/><category term='திருமணம்'/><category term='புத்தகம்'/><category term='கண்டுபிடிப்பு'/><category term='தனுஷ்'/><category term='டி.வி'/><category term='பொது'/><category term='விமர்சனம்'/><category term='செம்மொழி மாநாடு'/><category term='சுஜாதா'/><category term='திரைவிமர்சனம்'/><category term='சாதி'/><category term='திரை விமர்சனம்'/><category term='மொக்கை'/><category term='திருப்பூர் புத்தகக் கண்காட்சி'/><category term='சமூகம்'/><category term='இலக்கியம்'/><category term='கொலவெறி'/><category term='தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு'/><category term='திருப்பூர்'/><category term='தசாவதாரம்'/><category term='சும்மா'/><category term='போராளி'/><category term='சுயதம்பட்டம்'/><category term='பதிவர் முக்கோணம்'/><category term='அனுபவம்'/><category term='அறிமுகம்'/><category term='பங்குசந்தை'/><category term='ஜாலி'/><category term='நாகேஷ்'/><category term='காதல் மொக்கை'/><category term='திரைப்படம்'/><category term='அரசியல்'/><title type='text'>கடலையூர்</title><subtitle type='html'>வாங்க பழகலாம்.பிடிச்சிருந்தா friends ஆ இருப்போம்,பிடிக்கலைனாலும் friends ஆ இருப்போம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>73</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6928701169317792035</id><published>2012-01-27T01:01:00.000-08:00</published><updated>2012-01-27T02:05:26.735-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பூர் புத்தகக் கண்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>திருப்பூர் புத்தகக் கண்காட்சி - பகுதி 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-_XSKkI6daA8/TyJoe2LA6NI/AAAAAAAAALg/0l9raM-SDbM/s1600/book%2Bfair.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 290px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-_XSKkI6daA8/TyJoe2LA6NI/AAAAAAAAALg/0l9raM-SDbM/s400/book%2Bfair.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702234957351545042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது மட்டும் ம்கிழ்ச்சி இல்லை. கண்காட்சிக்குப் போவது, அடுக்கியும், கலைத்தும் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்ப்பது, இத்துனை தலைப்புகளா???இத்துனை புத்தகங்களா??? என அதிசயிப்பது, புத்தகங்கள் வாங்கிச் செல்வோரைப் பார்த்து மகிழ்வது என ஒவ்வொரு விடயமும் மகிழ்வூட்டக் கூடியதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்திருக்கிறது.ஒரு முறை பாலகுமாரனின் தீவிர வாசகனாக இருந்த போது, புத்தகக் கண்காட்சி முழுமையும் அவர் பின்னே அவர் அறியாமல் சுற்றியிருக்கிறேன். தளபதி படத்தில் ரஜினி ஸ்ரீவித்யா பின்னால் சுற்றுவாரே அதைப் போல...&lt;br /&gt;&lt;br /&gt;பிறிதொரு முறை கி.ரா அய்யா என் சொந்த ஊர் கடலையூர் என்று சொன்னவுடன் அருகில் அமர வைத்து வாஞ்சையோடு இரண்டு நிமிடங்கள் கதைத்தார்.அவருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் இடைசெவல். ஒரு விநாடியில் ஓரூர்க்காரர்கள் ஆனோம். என் வாழ்வில் உள்ள மறக்க முடியாத நினைவுகள் பட்டியலில் எப்போதும் இவையிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை முற்றிலும் புதிய அனுபவம். &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூரில் பாரதி புத்தகாலயமும், பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து 9 வது புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். சுமார் 100 கடைகளில் புத்தகங்களும், “கானுயிர் காப்போம்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும், மாலை நேர சிறப்பு நிகழ்வுகளும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி குழுவினரின் உழைப்பையும், ஆர்வத்தையும் பறைசாற்றுகின்&lt;br /&gt;றன. &lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சியில் சுமார் 30 நேரடிப் பதிப்பகங்களும், சுமார் 50 புத்தக விற்பனையாளர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள். உயிர்மை, கிழக்கு, விகடன், சுரா, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளார்கள். இருந்தாலும் காலச்சுவடு, காவ்யா போன்ற  பதிப்பகங்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் கேட்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை படக்கதைக்கு என்று பிரத்யேக ஸ்டால்கள் போடவிருப்பதாக சொன்னார்கள். சுட்டி, சித்திரம், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க் என்று அடுத்தவர்களின் கற்ப்னையை பார்வையிடும் வேலைகளை மட்டுமே செய்து வரும் நம் குழந்தைகளை மீட்டு அவர்களை சுயமாகக் கற்பனை செய்யத்தூண்டும் திறனும், வாசிப்பின் ருசியை அவர்களுக்கு உணரச் செய்யும் திறனும் காமிக்ஸ்களுக்கு மட்டுமே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழும் வாழ்க்கையை பிழைப்பிற்காக வாழும் தொழில்வாழ்க்கை (Professional), நமக்காக வாழும் சுயவாழ்க்கை(Personal), சமூகத்திற்காக வாழும் சமூக வாழ்க்கை (Social) என்று மூன்றாகப் பிரித்துக் கொண்டோமேயானால் மூன்றையும் மேம்படுத்த உதவுவது புத்தகங்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் போன்ற தொழில் நெருக்கடி மிகுந்த நகரகங்களிலும் புத்தகங்களைத் தேடி குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் விற்பனை ஆகும் பெரும்பான்மைப் புத்தகங்கள் சமையல் குறிப்பு, சுயமுன்னேற்றப் புத்தகங்கள் தான் என்று கேள்விப் படும் போது சற்று வருத்தமாகவும் உள்ளது. இதையும் தாண்டி நம் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கும் புத்தகங்கள் நிறைய உள்ளன என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர திருப்பூர் இணையக் குழுமமான ”சேர்தளம்” வரவேற்புக் குழுவுடன் இணைந்து அன்றாட நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றி வருகிறது. பார்வையாளர்களாக இருந்த எங்களைப் பங்கேற்பாளர்களாகவும் மாற்றியிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் மாலையில் நண்பர்கள் கூடுவதும், கண்காட்சியை சுற்றி வருவதும்,&lt;a href="http://tirupurbookfair.blogspot.com/2012/01/blog-post.html"&gt;திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 &lt;/a&gt;என்ற வலைப்பதிவுக்காக வாசகர்களையும், பதிப்பாளர்களையும் பேட்டி எடுப்பதுமாக இனிமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் நல்ல நண்பர்களுக்கு ஒப்பானவை என்பது மட்டுமில்லாமல் நல்ல நண்பர்கள் புத்தகங்களுக்கு ஒப்பானவர்கள் என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6928701169317792035?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6928701169317792035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6928701169317792035' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6928701169317792035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6928701169317792035'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2012/01/1.html' title='திருப்பூர் புத்தகக் கண்காட்சி - பகுதி 1'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_XSKkI6daA8/TyJoe2LA6NI/AAAAAAAAALg/0l9raM-SDbM/s72-c/book%2Bfair.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6745356013838361742</id><published>2011-12-16T23:34:00.000-08:00</published><updated>2011-12-16T23:37:59.451-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனுஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலவெறி'/><title type='text'>Why this Kolaveri di ? - நமக்கு சொல்வது என்ன ???</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-vlMPO33orzE/TuxGtBhbuiI/AAAAAAAAALE/wHLaCO6lgmk/s1600/Kolaveri.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-vlMPO33orzE/TuxGtBhbuiI/AAAAAAAAALE/wHLaCO6lgmk/s400/Kolaveri.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686998168778816034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Kolaveri Di...ஒரு அறிமுகம் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேதியில் கொலவெறி பாடலை யூத் தமிழர்களிடம் அறிமுகம் செய்வது என்பது அவர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வெளிவரப்போகும் 3 படத்தில் தனுஷ் கொலைவெறியோடு பாடிய பாடல் இன்று சமூக வளைத்தளங்களின் உதவியாலும் ஊடகங்களின் ஊதிப் பெருக்கும் தன்மையாலும் அநியாயத்திற்கு ஹிட்டடித்து உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே அளவிற்கு முல்லைப்பெரியார் பற்றியும், கூடங்குளம் பற்றியும் அதே யூத் தமிழர்களுக்கு தெரியுமா என்று கேட்டால் நம்மை கிழட்டு தமிழர்கள் பட்டியலில் சேர்த்து விடும் வாய்ப்பு உள்ளதால் எஸ்கேப்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கொலைவெறி ஏன் நமக்கு பிடித்தது????&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களை ஓட வைக்க உதவும் முக்கிய விதிகளில் ஒன்று “ரசிகர்கள் தங்களை கதாநாயகர்களாக உருவகம் செய்து கொள்ளுமாறு கதை அமைப்பது”, தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இருந்தே இதே விதியைக் கடைபிடித்துத் தான் வெற்றியடந்து வருகிறார். தன்னைப் போலவே உள்ள ஒரு கதாநாயகன் திரையில் தான் செய்வதையே அல்லது செய்ய விரும்புவதை செய்வது கண்டு ரசிகர்கள் கிளர்ச்சியடைவது தான் இவ்வகைப்படங்களின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காப்பாற்றப்படும் ஆணாதிக்க சிந்தனை :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”நான் ஒரு பெண்ணைக் காதலிப்பேன். அவளுடனான காதல் தோல்வியில் முடிந்தால் சரக்கடித்து விட்டு அவளைத் திட்டுவேன்” என்பது தான் பாடலின் ஒன்லைன். இதே இப்பாடலில் ஒரு பெண் காதலில் தோற்று அவளும் சரக்கடித்து விட்டு ஒரு ஆணைத் திட்டியிருந்தால் இப்பாடல் இதே அளவு வெற்றியடைந்திருக்குமா???&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் படத்தில் ரேவதி நிழல்கள் ரவி மீதான கோபத்தில் மது அருந்துவதை அதிர்ச்சியோடு பார்த்தவர்கள் தாம் நாம். &lt;இக்காட்சி வேறு வகையில் தவறு என்றாலும்&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டாஸ்மாக் வாழ்க :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மது இன்று பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், மகிழ்ச்சியைக் கொண்டாடவும் எப்படி இரண்டு முரண் பட்ட விடயங்களுக்கு வடிகாலாக இருக்கிறது என்பது புரியவில்லை. ஏற்கனவே மது விற்பனை 20000 கோடியைத் தொடப்போகும் தமிழ்நாட்டில் தற்போது வரும் படங்களில் மதுவும் ஒரு கதாபாத்திரமாகவே கிட்டத்தட்ட அத்துனை திரைப்படங்களிலும் உலா வருகிறது. தான் செய்யும் தவறுகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது மனம் அதைக் கொண்டாடவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அரைகுறை ஆங்கிலம் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் பேசுவது தான் உயர்வு என்று அனைவருமே நம்ப ஆரம்பித்து விட்ட காலம் இது. முறையான மொழிப் பழக்கம் இல்லாவிட்டால் ஒரு மொழியில் புலமை பெற முடியாது என்பது ஆதார விதி. நமக்கு முறையான மொழிப்பழக்கம் இல்லாத காரணத்தால் தான் ஆங்கிலத்தைப் பேசவும் முடியாமல், விடவும் முடியாமல் தடுமாற்றத்தோடே வாழ்ந்து வருகிறோம். இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. அந்த தடுமாற்றத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் கொலவெறி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாட்டுப்புற இசையின் நீர்த்த வடிவம் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக நம்மை மகிழ்வித்து வந்த நாட்டுப்புற இசையை அழித்து விட்டு...அதே இசையை மேற்கத்திய கருவிகளில் கேட்டு புளகாங்கிதம் அடைகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பன்னாட்டு நிறுவனத்தின் பணம் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடலை வெளியிட்டுள்ள சோனி மியூஸிக்கின் ஒரு கோடி ரூபாய் முதலீடு இந்தப் பாடலின் வெற்றிக்கு பின் உள்ளது. &lt; இத் தகவல் த.மு.எ.க.ச மேடையில் கேட்டது&gt;. இதை விட திறமையான கலைகள், கலைஞர்கள் வெளிவராமலே மடிந்து விடும் கொடுமையை ராஜீமுருகனின் விகடன் தொடரில் படித்திருப்பீர்கள். எனவே பணம் இருந்தால் குடித்து விட்டு உளருவதைக் கூட வெற்றியடைய வைக்க முடியும் என்பது தான் இப்பாடல் நமக்கு சொல்லும் செய்தி....&lt;br /&gt;&lt;br /&gt;கொலவெறி யின் வெற்றியின் வெற்றிக்குப் பின்னால் நம் சமூகத்தின் தோல்விதான் கண்ணுக்குத் தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6745356013838361742?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6745356013838361742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6745356013838361742' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6745356013838361742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6745356013838361742'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2011/12/why-this-kolaveri-di.html' title='Why this Kolaveri di ? - நமக்கு சொல்வது என்ன ???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vlMPO33orzE/TuxGtBhbuiI/AAAAAAAAALE/wHLaCO6lgmk/s72-c/Kolaveri.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8740934089108125902</id><published>2011-12-16T23:28:00.000-08:00</published><updated>2011-12-16T23:31:56.336-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி'/><title type='text'>போராளி திரைப்படமும்...சாதீயக் குறியீடுகளும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-RZ24NDSd0ag/TuxFVfHDeGI/AAAAAAAAAK4/mJ3VXH11OLs/s1600/Porali.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 242px;" src="http://3.bp.blogspot.com/-RZ24NDSd0ag/TuxFVfHDeGI/AAAAAAAAAK4/mJ3VXH11OLs/s400/Porali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686996664892749922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சமுத்திரகனிக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநராக ஆனீர்கள். படம் தோல்வி...பின்பு சசிக்குமாருடன் இணைந்து சுப்ரமணியபுரம் படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் வந்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு நீங்கள் இயக்கிய நாடோடிகள் அதிரி..புதிரி வெற்றி. சசியின் ஈசன் படத்திலும் காவல் துறை அதிகாரியாக நடித்தீர்கள். இன்று போராளி ஒரு நல்ல வெற்றி படம்...இது தான் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்த வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான கதை, அதற்கேற்ற அழகான திரைக்கதை, பக்க பலமாக நகைச்சுவை, சசி-கதிர்-தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி, இயல்பான நடிகர்கள் இவை தான் உங்கள் படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைய காரணங்கள் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். போராளி திரைப்படத்தில் மனநிலை குன்றியவர்களின் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட காதல் - நட்பு கலவை உங்களுக்கு மிக அழகாக வருகிறது. ரசிகர்களைத் திருப்தி படுத்தும் வசனங்கள் ஆகப் பெரிய எழுத்தாளர்களுக்குக் கூட கை வராத கலை. ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களுக்குக் கைதட்டல் வாங்குவது என்பது சாதாரண விடயம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை நலம்....&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு இருந்தும் ஏன் சாதியத்தைத் தூக்கிக் கொண்டே அலைகிறீர்கள் என்பது தான் புரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் தவறாமல் இடம் பெரும் முத்துராமலிங்கம் குறித்தான வசனங்கள்....இதை விட அதிகம் ஆபத்தானது போராளி படத்தில் அண்ணாச்சியின் சாதியைக் குறிக்க காமராஜர் படத்தையும், கிடை போடுவோர் சாதியைக் குறிக்க அம்பேத்கர் படத்தையும் காட்டியது. ஒரு வேளை தெரியாமல் தான் பிரேமில் கொண்டு வந்து விட்டீர்களோ என்று எண்ணினால் .... “உன் பின்னாடி ஒரு சாதின்னா..என் பின்னாடி ஒரு சாதி” என்று அண்ணாச்சி பேசுவதாக ஒரு வசனம், கிடை போடும் பெரியவர் சசியின் பெரியப்பா குறித்து வியந்து பேசும் வசனங்கள் என மிகத் தெளிவாகத் தான் திணித்துள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமராசரை நாடாராகவும், வ.உ.சி யை பிள்ளைமாராகவும், அண்ணாவை செங்குந்தராகவும், அவ்வளவு என் தியாகராஜ பாகவதரை விஸ்வகர்மாவாகவும் தூக்கிக் கொண்டு அலையும் சமூகம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் போன்ற திரை மொழி மிகச் சிறப்பாக கைவரும் இயக்குநர்கள் மக்களை அதில் இருந்து வெளியே இழுக்கா விட்டாலும் பரவாயில்லை..மீண்டும் உள்ளேயே தள்ளாமலாவது இருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிக்குமார் இலங்கைக்கு இந்த படத்தை வியாபாரம் செய்ய மாட்டோம் என்று சொன்ன போது ஏற்பட்ட மதிப்பு..இது போன்ற காரணங்களால் ஒரு மாற்று குறைகிறது என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ இன்றைய தமிழ் சமூகத்தில் சமத்துவம் நிலவும் இடங்களில் ஒன்றாக திரையரங்கங்கள் உள்ளன. உங்கள் மேலான திறமையால் அதன் கதையையும் முடித்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் மகன் போல அவ்வளவு விசம் இல்லாவிட்டாலும்..போராளி போன்ற ஒரு நல்ல படத்தில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம் விசம்தானே....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8740934089108125902?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8740934089108125902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8740934089108125902' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8740934089108125902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8740934089108125902'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2011/12/blog-post.html' title='போராளி திரைப்படமும்...சாதீயக் குறியீடுகளும்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-RZ24NDSd0ag/TuxFVfHDeGI/AAAAAAAAAK4/mJ3VXH11OLs/s72-c/Porali.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7534100183937640417</id><published>2011-05-14T06:15:00.000-07:00</published><updated>2011-05-14T06:54:08.804-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>அழகர்சாமியின் குதிரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-9tC8iiqCDw4/Tc6Jd9PHasI/AAAAAAAAAD0/rhkxjFQvoK0/s1600/Azhagarsamiyin-Kuthirai-reel-16.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-9tC8iiqCDw4/Tc6Jd9PHasI/AAAAAAAAAD0/rhkxjFQvoK0/s400/Azhagarsamiyin-Kuthirai-reel-16.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5606569733870021314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலேயே சொல்லி விடுகிறேன்.”அழகர்சாமியின் குதிரை” கதையை நாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான முயற்சி.இந்த அழகான முயற்சியை விமர்சித்து நார் நாராகக் கிழிப்பது எனது நோக்கமல்ல.படம் குறித்த எனது புரிதல்களின் பகிர்தல்களே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிலா கபடிக்குழு போலவே திருவிழாவோடு துவங்குகிறது படம்.தேனி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தின் தெய்வமாகிய அழகர்சாமியின் திருவிழாவை நடத்த முடியாமல் தவிக்கிறது ஊர்.”எப்படியாவது திருவிழாவை நடத்தி விடுங்கள்...அப்போது தான் ஊரில் மழை பெய்யும்” என்று ஊர் கோடாங்கி சாமி வந்து (வராமல்)சொல்லிவிட, ஊரும் பகீரத முயற்சி எடுக்கும் வேளையில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போகிறது.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அப்புக்குட்டியின் குதிரை ஊருக்கு வந்து சேர்கிறது. அதன் பின் திருவிழா நடந்ததா???அப்புக்குட்டிக்கு குதிரை கிடைத்ததா???மழை வந்ததா??? என்பதே இரண்டாம் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் பகுதி முழுதும் இழையோடும் இயல்பான நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவே இரண்டாம் பகுதியில் அந்த நகைச்சுவை இல்லாத போது ஜீரணிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;”படத்தின் காலகட்டத்தை 1982 என அமைத்தது”, ”பல இடங்களில் மூட நம்பிக்கையை சாடியுள்ளது”,கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும் நம் மனதில் பதிய வைத்தது” என சுசீந்திரன் படத்தில் பல விடயங்களை அநாயசமாக செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்துள்ள அத்துணை நடிகர்களும் குறிப்பிடத்தகுந்தவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்கர்சக்தியின் இயல்பான கதை, வசனம் படத்தின் மிகப் பெரிய பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனி ஈஸ்வர் தேனியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரைக்குட்டி பாடலில் இளையராஜாவின் குரல் அட்டகாசம். ஆனால் மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் வழக்கம் போலவே ஏமாற்றிவிட்டார்.”வெண்ணிலா கபடிக்குழு படத்தின் ”லேசா பறக்குது மனசு” என்ற பாடலுக்கு ஈடாக படத்தில் ஒரு பாடலும் இல்லை. இத்தனைக்கும் படத்தில் ஒரு தனி லவ் ட்ராக்கும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளை வரை மேலே மேலே போகும் படம், இடைவேளைக்குப் பிறகு கீழே, கீழே இறங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புக்குட்டியின் பெண் பார்க்கும் படலம் + காதல், குதிரை போய் கெட்டவர்களையெல்லாம் அழிப்பது என இரண்டாம் பாதியில் நாடகமாக்கமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, நாடகமாக்கலையும் தவிர்த்திருந்தால் தமிழ்சினிமாவின் மைல்கல் சினிமாக்களில் ஒன்றாக இருந்திருக்கும் அழகர்சாமியின் குதிரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7534100183937640417?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7534100183937640417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7534100183937640417' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7534100183937640417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7534100183937640417'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2011/05/blog-post.html' title='அழகர்சாமியின் குதிரை'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9tC8iiqCDw4/Tc6Jd9PHasI/AAAAAAAAAD0/rhkxjFQvoK0/s72-c/Azhagarsamiyin-Kuthirai-reel-16.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6854912456657591375</id><published>2010-08-18T00:16:00.000-07:00</published><updated>2010-08-18T00:48:21.049-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>உமாசங்கருக்கு ஆதரவாக....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ChRFz3Ks50k/TGuP_FtXonI/AAAAAAAAABI/W1HU67jrUHw/s1600/umashankar.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 218px;" src="http://1.bp.blogspot.com/_ChRFz3Ks50k/TGuP_FtXonI/AAAAAAAAABI/W1HU67jrUHw/s400/umashankar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5506653283417563762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமர்ந்து வினவு போன்ற சமூக தளங்களைப் படித்து விட்டு,அநியாயங்களுக்கு எதிராக பின்னூட்டங்கள் போடக் கூட பயந்து, முன் எச்சரிக்கையாக யாரோ எடுத்த திரைப்படங்களில் மொக்கையாகக் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் என் போன்ற ஆட்கள் மத்தியில் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் புரிகிறார் என்றால், உமாசங்கர் தான் உண்மையான கதாநாயகன்.&lt;br /&gt;&lt;br /&gt;உமாசங்கரை அசால்ட்டாகத் தூக்கி எறியலாம் என்று நினைத்த அரசாங்கம் கூட, அவருடைய நெஞ்சுரத்தையும், அவருக்கு இருக்கும் ஆதரவையும் பார்த்து விட்டு “நாங்கள் ஒன்றும் பெரிய நடவடிக்கைகள் எடுக்க வில்லை. வெறும் தற்காலிகப் பணிநீக்கம் தான்” என்று இறங்கி வந்து அறிக்கை விட்டிருப்பதே அவருக்குக் கிடைத்த வெற்றி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் ஓரளவிற்கு முன்னேறியிருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று என்னைப் பொறுத்த வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஆட்சி மாற்றமும் தான்.அப்போது தான் இந்த அரசாங்கம் செய்த தவறுகளை அடுத்த அரசாங்கம் செய்ய ஓரளவிற்காவது பயப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணற்ற இலவசத் திட்டங்களை அளித்திருந்தாலும் மின்வெட்டு, தொழிற்சுணக்கம், விலைவாசியேற்றம் என்று மக்களை எதிர்க்கட்சியை நோக்கித்தான் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் திமுக அரசு .கோவை, திருச்சி என எதிர்க்கட்சிக்குக் கூடும் கூட்ட்மே இதற்கு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் உமாசங்கர் போன்ற நேர்மையான, நெஞ்சுரமிக்க அதிகாரிகளைக் காவு வாங்கி எதிர்க்கட்சியை நோக்கி மக்களை வேகமாகத் தள்ளிவிடும் போக்கைக் கைவிட்டால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6854912456657591375?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6854912456657591375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6854912456657591375' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6854912456657591375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6854912456657591375'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/08/blog-post.html' title='உமாசங்கருக்கு ஆதரவாக....'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ChRFz3Ks50k/TGuP_FtXonI/AAAAAAAAABI/W1HU67jrUHw/s72-c/umashankar.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4116595670273209006</id><published>2010-07-26T01:08:00.000-07:00</published><updated>2010-07-26T01:46:43.231-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு</title><content type='html'>”வாழ்ந்து கெட்டவனின்&lt;br /&gt;பரம்பரை வீட்டை&lt;br /&gt;விலை முடிக்கும்போது&lt;br /&gt;உற்றுக்கேள்&lt;br /&gt;கொல்லையில்&lt;br /&gt;சன்னமாக எழும்&lt;br /&gt;பெண்களின் விசும்பலை”&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம் மேற்சொன்ன கவிதையை. இந்தக் கவிதையின் பின்புலத்தைக் கவிஞரின் வாயாலேயே கேட்கக் கூடிய பெரும்பாக்கியம் நேற்று எங்களுக்குக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் வலைப்பதிவர் குழுமமாகிய &lt;span style="font-weight:bold;"&gt;”சேர்தளம்”&lt;/span&gt; சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கவிஞர் மகுடேஸ்வரனுடன் திருப்பூர் பதிவர்கள் நேற்று உரையாடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மையில் ஓர் உரையாடல் அல்ல... அனுபவம்.... அந்த அனுபவத்திலிருந்து சில துளிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. கவிஞரின் தமிழ்ப்பற்றுக்குக் காரணம் அவர்தம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர். அந்த தமிழாசிரியர் வகுப்பறையில் எப்படிப் பாடம் எடுப்பார் என்பதை பள்ளிக்கூட சிறுவனின் குதூகலத்தோடு பகிர்ந்தார். இன்றும் தமிழை வாழவைக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தமிழாசிரியர்கள் தாம்.ஆனால் அவர்கள் (அனைவரும் அல்ல) கணித / அறிவியல் ஆசிரியர்களின் டியூசன் பற்றிய பொறாமையில் இருப்பது, நம் மொழியை செம்மொழி மாநாடு நடத்திக் காக்க வேண்டிய (!) நிலைக்குத் தள்ளியுள்ளது. (இதே ஆசிரியரிடம் படித்த மற்றொரு மாணவர் நம் பதிவர் முரளிகுமார் பத்மநாபன்)&lt;br /&gt;&lt;br /&gt;2. கவிஞர் எழுதிய கவிதைகள் 90 களில் கணையாழியில் வெளிவந்தது, முதல் தொகுப்பிற்கு சுஜாதாவிடம் முன்னுரை பெற்றது, அதற்குக் கிடைத்த பாலச்சந்தரின் பாராட்டு போன்றவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. கவிஞரின் சினிமாதொழில் குறித்தான எண்ணங்கள் மிகவும் யதார்த்தமானதாக, எளிதானதாக,இயல்பானதாக,கூர்ந்து நோக்கத் தக்க வகையில் இருந்த்து. யாருக்காவது சினிமாவில் நுழையும் எண்ணம் இருந்தால்,சிரமம் பார்க்காமல் கவிஞருடன் உரையாடிவிட்டுப் பின் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இது போக போனஸாக கோவையில் இருந்து வந்திருந்த திரு.செல்வேந்திரன் உடனான இலக்கிய உரையாடல்களும், பரிசல்காரனின் அவ்வப்போதைய டைமிங் கமெண்ட்டுகளும் சந்திப்பிற்கு இனிமை சேர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5. கவிஞருக்கு கிடைத்த இந்தியா டுடே பரிசான சன்னி - இரு சக்கர வாகனத்தை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஓட்டிக் கொண்டு வந்த கதையைச் சிரிக்க சிரிக்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இன்னும் ஜெயமோகன், சாரு, உலகமயமாக்கல், விவசாயம், திருப்பூர் தொழில், அரசியல் பார்வை என பலதரப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலான், பரிசல்காரன், செல்வேந்திரன்,சிவகுமார் (வானகமே இளவெயிலே),  சக்திவேல், பூந்தளிர் சாமிநாதன், முரளிகுமார் பத்மநாபன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமன், ரவிக்குமார் (குறும்பட இயக்குநர்) மற்றும் அவரது நண்பர், சொல்லரசன், ஆதவா, சௌந்தர் (வலைத்தள வாசகர்).  &lt;br /&gt;&lt;br /&gt;”சேர்தளம்” அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4116595670273209006?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4116595670273209006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4116595670273209006' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4116595670273209006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4116595670273209006'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/07/blog-post_26.html' title='கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-1580515769319717381</id><published>2010-07-17T00:21:00.000-07:00</published><updated>2010-07-17T01:22:24.720-07:00</updated><title type='text'>எந்திரன் - நாங்க ரெடி?நீங்க ரெடியா?</title><content type='html'>முதலில் ஒரு கொசுவத்தி....&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;2007 சூன் மாதம் ”சிவாஜி” திரைக்கு வந்தது. அதற்கு முன்பே அந்தத் திரைப்படத்திற்குத்தான் எத்துணை வழிகளில் விளம்பரங்கள். &lt;br /&gt;படத்தின் முன்னோட்டம் CNN-IBN இணையதளத்தில் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;அத்துணை வட இந்திய மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சிகளும் சிவாஜியைப் பற்றியே பேசின.சன் மட்டும் அடக்கி வாசித்ததாக ஞாபகம்.&lt;br /&gt;பிரிண்ட் மீடியாவும் நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா? என்று சிவாஜியை மக்களிடம் கொண்டு சேர்த்தன.ஆனந்தவிகடன் சிவாஜிக்கென்றே வாராவாரம் தனிப் பக்கத்தை ஒதுக்கிக் கொடுத்தது.&lt;br /&gt;வலையுலகில் கூட “சிவாஜி” படத்தைப் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதாவிட்டால் எங்கே கூகுள் நம் பிளாக்கரைத் தடை செய்து விடுமோ என்ற பயம் நிலவியது போல் தெரிந்தது.&lt;br /&gt;ஆக மக்கள் மனதில் சிவாஜியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விலை :&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே சிவாஜி படத்தைப் பார்க்கவில்லை என்றால் நம்மையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்று பயந்து, முன்பதிவு ஆரம்பித்த நாளில் வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5.00 மணிஅளவில் பல் கூட விலக்காமல் சுமார் 30 வது ஆளாக வரிசையில் நின்றேன். கஷ்டப்பட்டு டிக்கெட்டை வாங்கலாம் என்று பார்த்தால் அடுத்த செவ்வாய் கிழமைக்குத்தான் டிக்கெட் உள்ளது என்றார்கள். நானும் சரி “நமக்கு இன்னும் பயிற்சி போதவில்லையோ?” என்று நினைத்து செவ்வாய்க்கிழமை டிக்கெட்டை வாங்கினேன்.&lt;br /&gt;ஆனால் அன்று மாலை நண்பர்களிடமிருந்து போன்,”அதே திரையரங்கில் ரிலீஸ் அன்றே இரவுக்காட்சி டிக்கெட் 300.00 ரூபாய். வாங்கியாச்சு. வந்துரு” என்று. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில நண்பர்கள் பெருமையாக ”நாங்கள் 1000.00 ரூபாய் கொடுத்து சிவாஜி டிக்கெட் வாங்கினோம்,எங்களுக்கு எதாவது அவார்டு தருவார்களா?” என்ற தொனியில் கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அனைவரும் 300.00 / 500.00 / 1000.00 என்று டிக்கெட் வாங்கி ரஜினிகாந்த் கருப்புப் பணத்தை ஒழிப்பதைப் பார்த்ததைக் ”கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டில்” சேர்த்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொசுவத்தி முடிந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இனி...&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் பாடல்கள் ஜீலை 31 ரிலீஸ். படம் ஆகஸ்டு 3 வது வாரம் ரிலீஸ். படத்தினை மார்க்கெட் செய்யப் போவது சன் டி.வி.3000 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இப்பவே எந்திரன் காய்ச்சல் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது.பேசாமல் எந்திரன் கேப்சனை பின்வருமாறு போடலாம் - &lt;br /&gt;&lt;br /&gt;”கொள்ளையடிக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?” &lt;br /&gt;&lt;br /&gt;மினி கொள்ளை:&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் விஜய் அவர்களின் வேலாயுதம் படத்துவக்க விழா டி-சர்ட் விலை 999.00 ரூபாயாம். திருப்பூரில் நல்லா செஞ்சாலே ஒரு டி-சர்ட்டின் தயாரிப்பு செலவு 200.00க்கு மேலே போகாது. ஒரு வேளை தங்கத்துல செஞ்சாங்களோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மீடியாவும் பெரிதுபடுத்தாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் சினிமாவிலேயே நீடித்தால் நா.கதிர்வேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும், அரசியலுக்கு வரலாமா என்று யோசித்தால் ப.திருமாவேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும் போட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஆனந்த விகடனையே குற்றம் சொல்லக் காரணம், அது நமக்குப் பிடித்தாற்போல் மாறாதா? என்ற ஆசையினால் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-1580515769319717381?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/1580515769319717381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=1580515769319717381' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/1580515769319717381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/1580515769319717381'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/07/blog-post.html' title='எந்திரன் - நாங்க ரெடி?நீங்க ரெடியா?'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7090116215455855077</id><published>2010-06-21T00:56:00.003-07:00</published><updated>2010-06-21T01:28:43.590-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>ராவணன் - படத்தின் அரசியல்</title><content type='html'>மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ராவணன் திரைப்படத்தின் இசை,ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,கலை, படமாக்கப்பட்டிருக்கும் இடம் போன்றவைகள் பற்றியும், கதை....(மல்லிச்சூ...அப்படி ஒன்றே விளம்பரத்தில் காணப்பட வில்லை)திரைக்கதை, வசனம் போன்றவைகள் பற்றியும் நிறைய வந்துவிட்டதால் அதன் அரசியல் குறித்து மட்டும் இங்கு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம் மௌனராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், அலைபாயுதே என்று எடுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தேசிய நீரோட்டத்தில் கலந்து இந்திய / உலக சந்தைகளுக்காகவும் சேர்த்து எடுக்கப்பட்ட ரோஜா, குரு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் தான் உற்று நோக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்துவைக் கதாநாயகனாகவும் காட்டி மதசார்பின்மையைப்(!) போதிக்கத் துவங்கியதில் இருந்து தொடர்கிறது மணியின் அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு படத்தில் அம்பானியைக் கதாநாயகனாக்கி நம்முன் உலவவிட்டதற்கு சம்பளம் பிக் பிட்சர்ஸின் ராவணன்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”அமுதா” வயதொத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து காட்சி அமைத்து நம்மிடையே சமாதானம் குறித்த வகுப்பும் எடுத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராவணன் திரைப்படத்தில், ராவணனைக் கதாநாயகனாக்கி, ராமனை வில்லனாக்கி, எம்.ஆர் ராதா, ஆர்.எஸ் மனோகருக்குப் பின்பு புரட்சிகலைஞராகி இருப்பார் நம் மணிரத்னம் என்று பார்த்தால்....&lt;br /&gt;&lt;br /&gt;ராவணன் நல்லவனாகவே இருந்தாலும், அவன் அடுத்தவன் மனைவியைப் பார்த்தவுடன், அவள் சற்று வெள்ளையாக இருந்தவுடன் அவள் மீது காதல் வயப்படும் பலவீனன் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டிய அளவிற்கு,ராவணன் நியாயமான விடயங்களுக்குத் தான் போராடுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்ட மணிக்கு தெரியாது என்றால் அதை நம்பத் தயாரில்லை.வெறும் மேட்டுக்குடி என்ற வார்த்தையை மட்டும் வைத்து ஒரு புரட்சியாளன் கதையை சொல்ல முடியும் என்று மணி நம்பியிருப்பதையும் நம்மால் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் என்னதான் மனைவி மீது சந்தேகப்பட்டாலும், அது ராவணனைப் பிடிக்க மேற்கொள்ளும் ராஜ தந்திரம் என்பதையும் மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமில்லாமல், ராமபிரான் (கடவுள்) மீது வைக்கப்படும் விமர்சனமான மனைவியைச் சந்தேகப்படல் என்ற விடயத்தைக் கூட “சீதையும் மையல் கொள்வாள்” என்று மைல்டாகக் காட்டி ராம பக்தர்களையும் சந்தோசப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் இந்த அரசியல்களுக்காகவும், தமிழில் மணிரத்னம் என்ற அறிவு ஜீவி பிராண்டிற்காகவும் நாம் கொடுக்கப்போகும் விலை சுமார் 120 முதல் 250 ஓவாக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க தமிழ்சினிமா..........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7090116215455855077?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7090116215455855077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7090116215455855077' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7090116215455855077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7090116215455855077'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/06/blog-post_21.html' title='ராவணன் - படத்தின் அரசியல்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8872804472054458218</id><published>2010-06-14T23:51:00.000-07:00</published><updated>2010-06-15T00:33:13.003-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு'/><title type='text'>செம்மொழி மாநாடு - ஏன் புறக்கணிக்கக் கூடாது ?</title><content type='html'>உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் சூன் 23 தொடங்கி சூன் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதில் கணிணித் தமிழ் சார்பில் அமைக்கப்படும் அரங்கில் கலந்து கொள்ளலாம் என்று என் பெயரினைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கச் சொல்லி சில நண்பர்கள் மின்னஞ்சல்களிலும், வலைப்பதிவுகளிலும் கோரிக்கை விடுத்து விவாதம் செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகம் சார்பில் ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று என் பார்வையிலிருந்து எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலையுலகம் ஆரம்பிக்கப்பட்டு 6 முதல் 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் இது பரவலாகப் பலரைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன் ”பிரபல”&lt;br /&gt;என்ற வார்த்தை குறித்த சர்ச்சை வெளியான போது மூத்த வலைப்பதிவாளர் ஒருவர் கூறியிருந்த கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது. &lt;span style="font-weight:bold;"&gt;“இந்த தமிழ் வலையுலகில் மொத்தம் 4000 பேர் தேறினாலே பெரிய விடயம்”.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்...அது உண்மைதான் என்பது “பிரபல” பதிவுகளுக்கு வரும் ஹிட்சுகளை வைத்துச் சொல்லிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தமிழ் ஊடகங்களின் நிலையையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகச் சிறந்தது என்று சொல்லப்படும் ஊடகம் கூட தமிழகத்தின் செல்லக்குரல் அல்கா அஜித்தா? இல்லை ரோஷனா? என்று மக்களைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டுவரும் இச்சூழலில் மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஊடகம் இந்த வலையுலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பத்தாண்டுகளில் இணையம் இன்னும் பரவலாக்கப்பட்டு வீடு தோறும் இருக்கப் போகும் சூழ்நிலையில், மக்களுக்கு இப்போதே வலையுலகம் குறித்த அறிமுகம் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க அரசு நடத்தப் போகும் இந்த மாநாடு போன்றதொரு மாநாட்டை வேறெந்த வகையிலும் நாம் (பதிவர்கள்) நடத்தி விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கொள்கைகளோ / இயக்கமோ / கட்சியோ / நிறுவனமோ வளர வேண்டுமென்றால் பொதுஜனத்தொடர்பு மிகவும் அவசியம். இம்மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் அத்தகைய மிகப்பெரிய பொதுஜனத் தொடர்பைப் புறக்கணிக்கிறோம். மாநாட்டிற்கு வரப்போகும் ஆட்சியாளர்கள் முதல் அடி மட்டத் தொண்டன் வரை நம் வலையுலகம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் பங்கு பெறுவோம். வலையுலகில் நிறைந்து கிடக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய, ஈழ, மாவோயிஸ, திராவிட, ஆன்மிக, பெண்ணிய, விமர்சன, இலக்கிய, மோதலிய, சர்ச்சைகளிய எழுத்துக்கள் அனைத்தையும் பொதுஜனத்திடமும் கொண்டு போய் சேர்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8872804472054458218?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8872804472054458218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8872804472054458218' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8872804472054458218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8872804472054458218'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/06/blog-post.html' title='செம்மொழி மாநாடு - ஏன் புறக்கணிக்கக் கூடாது ?'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3831908434482136008</id><published>2010-03-16T23:03:00.000-07:00</published><updated>2010-03-16T23:05:49.033-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>நித்யா(னந்தா) அவார்ட்ஸ்...</title><content type='html'>இது வரை அருளாசிகள் வழங்கியது போதும்...இனி அவார்டுகள் வழங்கலாம் என்று நித்யானந்தா முடிவு செய்து குப்புறப் படுத்து யோசித்துக் கொண்டிருந்ததையும் நம் பத்திரிக்கைகள் சுட்டு விட்டன. அவையிவை.( அவார்ட் கொடுத்தாலே சுஜாதான்னு நினைப்பு...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த நடிகை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஞ்சிதா (நான் சேவை தானே செஞ்சேன் என்று அப்பாவியாய்க் கேட்டதால்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெனின் (துல்லியமாகப் படம் பிடித்ததால்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த பிண்ணனி இசை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன் இணைய வீடியோ( நாக்டுதனா.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த பல்டி பத்திரிக்கை:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;குமுதம் (அப்போ : கதவைத் திற காற்று வரட்டும், இப்போ : சரசம்..சல்லாபம்...சாமியார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த P.R.O&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாரு நிவேதிதா (வசனம் தேவையில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த கார்ட்டூன்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வினவு கார்ட்டூன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த துணிதுவைப்பவர்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிளாக்கர்கள் (தொடர்ந்து கும்முவதால்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த சமாளிப்பு :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே சிறந்த கொடுமை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்னும் அந்த வீடியோவ பாக்கல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத்திலேயே ரொமப நல்லவய்ங்க:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட பக்தர்கள். அவரு என்ன சொன்னாலும் நம்புறாங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3831908434482136008?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3831908434482136008/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3831908434482136008' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3831908434482136008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3831908434482136008'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/03/blog-post_16.html' title='நித்யா(னந்தா) அவார்ட்ஸ்...'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4058638913732165316</id><published>2010-03-11T00:47:00.000-08:00</published><updated>2010-03-11T01:11:12.846-08:00</updated><title type='text'>ஆனந்த விகடனும்....சூப்பர் சாமியார் கட்டுரையும்</title><content type='html'>நித்யானந்த சுவாமிகளின் ஒழுக்கக் கேட்டைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு பறை அறிவித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியே தீருவோம் என்ற முடிவை சனநாயகத்தின் நான்காவது தூண்களான நக்கீரன், குமுதம் குழும இதழ்கள் எடுத்திருப்பதைப் பார்த்த ஆனந்த விகடன் குழுமமும் தன் பங்காக  ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையை எழுதியிருப்பது பா.திருமாவேலன். ஆனந்த விகடனில் அரசியல் , சமூக கட்டுரைகள் என்றாலே அது பெரும்பாலும் இவருடையதாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரும் வழக்கம் போல் அனைத்து சாமியார்களைப் பற்றியும் கண்டது, கேட்டது, படித்தது, அறிந்தது, அறியாதது எல்லாவற்றையும் வைத்து ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் படங்களும் போட்டாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சரியம்....எல்லோர் பேரும் உள்ள அந்த கட்டுரையில் ஜக்கி வாசுதேவ் பேர் மட்டும் இல்லை. எங்கே அவர் பெயர் என்று பார்த்தால் அவர் வழக்கம் போல் சுபா தயவில் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் திருமாவேலனுக்கு ஜக்கி பற்றிய தகவல்கள் மட்டும் கிடைக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;குமுதமும் இப்படித்தானே நித்யானந்தனின் அருளுரைகளை வழங்கி, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. இப்போது அவரை வைத்து வேறு பிஸினஸ் ஆரம்பித்து விட்டது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி.. முற்போக்கு வேடம் ஏற்றாயிற்று சரி. அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டாமா? ஜக்கி மீது எந்தப் புகாரும் வரவில்லையே என்று சொல்லலாம்.  (புகார்கள் ஏற்கனவே வலையுலகில் கிடைக்கின்ற‌ன) ஆனால் புகார் வந்த பிறகு மட்டும் என்ன செய்கிறீர்கள் ? குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பு. ம்ஹூம்...சரி இனி எந்த சாமியாரின் கட்டுரைகளையும் வெளியிட மாட்டோம் என்ற அறிவிப்பு. ம்ஹூம்..... அதை வைத்தும் வியாபாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து உங்கள் தலையங்கங்கள் ஆட்சியாளர்களை நோக்கிக் கை காட்டுவதோடு மட்டுமில்லாமல் உங்களை நோக்கியும் கை காட்டட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;செய்த தவறை ஒத்துக்கொண்டு, இனி அடுத்த தவறு செய்யாமல் இருப்பதே உங்களை 15.00 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் பேருதவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4058638913732165316?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4058638913732165316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4058638913732165316' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4058638913732165316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4058638913732165316'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/03/blog-post.html' title='ஆனந்த விகடனும்....சூப்பர் சாமியார் கட்டுரையும்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-520830862269210010</id><published>2010-01-11T21:07:00.000-08:00</published><updated>2010-01-11T21:38:37.265-08:00</updated><title type='text'>கமலும், வைணவமும்....</title><content type='html'>கமல் கஷ்டப்பட்டுத் தன்னை நாத்திகர் என்று சொல்லி வந்தாலும் இஷ்டப்பட்டு சில விஷ(ய)ங்களைத் தன் படங்களின் மூலம் சொல்லி வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவாக அவரது பின்வரும் 4 படங்களைக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதலா..காத‌லா..&lt;/strong&gt;&lt;br /&gt;க‌ம‌ல் த‌மிழ்க்க‌ட‌வுளாம் முருக‌னின் வேட‌ம‌ணிந்து ந‌டித்த‌ காம‌டி.கம‌ல் கிருஷ்ணராக வேடமேற்று, செளந்தர்யா பாமாவாகவும்,ரம்பா ருக்மணியாகவும் நடித்திருந்தாலும் அக்காட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் கதை விவாத‌த்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகள் நாத்திகரான கமல் முருகனை வைத்துக் காமடி செய்தால் தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று கமலை ஏமாற்றிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பே சிவம்...&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த கதையின் நாயகன் கம்யூனிசம் பேசும் நாத்திகனாக இருந்த போதிலும், வில்லன் "ஓம் நமோ நாராயாணாய" என்று சொல்லாமல்,"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லும் சிவபக்தராய் அமைந்தது நாத்திகரான கமலே எதிர்பாராத விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பம்மல் கே சம்பந்தம்...&lt;/strong&gt;&lt;br /&gt;ராயபுரம் சிவன் போல் நடிக்கத் தெரிந்த கமல் என்ற நாத்திகருக்கு ராயபுரம் விஷ்ணு போல் நடிக்கத் தெரியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தசாவதாரம்...&lt;/strong&gt;&lt;br /&gt;இப் படத்திற்கு வசனம் தேவையில்லை :-))&lt;br /&gt;&lt;br /&gt;இது போக வால் துண்டாக "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் தீவிரவாதியாக இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்க, கணிப்பொறி மேதையாக வரும் மாணவன் இந்து மதத்தைச் சார்ந்தவனாக‌ இருப்பது கமல் ஒரு மிகத் தெளிவான &lt;strong&gt;"நாத்திகர்"&lt;/strong&gt; என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இதைய‌ல்லாம் பார்க்காதீர்க‌ள்...சினிமாவை சினிமாவாக‌ப் பாருங்க‌ள்" என்று கூறும் ந‌ண்ப‌ர்க‌ளுக்குப் ப‌தில்...&lt;br /&gt;&lt;br /&gt;"சினிமாவை சினிமாவாக‌ எடுங்க‌ள்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-520830862269210010?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/520830862269210010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=520830862269210010' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/520830862269210010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/520830862269210010'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2010/01/blog-post.html' title='கமலும், வைணவமும்....'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-5568596512667397555</id><published>2009-11-05T06:56:00.000-08:00</published><updated>2009-11-05T07:01:40.517-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமணம்'/><title type='text'>எனக்கு கல்யாணம் .......எனக்கு கல்யாணம்</title><content type='html'>அப்பாவும், அம்மாவும் திடீரென்று பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு கடந்த ஜனவரி மாதம் திடு திப்பென்று வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கோம்....நீ என்ன சொல்ற‌"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவே என்ன அவசரம் ? இன்னும் 2 வருஷம் போட்டுமே". (இப்பவே வயது 35 மாதிரி தெரியுது. இன்னும் 2 வருஷம் போனா கிழிஞ்சுறும்)&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் எங்களுக்கு எப்ப பண்ணனும்னு தெரியும். ஆனா நாங்க பேச வந்தது வேற..." என்று இழுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நீயா...நானா ரேஞ்சுக்கு காதல் திருமணத்தைப் பற்றிப் பேசிய விளைவுதான் அது என்பது புரிய எனக்கு சற்று நேரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;"நானெல்லாம் எந்தப் பொண்ணையும் லவ் பண்ணல‌. (பொண்ணுங்கள்லாம் ரொம்பத் தெளிவா இருக்காங்க). நீங்களே பாருங்க".&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆரம்பித்தது. அப்பாவும் அம்மாவும் ஓவர்டைம் வேலை எல்லாம் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பையன் நல்லாத்தான் இருக்காரு...ஆனா குண்டா இருக்காரு"&lt;br /&gt;&lt;br /&gt;"பையன் இஞ்ஜினியரிங்னு சொன்னாங்க....ஆனா ஏதோ தலகாணி கம்பெனில வேலை செய்றாறு.... நான் படிச்சது டெக்ஸ்டைல்ங்க" &lt;br /&gt;&lt;br /&gt;"பையனுக்கு என்ன வருமானம் வரும்?............. பூ இவ்வளவுதானா ஏப்பா நீ பேசாம பாரின் கீரின் ட்ரை பண்லாம்ல. &lt;br /&gt;&lt;br /&gt;"பையனுக்கு ஆயல்யம் நட்சத்திரமா? ஐயையோ !!!!!!!!!!!!! பெண்ணின் அம்மா அலறிய போது கோபம் வந்தது. தன் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில்தான் அலறினார்கள் என்று தெரிய வந்த போது சிரிப்பு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்பா அவன் போட்டாவையும், ஃபுல் டீடைல்ஸையும் முதல்ல அனுப்புங்க. பாத்துட்டு புடிச்சிருந்தா மட்டும் அவன வந்து பாக்கச் சொல்லுங்க. சும்மா இப்படி வந்து ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கே கோபம் வந்திடும்" தம்பி அப்பாவை அரட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவையும் மீறி  கோவில்பட்டியில் ஒரு கோவிலில் வைத்து பார்க்கப்பட்ட கெளரி என்னைப் பார்த்து பிடிச்சுருக்கு என்று சொல்லியவாறே 5 ஸ்டார் சாக்லேட்டை நீட்டியது இன்று திருமணம் வரை வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் (கோவில்பட்டி அருகில்) எனக்குத் திருமணம் நடக்க உள்ளது. அது மட்டுமின்றி நவம்பர் 29 ஆம் தேதி சேலத்தில் ரிசப்ஷனும் நடக்க உள்ளது. இரு நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து எங்களை வாழ்த்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை இணைக்கப் பட்டுள்ளது.அனைவரும் வருக.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoDpiYgeI/AAAAAAAAAAM/ztZXWs2uW3g/s1600-h/IMAGE0001.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 335px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoDpiYgeI/AAAAAAAAAAM/ztZXWs2uW3g/s400/IMAGE0001.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400634052557963746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoQxJaTuI/AAAAAAAAAAU/Oy4H1Qs1Ndg/s1600-h/IMAGE0004.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 303px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoQxJaTuI/AAAAAAAAAAU/Oy4H1Qs1Ndg/s400/IMAGE0004.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400634277939007202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoZrVpA-I/AAAAAAAAAAc/YSbpIzscpBY/s1600-h/IMAGE0005.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 328px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoZrVpA-I/AAAAAAAAAAc/YSbpIzscpBY/s400/IMAGE0005.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400634430998512610" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-5568596512667397555?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/5568596512667397555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=5568596512667397555' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5568596512667397555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5568596512667397555'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/11/blog-post.html' title='எனக்கு கல்யாணம் .......எனக்கு கல்யாணம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ChRFz3Ks50k/SvLoDpiYgeI/AAAAAAAAAAM/ztZXWs2uW3g/s72-c/IMAGE0001.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7968582439200237935</id><published>2009-05-30T09:14:00.000-07:00</published><updated>2009-05-30T09:59:10.588-07:00</updated><title type='text'>ஏஞ்சல்ஸ் அண்ட் டீமென்ஸ்</title><content type='html'>ஆனந்த தாண்டவம், சர்வம், சிவபுரம் என்று வாராவாரம் ஏதோ கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்  போல் பலிகடா ஆகிக்கொண்டே வந்ததற்கு சற்றே ஆறுதலாக அமைந்தது ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே "தி டாவின்ஸி கோட்" படத்தை 3 முறை தமிழில் பார்த்தும் முழுதாகப் புரியாவிட்டாலும் :-(‍‍ அந்தப் படம் தந்த பிரமிப்பு அகலாததால் தோரணையில் இருந்து தப்பித்து இப்படத்திற்குப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் டான் பிரவுன் எழுதிய நாவல் தான். &lt;br /&gt;&lt;br /&gt;வாடிகன் சிட்டியில் போப் திடீரென இறந்து போவதில் ஆரம்பிக்கிறது கதை. போப்பிற்கு அடுத்த இடத்தில் உள்ள 4 பாதிரியார்களும் கடத்தப் படுகிறார்கள். இதோடு சேர்த்து உலகத்தின் ஆரம்ப உயிர்த்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கிடைத்த சக்தி வாய்ந்த வஸ்துவும்  (ஆண்டிமெட்டர்) காணாமல் போகிறது.இவ்விரண்டையும் &lt;br /&gt;செய்தது இலுமினாட்டி என்ற வாடிகன் சர்ச்சிற்கு எதிரான இயக்கத்தினர்தாம் என்பதும், அவர்கள் நோக்கம் வாடிகன் சர்ச் பாதிரியார்களையும் வாடிகன் நகரையும் அழிப்பது தான் என்பதும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் பேராசிரியர் லாங்டனின் உதவியை நாடுகிறது போலீஸ். லேங்டனும், போலீஸும் சேர்ந்து பாதிரியார்களிக் காப்பாற்றினார்களா? வாடிகன் சிட்டி காப்பாற்றப்பட்டதா? உண்மையிலேயே இதைச் செய்தது இலுமினாட்டி &lt;br /&gt;அமைப்பினர் தானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம ஆத்திகம் / நாத்திகம் / விஞ்ஞானம் எல்லாம் கலந்து கட்டி பரபரவென்று விடை சொல்லியிருக்கிறார்கள் படத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;லேங்டனாக டாம் ஹேங்க்ஸ். ஹீரோ என்றால் ஆய் ஊய் என்று கத்தி காதைப் பஞ்சராக்குவது / பஞ்ச் டயலாக் பேசுவது&lt;br /&gt;மினிமம் 3 ஹீரோயின்கள் உடன் நடிப்பது போன்ற மிகச் சிறந்த விஷயங்களையெல்லாம் செய்யாமல் அமைதியாக, அறிவுப் பூர்வமாக, அழகாக நடித்து நம் ஹீரோக்களையெல்லாம் கேலி செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோன் ஹாவர்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஞ்ஞானமா ? ஆத்திகமா என்ற கேள்வி வரும் போதெல்லாம் மனுசன் புகுந்து விளையாடியுள்ளார். கடவுள் பற்றிய கருத்துக்கள் வரும் போதெல்லாம் பெரியார் புத்தகம் படிப்பது போல் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் எல்லாமே நன்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தி டாவின்ஸி கோட் ‍ தொடர்ச்சி  என்பதற்காக அப்படியே அதே பார்முலாவையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா?&lt;br /&gt;அதை விட இந்தப் படம் கொஞ்சம் இலுவை அதிகம். தாக்கம் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டில் உள்ள‌ மதங்களில் கூட எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளது. அதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்ல முடியும். ஆனால் நமக்கு கிடைத்த பாக்கியமோ " ராஜாதிராஜா / சர்வம் என்ற அளவில் தான் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7968582439200237935?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7968582439200237935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7968582439200237935' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7968582439200237935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7968582439200237935'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/05/blog-post.html' title='ஏஞ்சல்ஸ் அண்ட் டீமென்ஸ்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-9023295964603929470</id><published>2009-04-11T05:04:00.000-07:00</published><updated>2009-04-11T05:36:50.281-07:00</updated><title type='text'>ஆனந்த தாண்டவம் - ‍ சுஜாதாவிற்கு அவமரியாதை</title><content type='html'>ஏற்கனவே பிரியா, கரையெல்லாம்செண்பகப்பூ, விக்ரம் என்றெல்லாம் எடுத்து சுஜாதாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட தமிழ்சினிமா இன்று ஆனந்த தாண்டவம் எடுத்து நம்முடைய வயிற்றெரிச்சலையும் சேர்த்துக் கொட்டிக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதை தெரிய வேண்டுமானால் தயவு செய்து சிரமம் பார்க்காமல் "பிரிவோம் சந்திப்போம்" நாவலைப் படித்து விடுங்கள். ஏனெனில் படத்தைப் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியாலேயே கணேஷ் கதாபாத்திரத்தை நடிக்க முடியாமல் பில்லா / ரங்கா ரேஞ்சிற்கு நடித்திருந்த‌ போது....பாவம் சித்தார்த் மட்டும் ரகு பாத்திரத்தை நடித்து விட முடியுமா என்ன? ஆனால் அவர் எதற்காக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு &lt;br /&gt;நடித்தார் என்று நேற்று இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நடிப்பா ? அப்படின்னா என்னப்பா ? எதுனா ரேசன் கடைல கலைஞர் படம் போட்டுக் கொடுக்கிறாங்களா என்று கேட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதாவாக தமன்னா. கரையெல்லால் செண்பகப்பூ படத்தில் பொன்னியாக வந்து சிரிப்ரியா வந்து எப்படி கொடுமைப் படுத்தினாரோ அதைவிட ஜாஸ்தியாக கொடுமைப் படுத்தியிருக்கிறார் தமன்னா. &lt;br /&gt;&lt;br /&gt;ரத்னாவாக ருக்மணி. ரகுவின் காதலைக் காதலித்து ரகுவையே கைப்பிடிக்கும் பாத்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;சார்லி, கிட்டி, கிருஷ்னா என்று நிறைய பேர் இருந்தும் யாரும் நம்மைக் காப்பாற்றவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா வசனம் மட்டும் எழுதிய படங்களிலேயே இதை விட சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். சுஜாதாவின் இக்கதையைத் தேர்வு செய்ததே சரியான சொதப்பல். நாவலின் எந்த பாத்திரத்தின் குணநலன்களும் நம்மை பாதிக்காத நிலையில் சுஜாதா தன் எழுத்தின் மூலம் மட்டுமே நம்மைப் பாதிப்படைய செய்யும் திறமை படைத்தவர். அதைக் காட்சிப்படுத்தும் போது வேறு எப்படி இருக்கும்? இபப்படித்தான் இருக்கும். அதிலும் மதுமிதாவின் குழந்தைத்தனத்தைக் காட்டுகிறேன் என்று சித்தார்த்தின் காதில் வந்து ஓ என்று கத்திய போதுநமக்கும் ஓ என்று அழ வேண்டும் என்பது போல் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி.பிரகாஷ் இப்படியே இசை அமைத்துக் கொண்டு போனால் இவர் இசைக்காகவே படம் ஓடாமல் போய்விடும் அபாயம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் காந்திகிருஷ்னா இப்படம் எடுத்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடம் நம்பிக்கை விதையைத் தூவியுள்ளார்.  (இப்படியெல்லாம் எடுக்கிறாங்க...இதைவிட நல்லா நாம எடுக்கமாட்டோமா? )&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி சுஜாதாவின் கதையை எடுத்தவர்களையும், இனி எடுக்கப்போகிறவர்களயும், அதையும் விடாமல் பார்க்கப் போகும் நம்மையும்&lt;br /&gt;&lt;br /&gt; "பசித்த புலி தின்னட்டும்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-9023295964603929470?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/9023295964603929470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=9023295964603929470' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/9023295964603929470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/9023295964603929470'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/04/blog-post_11.html' title='ஆனந்த தாண்டவம் - ‍ சுஜாதாவிற்கு அவமரியாதை'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-5849239674250169509</id><published>2009-04-09T07:04:00.000-07:00</published><updated>2009-04-09T07:52:06.256-07:00</updated><title type='text'>திருப்பூரும்..கம்யூனிசமும்... பின்னே நானும்</title><content type='html'>திருப்பூர்..... எனக்குச் செவிட்டில் அடித்து தொழில் சொல்லிக் கொடுத்த ஊர். அடி என்றால் சாதாரண அடி இல்லை. இனி இந்த திவ்ய தேசத்தின் பக்கமே வரக்கூடாது என்று மனதில் சொல்லிக்கொண்டு (அழுது கொண்டு) சேலம் நோக்கிப் பெட்டியைக் கட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் மெர்ச்சன்டைசராகப் பணியாற்றிவந்தேன். &lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேலையில்லாத வேலை. அதாவது நாமாக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. ஆனால் எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் நாம் தான் பொறுப்பு. துணி வரவில்லையென்றாலும்...துணைபொருட்கள் (அசெசரீஸ்) வரவில்லையென்றாலும்....உற்பத்தி வரவில்லையென்றாலும்....தரம் வரவில்லை என்றாலும்...எது வரவில்லை என்றாலும் நாம் தான் பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பு சரியில்லை என்றாலும் கூட "சரி ஊசி போட்டுட்டு வந்துடுவல்ல" என்று மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள். &lt;br /&gt;ஒரு நாளைக்குக் கட்டாயமாக 13 மணி நேர வேலை. சில நாட்களில் (மாதத்திற்கு 25 நாட்கள் மட்டும் ) 17 மணி நேர வேலை.&lt;br /&gt;ஞாயிறன்றும் விடுமுறை கிடையாது. கேட்டால் ஏம்ப்பா எதாவது விஷேசமா? என்று கேட்பார்கள். மீறிக் கேட்டாலும் "நானெல்லாம் என் கல்யாணத்திற்கே அரை நாள் தான் லீவு போட்டேன்" என்று கதையெல்லாம் வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஆறுதல் திரைப்படங்கள் தாம். அப்போது வெறித்தனமாகப் பார்த்த மது / மரணமனிதன் / கஜேந்திரா / ஆதி / மெர்க்குரிப்பூக்கள் போன்ற காவியங்களும் அதற்கு நண்பர்களோடு அடித்த கமெண்ட்டுகளும் மறக்க முடியாதவை. &lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் மெர்க்குரிப்பூக்கள் படத்தை ஜோதி திரையரங்கில் (இது திருப்பூர் ஜோதி ) பார்க்க ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் என்னோடு வந்த முத்து,  "அண்ணே போலாம்னே" என்றான். டேய் இன்னும் என்ன சொல்லவராங்கன்னே தெரியல்ல அதுக்குள்ள போலாங்கிறீயே என்று கேட்டதற்கு, "ஆங் மண்ண சொல்ல வாராங்க...எந்திருய்யான்னா???? இம்முறை அவனிடம் மரியாதை குறைந்திருந்தது. சரி இதுக்கு மேல உட்காந்தா அசிங்க அசிங்கமா திட்டுவான் என்பதால் அவனோடு கிளம்பினேன். தியேட்டரில் எங்களை வெளியே விடவில்லை." இடைவேளை வரை வண்டியை எடுக்கக் கூடாது,  உள்ளே போங்கள்" என்று மேலாளர் சொன்னதற்கு , நீங்க மட்டும் ஜாலியா வெளிய இருப்பீங்க...நாங்க மட்டும் கஷ்டப்பட்டு உள்ள இருக்கணுமா...வாங்க எல்லோரும் இங்கனயே உட்காரலாம் என்று எதிர் வாதம் புரிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூரில் அந்த நேரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களை மறக்கவே முடியாது....&lt;br /&gt;&lt;br /&gt;"கையில் தீக்கதிர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் பணியாளரைத் தே..பையா என்று திட்டிய முதலாளி"&lt;br /&gt;&lt;br /&gt;" நானெல்லாம் சாகிறதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வாழ்ந்திகிட்டு இருக்கேங்க..என்று சொன்ன தொழிலில் நஷ்டமடைந்தவர்"&lt;br /&gt;&lt;br /&gt;" ஓட்டுப் போட ஆசையாய் சேலத்திற்குக் கிளம்பிய போது நீயெல்லாம் ஓட்டு போட்டு என்னத்த ஆகப்போகுது பேசாம வேலையப் பாரு என்று சொன்ன என் சீனியர்"&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அண்ணா பல்கலையில் நான் படித்த தொழில்கல்வியை விட எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்தது திருப்பூர் தான் என்பதையும்,அதன் காரணமாகத்தான் நான் இப்போதும் பணியில் உள்ளேன் என்பதையும் மறுக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கால ராட்டினம் சுழன்று மீண்டும் திருப்பூரில் நான். &lt;br /&gt;&lt;br /&gt;"நள்ளிரவு வரை வேலை...ஞாயிறன்றும் வேலை....குழந்தைத் தொழிலாளர்கள்....மிகக்குறைவான ஊதியம்....ஆண்டை அடிமை மனோபாவம் கம்யூனிசம் திருப்பூரில் என்ன செய்தது இதுவரை என்று என் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தி.மு.க வந்த பின்பு இப்போது தான் நல்ல சாலைகளாவது வந்துள்ளது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் திருப்பூருக்கு நான் / நீ என்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால்......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-5849239674250169509?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/5849239674250169509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=5849239674250169509' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5849239674250169509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5849239674250169509'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/04/blog-post.html' title='திருப்பூரும்..கம்யூனிசமும்... பின்னே நானும்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6329714898711585297</id><published>2009-03-17T09:10:00.000-07:00</published><updated>2009-03-17T09:26:35.833-07:00</updated><title type='text'>விஜய்யின் கோபமும், நம்முடைய கோபமின்மையும்</title><content type='html'>டாக்டர் விஜயை நாம் ஓட்டாவிட்டாலும் அவரே அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்று தன்னைத் தானே ஓட்டிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்தவர். விஜய் மீது எப்போதும் வராத எரிச்சல் (வில்லு பார்த்தாலும் கூட வேட்டைக்காரனுக்குத் தயாராகவே உள்ளோம்) சமீபத்தில் அவர் கோககோலா &lt;br /&gt;விளம்பரத்தில் எல்லோரையும் கூல் செய்ய கோககோலாவைத் தரும் விளம்பரத்தைப் பார்த்ததில் இருந்து ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் அவர் கோககோலா விளம்பரத்தில் ஆடிய போது அவர் படத்தின் ஓப்பனிங் சாங் "அச்சம் என்பது மடமையடா" இல்லை. அவர் கொடியும் காட்டப்படவில்லை. அவர் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வில்லை. ஆனால் இப்போது ....சற்று பயமாகத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் எப்படியும் புதியஜனநாயகம், வினவு போன்ற கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை. படித்தாலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதும் இல்லை. விழிப்புணர்வு போன்ற கருமம் எல்லாம் வந்து விட்டால் இப்படி "பிரஸ்மீட்டில் காட்டுக் கத்தல் கத்த முடியாதே!"&lt;br /&gt;&lt;br /&gt;கோககோலா நிறுவனம் அந்த பிரஸ்மீட்டில் தன் குளிர்பானத்தைக் கொடுத்து டாக்டரைக் குளிர்வித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இதற்கெல்லாம் கோபமின்மையை வெளிப்படுத்தும் வரை, அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பயம் நம் மீடியாவைப் பார்த்து. விஜயைப் போற்றி புகழும் வேலையை செய்துவரும் ஜனநாயகத்தின் &lt;br /&gt;தூண் இந்த மாதிரி விசயங்களில் கப்சிப்....&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வு குறித்த பயங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6329714898711585297?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6329714898711585297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6329714898711585297' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6329714898711585297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6329714898711585297'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/03/blog-post.html' title='விஜய்யின் கோபமும், நம்முடைய கோபமின்மையும்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-5983794719212622171</id><published>2009-02-07T04:40:00.000-08:00</published><updated>2009-02-07T10:50:29.780-08:00</updated><title type='text'>நான் கடவுள்</title><content type='html'>இப்படி (?) ஒரு படம் எடுக்க பாலாவால் மட்டும் தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அஹம்பிரம்மாஸ்மி" என்று கத்திக்கொண்டு படம் நெடுக கஞ்சா இழுக்கும் ஒரு நாயகன், பார்வையற்ற பிச்சைக்காரியாக வரும் நாயகி(முக்கியமாக எல்லா படத்திலும் வரும் காதல் என்ற வஸ்துவே இருவருக்கும் இடையே இல்லை),குழந்தைகளையும்,ஊனமுற்றவர்களையும் மூலதனமாகப் போட்டு பிச்சைத்தொழில் நடத்தும் தொழிலதிப வில்லன் (இது மட்டும் ஏற்கனவே "வில்லன்" படத்தில் வந்தது)பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பது தவிர்த்த அவர்கள் வாழ்க்கை என்று யாருமே எடுக்காத யாருமே எடுக்க முடியாத ஒரு களத்தை ரணகளமாகக் (உண்மையிலேயே நேற்று திரையரங்கில் குழந்தை ஒன்று கதறிக்கொண்டிருந்தது)&lt;br /&gt;கையாண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் க‌தை:&lt;br /&gt;&lt;br /&gt;ஜோசிய‌ ந‌ம்பிக்கையில் காசியில் சிறுவ‌ய‌தாக‌ இருக்கும் போது விட்ட‌ த‌ன் ம‌க‌னைத் தேடி தென் த‌மிழ‌க‌த்தில் இருந்து ஒரு பெரிய‌வ‌ர் த‌ன் ம‌க‌ளுட‌ன் வ‌ருவ‌தாக‌ப் ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌து.த‌ன் ம‌க‌னைக் காசியில் கால‌ பைர‌வ‌க் கூட்ட‌த்தைச்சேர்ந்த‌ ஒருவ‌னாக‌ப் (ஆர்யா) பார்த்து விக்கித்து போகிறார்.த‌லைமை சாமியின் உத்த‌ர‌வைப் பெற்று ஆர்யா அவருடைய சொந்த‌ ஊருக்கு வ‌ருகிறார்.ஊருக்கு வந்தாலும் தன் தாயிடமும், தங்கையிடமும் ஒட்டாமல் கால பைரவ வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் பிச்சைத்தொழிலைக் கொடூர‌மாக‌வும்,கோர‌மாக‌வும் ந‌ட‌த்தி வ‌ருகிறார் ஒருவ‌ர்.அவ‌ரிட‌ம் வேறொரு கூட்ட‌த்தைச் சேர்ந்த பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் பூஜா வ‌ந்து சிக்குகிறார்.பூஜாவைப் ப‌ண‌த்திற்காக‌ ஒருவ‌ரிட‌ம் விற்க‌ முய‌லும் போது வ‌ழ‌க்க‌மான பாலாவின் க‌தாநாய‌க‌னால் வழக்கமான முறையில் அடிப‌ட்டுச் சாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌டைசியில் பூஜா என்ன‌ ஆனார் என்ப‌தே கிளைமேக்ஸ்.(கடைசியில் நாம் என்ன‌ ஆனோம் என்ப‌து ஆண்டி கிளைமேக்ஸ் :‍((&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்யாவிற்கு இப்ப‌டி ஒரு பாத்திர‌ம் இனி அமையுமா? என்ப‌து ச‌ந்தேக‌மே.ஆனால் என்ன ஆர‌ம்ப‌த்தில் அள‌வுக்க‌திக‌மான‌ ஓப்ப‌னிங் கொடுத்து ப‌ட‌ம் முழுக்க‌ க‌ஞ்சா இழுக்க‌ விட்டிருக்கிறார்க‌ள்.அவ்வ‌ப்போது நானே கட‌வுள் என்று க‌த்துகிறார்.நீச‌ பாஷையில் பேசாம‌ல் தேவ‌பாசையில் அடிக்க‌டி பேசுவ‌தால் மொழிபெய‌ர்க்க‌ சித‌ம்ப‌ர‌ம் கோயில் தீட்சித‌ர்க‌ளைக் கூட்டிக் கொண்டு போவ‌து உத்த‌ம‌ம்.ப‌ட‌த்தின் ஹீரோ இவ‌ர் என்று நினைத்தால் அது த‌வ‌று. மொத்த‌மே 10 காட்சிக‌ளில் தான் வ‌ருவார் போலிருக்கிற‌து.க‌டைசியில் வில்ல‌ன்க‌ளைக் கொல்வ‌த‌ற்காக‌ப் பட‌ம் நெடுக‌ காத்திருந்தாற் போல் ஒரு உண‌ர்வு.கெட்ட‌ப், உட‌ற்மொழி அனைத்தும் ஓ.கே&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பூஜா...ந‌ம் த‌மிழ்சினிமாவில் இப்ப‌டிப் ப‌ட்ட‌ பாத்திர‌ங்க‌ளையும் ந‌டிப்ப‌த‌ற்குக் :கொஞ்ச்ம்..கொஞ்ச்ம்" ஆளிருப்ப‌து ஆறுத‌ல் அளிக்கிற‌து.என்ன‌ மிக‌ச்சிற‌ந்த‌ பாட‌கி என்று இவ‌ரைச் சொல்லிவிட்டு ப‌ழைய ஒரிஜினல் பாட‌ல்க‌ளுக்கு வாய‌சைக்க‌ விட்டுக் காமெடி ப‌ண்ணிவிட்டார்க‌ள்.பூஜா பாடிய‌ முறையிலேயே பாடினால் நான் கூட‌ க‌ண்ணே...க‌லைமானே பாட்டை ந‌ல்ல‌ப‌டியாக பாடுவேன்.ஆர்யாவிற்கு அட்வைஸ் செய்யும் போதும், உச்ச‌க்க‌ட்ட‌ காட்சியின் போதும் ம‌ட்டும் ச‌ற்று ப‌டுத்துகிறார். ம‌ற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌,முய‌ற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;வில்ல‌னாக‌ வ‌ருப‌வ‌ர்...ராம‌ராஜ‌ன் ப‌ட‌த்தில் ஒருவ‌ர் வில்ல‌னாக‌ வ‌ருவாரே அவ‌ரை நினைவூட்டுகிறார்.தென்மாவ‌ட்ட‌த்தமிழ் பேசி கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் கதாபாத்திரம் ஏற்ற கிருஷ்ணமூர்த்தி, திருநங்கை கீர்த்தனா, பிச்சைக்காரர்களாக நடித்த நடிகர்கள், தமிழ்சினிமாவின் புது இன்ஸ்பெக்டர் (இவர் இன்னும் 50 படங்களிலாவது இதே கேரக்டரி வருவார் என்று நினைக்கிறேன்)என்று எல்லோரும் நன்றாகச் செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்தர் வில்சன் கேமராவையும், சுரேஷஅர்ஸ் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய இளையராஜவை படம் முழுக்கத்தேடினாலும் கிடைக்கவில்லை.பிண்னணி இசையாக இருந்தாலும் சரி, பாடல் இசையாக இருந்தாலும் சரி மீண்டும் அந்த இளையராஜா கிடைத்து விடமாட்டாரா என்று நம்மை ஏங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்."பிச்சைப்பாத்திரம்.." பாடல் மட்டும் டிபிக்கல் நவ இளையராஜ ஸ்டைல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் நிறைய இடங்களில் (பூஜா அட்வைஸ் செய்வது,பூஜாவின் உச்சக்கட்ட காட்சி வசனம்) மொக்கையாக எழுதியிருந்தாலும்...(மலையாளத்தான்.../ஜட்ஜாக வருபவர்)என்று ஆங்காங்கே ஊசி குத்தும் வேலையை மட்டும் விடவில்லை.ஆங்காங்கே தெளிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் மட்டுமே ஆறுதல் (அதிலும் ஜெயமோகனின் நகைச்சுவை சற்று பயப்படக்கூடியதே எம்ஜியார்...சிவாஜி குறித்து இவர் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைக்கு உலகமே வேறு மாதிரியாகச் சிரித்தது)&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம்மை மொத்த‌மாக‌ப் போட்டு எடுத்த‌து பாலா தான். ஒவ்வொரு காட்சியையும் ர‌சிக‌ர்க‌ளுக்கு அதிர்ச்சியை உண்டாக்க‌வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடே எடுத்திருப்பது / ப‌ட‌த்தில் எந்த‌வொரு அழ‌கிய‌ல் உண‌ர்ச்சியும் இல்லாத‌து / நிறைய‌ த‌ப்பாக‌ச் சொல்லிக்கொடுப்ப‌து (உச்ச‌க்க‌ட்ட‌ காட்சி ஒரு உதார‌ண‌ம்) / இவ‌ர் வியாபார‌ம் ப‌ண்ண‌வோ அல்ல‌து க‌லைச்சேவை செய்ய‌வோ ந‌ம் உண‌ர்ச்சிக‌ளை உப‌யோகிப்ப‌து / சேர்க்கை ச‌ரியில்லாத‌து / திரைக்க‌தையில் தொட‌ர்ச்சியின்மை / திரும்ப‌த்திரும்ப அவர் படத்தில் இருந்தே எடுக்க‌ப்ப‌டும் காட்சிக‌ள் (எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி ஆகிவிடுவார் போலிருக்கிற‌து)இன்னும் நிறைய‌...&lt;br /&gt; &lt;br /&gt;பாலா த‌மிழ்சினிமாவை நேசிக்கும்,சுவாசிக்கும், திற‌மைமிகுந்த‌ ஒரு க‌ட‌வுள்.ஆனால் இப்போது அக்க‌ட‌வுள் சாப‌ம் கொடுத்துவிட்ட‌து. வ‌ர‌த்திற்காக‌க் காத்திருபோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் க‌ட‌வுள் ப‌ற்றிய‌ முற்றிலும் நெக‌ட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ம்...நாளை&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-5983794719212622171?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/5983794719212622171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=5983794719212622171' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5983794719212622171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5983794719212622171'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/02/blog-post.html' title='நான் கடவுள்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-5211851523200874988</id><published>2009-01-31T09:19:00.000-08:00</published><updated>2009-01-31T09:31:52.368-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகேஷ்'/><title type='text'>நாகேஷ்</title><content type='html'>எதிர்நீச்சல்...&lt;br /&gt;&lt;br /&gt;தாம‌ரைநெஞ்ச‌ம்...&lt;br /&gt;&lt;br /&gt;திருவிளையாட‌ல்...&lt;br /&gt;&lt;br /&gt;க‌லாட்டாக‌ல்யாண‌ம்...&lt;br /&gt;&lt;br /&gt;தேன்ம‌ழை...&lt;br /&gt;&lt;br /&gt;சோப்புசீப்புக‌ண்ணாடி...&lt;br /&gt;&lt;br /&gt;பாமாவிஜ‌ய‌ம்...&lt;br /&gt;&lt;br /&gt;மேஜ‌ர்ச‌ந்திரகாந்த்...&lt;br /&gt;&lt;br /&gt;நினைவில்நின்ற‌வ‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;தில்லான‌ மோக‌னாம்பாள்...&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட்டிண‌த்தில்பூத‌ம்...&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌ன்...&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வ‌ச‌கோத‌ர‌ர்க‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;ம‌க‌ளிர்ம‌ட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா நீங்க‌ள் பிற‌விக்க‌லைஞ‌ன் தான். ந‌ன்றி உங்க‌ளுக்கு...வேறொன்றும் சொல்ல‌த்தோண‌வில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-5211851523200874988?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/5211851523200874988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=5211851523200874988' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5211851523200874988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5211851523200874988'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/01/blog-post_31.html' title='நாகேஷ்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8972076205668185804</id><published>2009-01-14T22:56:00.000-08:00</published><updated>2009-01-14T23:39:18.664-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>படிக்காதவன் - ‍திரைவிமர்சனம்</title><content type='html'>முதல் நாள் எடுத்த சபதத்தையும் மறந்து,"வில்லால் ஏற்பட்ட காயத்தைப் படிக்காதவனைக் கொண்டு ஆற்றலாம்" என்று எண்ணி கூச்ச நாச்சமேயில்லாமல் திரையரங்கிற்குச் சென்றுவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் முற்ப‌குதியும் ந‌ம் காய‌ங்க‌ளுக்கு ம‌ருந்து போடுவ‌து போல் தான் இருந்தது.ப‌ட‌த்தின் க‌தை பின்வ‌ருமாறு.(சொல்ற‌துக்கு கதைன்னு ஒன்னு இருக்குதே‍ நன்றி சுராஜ்)&lt;br /&gt;&lt;br /&gt;மெத்த‌ப் ப‌டித்த‌ பெரிய‌ குடும்ப‌த்தில் ஒரே ஒரு ப‌டிக்காத‌ ஆள் த‌னுஷ்.இத‌னால் ப‌ல‌ அவ‌மானங்க‌ளுக்கு உள்ளாகும் த‌னுஷ், தான் ஒரு ப‌டித்த பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் தன் அவமானங்கள் குறையும் என்று ஒரு தியரியைக் கண்டுபிடித்து அதற்காக பொறியியல் படித்து வரும் தமன்னாவைக் காதலிக்கிறார்.தமன்னாவும் தனுஷைக் காதலிக்கத் துவங்கும் போது அவரது தந்தையான சுமன் ஹெலிகாப்டரில் வந்து தன் பொண்ணைக் கூட்டிச் செல்கிறார்.ஆந்திராவிற்குச் சென்று த‌ம‌ன்னாவைக் தனுஷ் எப்படி கைப்பிடிக்கிறார்? என்ப‌தே மீதிக்க‌தை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌க் குட்டியூண்டு கதையில், 2 பெரிய‌ ஆந்திரா ர‌வுடிகள் (சுமன்,சாயாஜி ஷிண்டே)ஒரு பெரிய‌ திருநெல்வேலி ர‌வுடி(காதல் தண்டபாணி)/அவரது மகன், ஒரு மிக‌ப்பெரிய‌ திருநெல்வேலி ர‌வுடி (அதுல் குல்கர்னி) / அவ‌ர‌து த‌ம்பி(நிதின் சத்யா), ஒரு சின்ன‌ சென்னை ர‌வுடி(விருமாண்டி படத்தில் வருவாரே அவர்), அவ‌ர்க‌ள் கேங் எல்லாம் சேர்த்து சுமார் 500 உப‌ ர‌வுடிகள்,ஒரு காமெடி ரவுடி (விவேக்)/அவரது கேங் (செல் முருகன்,போண்டாமணி) (வேறு யாராவ‌து விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க‌வும்)த‌னுஷ் சண்டை போட்டு சமாளிப்ப‌த‌ற்குள் ந‌ம‌க்கு மூச்சு வாங்கிவிடுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் பொல்லாதவன் படத்திற்குப் பிறகு நல்ல மெட்சூராக நடிக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.ரியாக்ஷன், வசன உச்சரிப்பு, நகைச்சுவை, டான்ஸ், பைட் என்று எல்லாமே இவருக்கு நன்றாக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமன்னா கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தில் காமெடிய‌னாக‌ச் செய்திருப்ப‌து வ‌டிவேலு...ச்சே சாரி விவேக். விவேக் எம்.ஆர் ராதா, சிவாஜி இவ‌ர்க‌ளையெல்லாம் மிமிக்ரி செய்து முடித்து விட்டு இப்போது வ‌டிவேலுவைச் செய்ய‌த் தொட‌ங்கியிருக்கிறார்.ட‌ய‌லாக் டெலிவ‌ரி, பாடி மாடுலேஷ‌ன் உட்ப‌ட‌ அப்ப‌டியே டிட்டோ. ஒரே ஒரு சீனில் ஆபாச‌மாக காட்சிய‌மைத்து தான் விவேக் தான் என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தியுள்ளார்.இருந்தாலும் நிறைய‌ இட‌ங்க‌ளில் சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தில் ம‌ற்றொரு குறிப்பிட‌த்த‌குந்த‌ கதாபாத்திர‌ம் த‌னுஷின் தந்தையாக‌ வ‌ரும் பிரதாப் போத்த‌ன்.ம‌னித‌ர் த‌னுஷைப் பார்த்து டென்ச‌ன் ஆகி ஆகியே க‌ல‌க‌ல‌க்க‌ வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லன்கள் அனைவரும் வந்து நம்மை வேறு வகையில் பயமுறுத்தியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌யில்சாமி,க‌னேஷ்,ஆர்த்தி,சுவாமிநாத‌ன் எல்லோரும் ந‌கைச்சுவைக்கு உத‌வியிருக்கிறார்க‌ள்.அதிலும் சில‌ சீன்க‌ள் லொல்லுச‌பா / சூப்ப‌ர் 10 பார்ப்ப‌து போல‌வே உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;சுராஜ் "ஆங்கில / மற்ற மொழிப்ப‌ட‌ங்க‌ளை எல்லாம் காப்பி அடித்து ப‌ட‌ம் எடுக்க‌த்தேவையில்லை,ந‌ம் த‌மிழ்ப்ப‌ட‌ங்களையே புத்திசாலித்த‌ன‌மாக‌ காப்பி அடித்தாலே போதும்" என்ற‌ உண்மையைக் க‌ண்டுபிடித்துள்ளார். அதிலும் அதுல்குல்க‌ர்னியை வைத்து ர‌ன் ப‌ட‌ கிளைமேக்சையும்,பொல்லாத‌வ‌ன் பினிஷிங்கையும்,புதுப்பேட்டை காட்சியையும் வைத்தே கிளைமேக்சை முடித்த‌தில் இருந்தே இவ‌ர் திற‌மையைக் க‌ண்டுகொள்ள‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ற்ற‌ப‌டி ப‌டிக்காத‌வ‌ன் நம்மை சந்தோஷ‌ப்ப‌டுத்துவான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8972076205668185804?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8972076205668185804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8972076205668185804' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8972076205668185804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8972076205668185804'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/01/blog-post_14.html' title='படிக்காதவன் - ‍திரைவிமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3397008901258799179</id><published>2009-01-13T10:28:00.000-08:00</published><updated>2009-01-13T11:09:53.359-08:00</updated><title type='text'>வில்லு - நமக்கே நாம் வைத்துக்கொள்ளும் ஆப்பு??????</title><content type='html'>என்ன ஆச்சு பிரபுதேவா???&lt;br /&gt;&lt;br /&gt;தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழிவாங்கல் கதையை, டாக்டர் விஜய் / நயந்தாராவின் எல்லை மீறிய கவர்ச்சி / வடிவேலுவின் மொக்கைக் காமெடி / பிரகாஷ்ராஜின் காமெடியான வில்லத்தனம் / பார்த்து சலித்த சென்டிமென்ட்ஸ் / வந்துவிட‌க்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த பிளாஷ்பேக்   என்று படம் பார்க்க வரும் எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று எத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தீர்கள் பிரபுதேவா?&lt;br /&gt;&lt;br /&gt;புதியகீதை படத்தில் ஆறு விரல்கள் வைத்து கெட்டப் மாற்றி நடித்தபிறகு இதில் தான்  கெட்டப் மாற்றியுள்ளார் (மீசையை சற்று முறுக்கிவிட்டுள்ளார்) டாக்டர் விஜய். விஜய் சண்டை போடுகிறார், பாட்டுபாடுகிறார், நயந்தாராவுடன் காதல் என்ற பெயரில் ஏதோ செய்கிறார், வடிவேலுவுடன் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். மொத்தத்தில் தியேட்டரில் பின்ட்ராப் சைலன்ஸ். யாருக்காக இதையெல்லாம் செய்கிறார் என்று தான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நயந்தாரா படம் முழுக்க கவர்ச்சி காட்டுகிறார்.அதிலும்  படத்தின் ஆரம்பக்காட்சிகள்......ஒரு வேளை திரையரங்கக் கோளாரா ? என்று தெரியவில்லை. நான் பார்த்தது பரங்கிமலை ஜோதியில்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பிட்டுப் படம் போல் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும் போது வடிவேலு காட்சிகளை மிஞ்சிவிடுகிறது விஜய் -வில்லன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு  இந்திரலோகம் படத்திற்குப் பிறகு இதில் தான் இவ்வளவு சீரியஸாக மொக்கைப் போட்டுள்ளார். வரவர குசேலன், வில்லு என்று பயமுறுத்திக்கொண்டே வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"போக்கிரி" ஓடியது என்பதற்காக அதில் வரும் பல காட்சிகளை ஜெராக்ஸ் எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? &lt;br /&gt;உ.ம் வடிவேலு ஹிட் பாடலுக்கு ஆடும் காமெடி நடனம், இன்ட்ரோ சாங்கில் பிரபுதேவா ஆடுவது...&lt;br /&gt;&lt;br /&gt;தேவிசிரிபிரசாத்தின் பாடல்களுக்கு விஜய் படுத்து எழுந்து , படுத்து எழுந்து  நடனமாடியுள்ளார். அதுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ரவிவர்மன் கலர் கலராக ஒளிப்பதிவு செய்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவா இந்த "அபூர்வசகோதரர்கள்"காலத்திய கதையை இவ்வளவு ரிச்சாக எடுத்திருக்கத்தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி யாரும் அவசரப்பட்டு அவதிப்பட்டு துன்பப்பட்டு....................&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3397008901258799179?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3397008901258799179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3397008901258799179' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3397008901258799179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3397008901258799179'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2009/01/blog-post.html' title='வில்லு - நமக்கே நாம் வைத்துக்கொள்ளும் ஆப்பு??????'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-1307836109824477403</id><published>2008-12-26T08:49:00.000-08:00</published><updated>2008-12-26T09:33:07.541-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>அபியும் நானும்....விமர்சனம்</title><content type='html'>மீண்டும் ராதாமோகன்....&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்க்க வருபவர்களை கவுரவப் படுத்தி அனுப்பியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தைக்கும், மகளுக்குமான பாசப்பிணைப்பு என்பது படம் பூசை போட்ட அன்றே எல்லோருக்கும் தெரிந்துவிட்டபோதும், அழகியதீயே, பொன்னியின்செல்வன் (இது மட்டும் சற்று மொக்கை), மொழி கொடுத்த தைரியத்தில் படத்திற்குச் சென்றால், மிக அழகாக திரைக்கதையில் கலக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவங்களின் தொகுப்புதான் கதை என்பது முடிவாகிவிட்ட பிறகு, அந்த சம்பவங்கள் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாதவாறு தேர்ந்தெடுப்பதே மிகப்பெரிய கலை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசமிகு நவீன தந்தையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியுள்ளார். மகளைப் பள்ளியில் சேர்க்க நேர்முகத்தேர்வு&lt;br /&gt;க்குத் தயார் ஆவது, பனியனோடு பெருமையாகத் தெருவில் நடப்பது, கடைசியில் ஐஸ்வர்யா அழுகும் போது &lt;br /&gt;மவுனமாக சிரிப்பது, தாயிடம் மட்டும் மகள் அத்துனை உண்மைகளையும் சொல்லிவிட்டாள் என்றபோது லுக்குவது &lt;br /&gt;என கலந்துகட்டி அடித்துள்ளார். காமெடி செய்யும் போது மட்டும் நிறைய இடங்களில் ரோவன் அட்கின்சனின் பாதிப்பு தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். பிருத்விராஜ் மகள் அளவிற்கு உள்ள ஒரு குழந்தை "இந்த அங்கிள் ஏம்மா Mr.Bean மாதிரி பன்றாறு?" என்று தியேட்டரில் கேட்டது சற்று உறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;(சிறு தகவல் : புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ஜனகராஜ் காரிலேயே தயார் ஆவது போல் அமைக்கப்பட்ட காட்சி கூச்சநாச்சமே இல்லாமல் Mr.Bean ல் அடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிகரம் எப்படித்தான் ஒத்துக்கொண்டாரோ?? :‍-))) &lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்வர்யா அம்மாவாக நிறைவாக செய்துள்ளார். எங்கே இக்கதையை கெடுத்து விடுவாரோ என்ற பயத்தைப் போக்கியுள்ளார்  திரிஷா.&lt;br /&gt;&lt;br /&gt;குமரவேல் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். நாம் என்னதான் தமிழ்சினிமாவைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தாலும் மிகச்சிறந்த திறமைசாலிகள் வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மனிதர் கலங்கவைத்தும், சிரிக்க வைத்தும் கலக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர மனோபாலா, தலைவாசல் விஜய், கனேஷ் வெங்கட்ராம் என நினைவில் நிற்கும் பாத்திரங்கள். ராதா மோகன் எடுத்திருந்த சர்தார்ஜி பின்புலமும், வடக்கத்திய கதாபாத்திரங்களும் சென்டிமென்டிற்காக சேர்க்கப்பட்டு இருந்தாலும் &lt;br /&gt;ஓவர்டோஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வசனகர்த்தா விஜி இல்லாத குறையைப் போக்கியுள்ளார்கள் நாராயணன் / சுப்பிரமணியன். ஊட்டி பின்புலத்தோடு கண்ணுக்கு குளிர்ச்சியாகப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரீத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யாசாகர், வைரமுத்து கூட்டணி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். "மகள் படுக்கைக்கு தனியறை புகுவது &lt;br /&gt;பிரிவுக்கு ஒத்திகை" என்ற வரியில் வைரமுத்து திடீரென மீண்டும் பளீச்சிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே தெரியும் நாடத்தன்மை, சென்டிமெண்ட் ஓவர்டோஸ் இவைகள் மட்டும் படத்தின் திருஷ்டிப் பரிகாரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் சண்டை இல்லாமல், "Where is the Party tonight?" இல்லாமல், வீரவசனங்கள் இல்லாமல் இவ்வளவு நல்ல‌ படம் எடுத்ததற்கே ராதாமோகனுக்கு குஷ்பு கோவிலுக்கு பக்கத்தில் ஒரு செங்கல்லாவது வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரங்கிமலை ஜோதியில் திருவண்ணாமலை படம் (சத்தியமாங்கோ.........) பார்க்கப் போக வேண்டிய கோஷ்டி ஒன்று இந்தப் படத்திற்கு வந்து அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் நம் கழுத்தையும் அறுத்தது. அவர்களிடம் சென்று அட்வைஸ் செய்யலாம் என்றெல்லாம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பயமாக உள்ளது. எனக்கு வயசாயிடுச்சோஓஓஓஓஓ :‍-((&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-1307836109824477403?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/1307836109824477403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=1307836109824477403' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/1307836109824477403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/1307836109824477403'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/12/blog-post.html' title='அபியும் நானும்....விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8798843093823518071</id><published>2008-10-18T02:53:00.000-07:00</published><updated>2008-10-18T06:51:29.639-07:00</updated><title type='text'>சினிமா......சினிமா.......சினிமா.......சில நினைவுகள்</title><content type='html'>இந்தியப் பதிவுலகில் முதன்முறையாக..........என்னையும் இத்தொடர் விளையாட்டிற்கு விநோத் அழைத்த போது கண்களில் இருந்து கண்ணீர் தரதரவென வழிந்தது. இனி.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திரையில் பார்த்த முதல் படம் அஞ்சலி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இயக்கம் என்ற எந்த எழவும் தெரியாத அந்த‌ வயதில் பெரிய திரையில் படம் பார்த்ததே ஏதோ லீவு விட்ட சந்தோசத்தை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ராமன் தேடிய சீதை. சேரன் படத்திற்கு இனி போகலாமா?? வேண்டாமா??என்ற கேள்வி எழுப்பிய படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கே.டிவியில் நந்தா பார்த்தேன். நடிப்பு, இயக்கம், வசனம், பாடல்கள், பிண்ணணி இசை, பாலா அனைத்தையும் தாண்டி கல்லூரிப் பருவத்தில் வந்த மறக்க முடியாத படம். எத்தனையோ முறை பார்த்த பின்பும், நேற்றும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;தமிழ்சினிமாக்கள் என்று மாற்றிக்கொள்ளவும். காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து பொய் சொல்லப் போறோம் வரை ஏதோ ஒரு விதத்தில் தாக்கியும் ,சந்தோசப்படுத்தியும், துக்கப்படச் செய்தும் வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பராசக்தி......நம் மக்கள்.....சண்டாளர்கள் என்ன படம் எடுக்கிறார்கள் என்று ஓடவிடாமல் செய்திருந்தால் சிவாஜியும், கலைஞரும் நமக்கு கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் தசாவதாரம். ஒரே காட்சியில் 4 கமல்கள் அசாதாரணமாக வருவதும், சுனாமிக்காட்சிகளும் சந்தோஷத்தைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன வேலை...வாரமலர் எலீஸா தொடங்கி, ஆனந்தவிகடன் ராஜூமுருகன் வரை வாசித்து வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;7.தமிழ்ச்சினிமா இசை?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் மூத்த கலைஞர்கள் ஆகிவிட்ட நிலையில் , இன்றும் ஜேம்ஸ் வசந்தன்களும், விஜய் ஆண்டணிகளும் நம்மை மகிழ்ச்சிப் படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஆங்கிலத் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது உண்டு. டைட்டானிக், மெலீனா, பிளப்பர், பிரேவ்ஹார்ட், பைண்டிங் நிமோ,பைட்கிளப்,  தாரே சமீன் பர், லக்கான் போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் என்ன நினைத்தாலும் ஆண்டிற்கு சுமார் 80 மோசமான படங்களும் 10 நல்ல படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வேறு கலைகளில் ஆர்வம் அதிகமாகும். மக்கள் பிரச்சினை பற்றி சிறிது யோசிப்பார்கள். குடும்ப சண்டைகள் / உறவுகள் வளரும். நான் எழுதும் கொடுமையான விமர்சனப் பதிவுகள் நின்று போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குறிப்பு :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகளுக்குப் பதில் எழுதி ரொம்ப காலம் ஆகிவிட்டதால் பதில்கள் சற்று மொக்கையாக இருப்பதற்கு நான் பொறுப்பல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர் விளையாட்டில், &lt;br /&gt;&lt;br /&gt;1. சினிமா சிங்கம் முரளிகண்ணனையும், &lt;br /&gt;2. சிங்காரோ சமீன் &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களையும் அழைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8798843093823518071?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8798843093823518071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8798843093823518071' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8798843093823518071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8798843093823518071'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/10/blog-post.html' title='சினிமா......சினிமா.......சினிமா.......சில நினைவுகள்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-5312200288981373841</id><published>2008-09-29T08:12:00.000-07:00</published><updated>2008-09-29T08:54:10.579-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>ராமன் தேடிய சீதை - ‍ ஆணாதிக்கப்படமா???</title><content type='html'>நேற்று மாலை உதயம் திரையரங்கை அடைந்த போது மணி மாலை  6.45. "படம் இன்னும் போடல என்று 6.30 காட்சி டிக்கெட்டை அவர் என் கையில் திணித்த போது தொடங்கியது ஏமாற்றம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் தியேட்டரில் உள்ள அனைவரிடமும் திட்டு வாங்கி என் இருக்கையை அடைந்த போது பசுபதி எபிசோடு ஓடிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பசுபதி பார்வையற்றவர் கதாபாத்திரத்திற்குச் செய்த அப்சர்வேசனை ரேடியோ ஜாக்கி பாத்திரத்துக்கும் செய்திருக்கலாம். நம் ரேடியோ ஜாக்கிகள் எவ்வளவோ பரவாயில்லை.சரியான மொக்கை.கஜாலாவா இது? கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே உழவன் படத்தில் பிரபு, நாட்டாமை படத்தில் கவுண்டமணி, போன்றோர் செய்த தனக்கு பெண் கிடைக்காமல் ஏங்கும் நாயகன் பாத்திரம் தான்.சேரன் எத்தனை படம் நடித்தாலும் இப்படியே தான் நடிப்பார் போலிருக்கிறது. ஒரு சின்ன முன்னேற்றம்....ம்ஹீம்... நல்லவேளை கையில் புத்தகத்தை வைத்து கொண்டு ஹீரோயினை "என்னடா?? ஏண்டா?? " என்று வசனம் பேசவில்லை.அதுவரை தப்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகளில் மற்றோர் ஆட்டோகிராப் என்று போட்டிருந்த போதே தெரிந்துவிட்டது. இதுவும் ஒரு ஆணாதிக்கப் படமாகத்தான் இருக்கப்போகிறது என்று. ஆட்டோகிராப் ஒரு தெளிவான ஆணாதிக்கப்படம். யோசித்துப் பாருங்கள்.... ஒரு ஹீரோயினுக்கு முன்பே இரண்டு காதலர்கள் + ஒரு நண்பர்  இருந்து அவள் நான்காவது ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் மூன்று பேரும் வந்து பெருமூச்சு விடும் ஒரு உச்சக்கட்ட காட்சியைத் தமிழ்சினிமாவில் கற்பனை செய்து பார்க்க முடியுமா??. வடிவேலு மருதமலையில் இக்கதையை நகைச்சுவை என்ற பெயரில் பயன்படுத்தியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt; தொடைகளுக்கிடையே ஒழுக்கத்தைப் புதைத்து வைத்துள்ள நம் கலாச்சாரத்தில் ஒரு பெண் இரண்டு ஆண்களோடு மாலை மாற்றி வந்த போஸ்டரைப் பார்த்துவிட்டே எம்பி எம்பிக் குதித்தார்கள். ஆனால் ஆட்டோகிராப் உலகத்திரைப்படமாம்???.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திலும் கதாநாயகன் பார்க்கும் பெண்கள் எல்லாம் இவனை வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் இவனை வேண்டாம் என்று சொன்ன பெண் மிகவும் கேவலமான வாழ்க்கை வாழ்வது போல் காட்டி, "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று ஏக்கத்தோடு கேட்கும் காட்சியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்???&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஓட ஓட காமெடி கூடிக்கொண்டே வருகிறது. படத்தில் சேரன் என்னவோ மிக சீரியஸாகத்தான் நடித்துள்ளார். ஆனால் தியேட்டரில் தான் சிரிக்கிறார்கள். இவ்வளவு சீரியஸான காமெடியை இதுவரைப் பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் குறிப்பிடத்தகுந்த பாத்திரம் மணிவண்ணன். வித்யாசாகரின் இசையும் ஆங்காங்கே நன்றாகத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிதின்சத்யா எபிசோடு. திருடப் போன இடத்தில் பெண் அழகாக இருந்தால் காதல் வந்துவிடமா??. காதல் வருவதற்கான நல்ல‌ காரணங்களை நம் இயக்குநர்களே இதை விட நிறைய யோசித்து விட்டார்கள் பாஸு...&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் தன் பெயரை மட்டும் படத்திற்கு படம் வித்தியாசமாக வைத்துக் கொண்டால் (ஜெகன், ஜெகந்நாத்) போதாது. இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கடைசியாக ஒரு பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நம் ரசிகர்கள் பாவம். இந்த பரவாயில்லாத படத்தையெல்லாம் மிகச் சிறந்த படம் என்று சொல்லும் அளவிற்கு 2008 ல் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.இதற்கு ஒரே தீர்வு அரசாங்கமே படத்தைப் பார்த்து விட்டு இப்போது "காதலில்விழுந்தேன்" படத்தைச் செய்வது போல் தியேட்டர்களில் திரையிடா வண்ணம் பார்த்துக்கொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சன்டி.வியில் என்னா ஒரு புரட்சி. எல்லா தலைவர்களும் கடும் கண்டணங்களைத் தெரிவிக்கிறார்கள்.எதிர்காலம் சற்று பயமாகத்தான் உள்ளது.:-(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-5312200288981373841?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/5312200288981373841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=5312200288981373841' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5312200288981373841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5312200288981373841'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/09/blog-post.html' title='ராமன் தேடிய சீதை - ‍ ஆணாதிக்கப்படமா???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8248136538913211674</id><published>2008-08-24T11:08:00.000-07:00</published><updated>2008-08-24T12:13:34.855-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு'/><title type='text'>தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு........மற்றுமோர் சூப்பர்சிங்கர்.....</title><content type='html'>மிக அதிகமான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விதமாக விளம்பரம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்று, "தமிழ்ப்பேச்சு.........எங்கள் மூச்சு".பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு படைத்த தமிழகத்தின் அடுத்ததலைமுறைப் பேச்சாளர்களை / தலைவர்களை வெளிக்கொணரப் போகும் நிகழ்ச்சி என்று நினைத்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;இளைய திலகத்தின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் என்ன கொடுமை சார் இது ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காப்பியச்சுற்று:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதலில் நடுவர் நெல்லைக் கண்ணணின் ஆசிரியத்தனம்.சூப்பர் சிங்கரில் எப்படி நடுவர்கள் ராகம் சரியில்லை.........தாளம் சரியில்லை..........சுதி சேரவில்லை என்று சிந்துபைரவி JKB அண்ணா ரேஞ்சுக்கு சீன் போடுகிறார்களோ அதற்கு சற்றும் குறையாமல் நெல்லைக் கண்ணன் கம்பர், வள்ளுவர் என்று சீன் போடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பேச்சுப்போட்டி / ஒப்புவித்தல் போட்டி நடத்தும் ஆசிரியரிடம் விட்டது தவறுதான். விளைவு இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று மனசு சொல்லுது.......பாக்காதேன்னு புத்தி சொல்லுது.......&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களாக வேண்டும் என்றால், கம்பராமாயணமும், திருக்குறளும் தெரிந்தால் தான் ஆக முடியும் என்றால் அந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வது?????&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும். திருவள்ளுவர் திருக்குறளை சொந்தமாக எழுதித்தான் இவ்வளவு புகழ் பெற்றாரே தவிர மற்ற இலக்கியங்களை மனனம் செய்து புகழ் பெறவில்லை.இலக்கியங்களைப் பிரதி எடுக்கும் வசதி இல்லாத அந்தக் காலத்தில்  வேண்டுமானால் மனனம் செய்வது புத்திசாலித்தனமாக‌ இருந்திருக்கலாம்.சாகாவரம் படைத்த இணையம் போன்ற விடயங்கள் வந்த இக்காலத்திலும் மனனம் செய்வதையே உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் தொண்டர்களை என்னவென்று சொல்வது???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழில் பேசும் சுற்று:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் தற்போது வைக்கப்படும் பெயர்களில் ஒரு அழகுணர்ச்சியே இல்லாததைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்&lt;br /&gt;&lt;br /&gt;1) Pen - எழுதுகோல் ‍ - Writing Instrument.&lt;br /&gt;&lt;br /&gt;2) Computer - கணிணி ‍ - Calculating instrument.&lt;br /&gt;&lt;br /&gt;3) Cellphone - கைபேசி &lt;br /&gt;&lt;br /&gt;என்று தற்போது வைக்கப்பட்ட இப்பெயர்களை சங்க காலத்தில் இருந்து புழங்கும் வார்த்தைகளோடு ஒப்பிட்டால் நம் நிலைமை புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புயல்களுக்கே அழகுணர்ச்சியோடு காத்ரீனா, ரீட்டா என்றெல்லாம் பெயர் வைக்கும் மற்றவர்களோடு ஒப்பிட்டால்,&lt;br /&gt;தமிழில் பெயர் சூட்டும் விசயம் ஒரு தவறான திசையில் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசயங்களைப் பற்றியெல்லாம் நடுவர்களாக வந்தவர்களே யோசித்து இதுவரை ஒன்றும் செய்யாத நிலையில் போட்டியில் பங்கேற்க வந்தவர்களைப் போட்டுஎடுத்தது எந்த விதத்தில் நியாயம் ? ? ?&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு என்பது ஒரு கலை. தமிழைத் தவறாகச் சந்தைப்படுத்தும் ஒரு விஷயம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுப் போட்டியில் நன்றாகப் பாட வேண்டுமே தவிர....பாடலின் சிறப்புகளைப் பற்றிப் பட்டியல் போடக்கூடாது.அதே போல் கம்பர் என்ன சொன்னார்??? இளங்கோ என்ன சொன்னார் என்பதை விட நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பராமாயணத்தைப் பக்கம் பக்கமாகப் பேசும் கம்பன் கழக பேச்சாளர்களை விட, அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் கலைஞரின் பேச்சு சிறந்தது என்பதில் யாருக்கும் (ஜெயலலிதாவிற்குக் கூட) மாற்றுக்கருத்து இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழை உயர்த்திப் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு &lt;br /&gt;&lt;br /&gt;1) பேசுபவரின் கருத்து என்ன ????? கருத்தின் உண்மை என்ன ????&lt;br /&gt;2) அதை எவ்வளவு சுவையாக கேட்கும் வண்ணம் பேசுகிறார்?????&lt;br /&gt;3) எவ்வளவு சுருக்கமாகப் பேசுகிறார்?????????&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டால் உண்மையிலேயே நமக்கு மிகச் சிறந்த அடுத்த தலைமுறை பேச்சாளர்கள் கிடைப்பார்கள்..........&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியக் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனோடு பேசிக்கொண்டிருந்த போது  கிடைத்த‌ கருத்துக்கள் இவை.....ஹி.ஹி... நல்லா இருப்பதெல்லாம் அவன் சொன்னது....மொக்கையாக இருப்பதெல்லாம் நான் சொன்னது :-))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8248136538913211674?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8248136538913211674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8248136538913211674' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8248136538913211674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8248136538913211674'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/08/blog-post_24.html' title='தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு........மற்றுமோர் சூப்பர்சிங்கர்.....'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4119997345568016698</id><published>2008-08-04T07:13:00.000-07:00</published><updated>2008-08-04T07:50:49.165-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>குசேலன் -  2 வருகிறது ஜாக்கிரதை...........</title><content type='html'>இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பவர்கள் : விஜய்,  பி.வாசு,  வடிவேலு, பேரரசு.&lt;br /&gt;&lt;br /&gt;வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினி&lt;br /&gt;&lt;br /&gt;வாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா????? ஏன் அழறீங்க?? அட சொல்லிட்டு அழுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: அது அது .......பூ பூபூ..........எல்லோரும் குசேலன் பாத்துட்டு இதுக்குக் குருவியே பரவாயில்லன்னு சொல்றாங்க.......எம் படத்துக்கு இப்படி திடீர்னு ஒரு பெருமை வரும்னு நான் நினைக்கவேயில்லை.......அதான்.......பூபூபூ...&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : ஏய் எங்கள வச்சு ஒன்னும் காமெடி....கீமெடி பண்ணலியே.........&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: ண்ணா....நான் ஏங்னா காமெடி பண்ணனும்...அதான் வாசு சார் குசேலன் படத்துல 13 ரீலு காமெடியா பின்னியிருக்காராமே.........(தனக்குள்ளேயே சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;வாசு: ஆஹா குசேலன் 2 எடுக்கலாம்னு பாத்தா விடமாட்டாங்க போலியே.....தம்பி விஜய் போப்பா....போ..போ....பிரபுதேவா கூப்புடுறாரு பாரு.....வில்லு வராமலா போயிடும்....அப்ப வச்சுக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு எங்க யாரையும் காணோம்....பசுபதி எங்க????&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : அய்யா!!!!! அவரு சைக்கோ கில்லருக்குப் பயந்துக்கிட்டு சென்னைய விட்டே ஓடிப் போயிட்டேன்னு சொல்ல சொன்னாருய்யா??????&lt;br /&gt;&lt;br /&gt;வாசு : அப்ப நயந்தாரா???&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : அத ஏன்யா கேட்குறீங்க.....ஏதோ நெட்ல கசமுசா படம் வந்திருக்குன்னுப் போய் பாத்தா நம்ம குசேலன் பட சீன் தான் ஓடுதாம்யா...அதான் அந்தப் பஞ்சாயத்துக்குப் போயிருக்காங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;வாசு : சரி அவங்கள விடுங்க ......முதல்ல உங்க காமெடி பார்ட்ட சொல்லிற்றேன்.....குசேலன் 2 ல உங்க பொண்டாட்டிய நீங்க........&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : அய்யா....மறுபடியுமா????? நீங்க விடுங்கய்யா????நான் என்னோட டீம வச்சே எழுதிக்கிறேன்......நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய......&lt;br /&gt;&lt;br /&gt;(ரஜினி வீட்டில்)&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி : சத்தி....சத்தி.... மறுபடியும் பிராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.......வாசு குசேலன் 2 டிஸ்கசனுக்குக் கூப்பிடுறார்....&lt;br /&gt;&lt;br /&gt;சத்தி : என்னது மறுபடியுமா???? தலைவா ஏற்கனவே எல்லோரும் எதோ எழவு விழுந்தா மாதிரி போன் மேலே போன்.....இன்னும் பார்ட் 2 வந்தா கிளிஞ்சுரும்.....&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி : அப்ப நான் வேணா...."பாடம் கத்துக்கிட்டேன்....இனிமே இப்படி நடக்காது"ன்னு விளக்கம் கொடுத்துரட்டுமா????&lt;br /&gt;&lt;br /&gt;சத்தி : தலைவா.....தயவு செய்து கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்காதீங்க....இப்ப கொடுத்த விளக்கத்துக்கே என்ன பிச்சுப் புடுங்குறாங்க....அதனால பேசாம ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருங்க......&lt;br /&gt;&lt;br /&gt;(மீண்டும் டிஸ்கசன் நடக்கும் இடம்)&lt;br /&gt;&lt;br /&gt;பேரரசு : அண்ணே நான் எல்லாம் ரஜினிக்கு கதையே சொல்ல முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.....ஆனா உங்க குசேலன் பாத்த பின்னாடி முடிவே பண்ணிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : என்னன்னு......&lt;br /&gt;&lt;br /&gt;பேரரசு : ரஜினிய வச்சு பூஜை போட்டுறலாம்னு.....படம் பேரு "திருவேற்காடு". இது ஆடி மாசம் வேற‌. சும்மா கலெக்சன அள்ளிட்லாம்........&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : ஆஹா ஒரு குரூப்பாத்தான்யா அலயறாங்க......&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி  பேரரசு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் நேராக வாசுவிடம் வருகிறார்...பேரரசு ஏதோ முனுமுனுத்துக் கொண்டே சென்று விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி : வாசு குசேலன் 2ன்னு ஒரு சப்ஜெக்ட் சொல்றேன்னீங்களே.....சொல்லுங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;வாசு : "ஓப்பனிங் சீன்ல நான் உங்கள வச்சு அபூர்வராகங்கள் 2 சூட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : இப்பத்தான் குசேலன் 2ன்னு சொன்னீங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;வாசு : குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா இந்தப் படத்துல உங்களுக்கு 2 பொண்டாட்டின்னு கதை பண்ணிடுவேன் ஜாக்கிரதை..............&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : 2 வைபா.............&lt;br /&gt;&lt;br /&gt;வாசு : அந்தக் காட்சில நீங்க ஒரு ஹெலிஹாப்ட்ரால முட்டிக் கதவ திறக்குறீங்க......&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி : என்னது ஹெலிஹாப்ட்ரல முட்டியா......&lt;br /&gt;&lt;br /&gt;வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????&lt;br /&gt;&lt;br /&gt;(ரஜினி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்))&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய டிஸ்கி :&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவங்கள் கற்பனையே :-))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4119997345568016698?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4119997345568016698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4119997345568016698' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4119997345568016698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4119997345568016698'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/08/2.html' title='குசேலன் -  2 வருகிறது ஜாக்கிரதை...........'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3366854515962451043</id><published>2008-08-03T06:34:00.000-07:00</published><updated>2008-08-03T07:04:26.652-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>குசேலன் -‍ ஏன் இந்த கொலை வெறி ???? விமர்சனம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;கதை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நண்பனை பல காரணங்களுக்காகக் காணத் தவிக்கும் ஏழை முடிதிருத்தும் நண்பன் பற்றிய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திரைக்கதை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையையே திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி எழுதிக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வசனம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் புகழ் பரப்பும் வசனங்களைச் சொன்னால் மட்டும் போதும் படம் 100 நாட்கள் ஓடி விடும் என்று சொன்ன ஜோசியக்காரனை பி.வாசு மாற்றி விடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பசுபதி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் என்ன தான் செய்வார் பாவம். திருப்பி திருப்பி ஒரே காட்சியையே படமாக்கியுள்ளதால் தன் கூத்துப்பட்டறை பயிற்சி முழுவதையும் காட்டியும் எடுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மீனா:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஓரளவு நன்றாக செய்துள்ள ஒரே ஜீவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நயந்தாரா:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார். அதுவும் வடிவேலு மறைந்திருந்து பார்க்கும் காட்சி ஒரு தேர்ந்தெடுத்த..........சரி அடுத்த விசயத்துக்கும் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வடிவேலு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூ டூ வடிவேலு.........சமீபத்தில் வந்த எந்தப் படங்களிலும் இந்த அளவு கொத்தியதாக ஞாபகம் இல்லை. தியேட்டரில் மொத்தம் 1 1/2 இடத்தில் மட்டுமே சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;லிவிங்ஸ்டன் / சந்தானபாரதி / பாஸ்கர்/வையாபுரி/சந்தானம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோஸ்டியைத் தவிர்த்து இருந்தாலே பாதி சேதாரத்தைத் தவிர்த்து இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிரபு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் ட்ரெஸ்ஸில் வந்த போது அனைவரும் அசந்தர்ப்பமாக சிரித்தார்கள். செந்தில் என்ற பழைய சந்திரமுகி பெயரை சூட்டினால் மட்டும் போதுமா. என்ன கொடுமை சார் இது ?? என்று பி.வாசுவைக் கேட்டிருக்க வேண்டாமா??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கேமரா:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன சூப்பர்ஸ்டார் வரும் காட்சிகள் மட்டும் வீடியோகேம்ஸ் பார்ப்பது போல் உள்ளது.&lt;br /&gt;Technology has improved so much???????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இசை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் / பொல்லாதவன் போன்ற படங்களுக்கு இசையமைத்த G.V பிரகாஷ் பெயரை வைத்துக் கொண்டு குசேலன் படக் குழுவினரை யாரோ ஏமாற்றி விட்டதாக&lt;br /&gt;தீவிர வதந்தி ஒன்று பரவியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாசு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நடிகன் மாதிரி காமெடி படம் எடுத்த வாசுவா இது??? அழுத்தமான கிளைமாக்ஸ் அதனால 13 ரீல்கள் சும்மா செம காமெடியா எடுத்துருக்கோம்னு ஒரு பேட்டில இவரு சொன்ன போது கண்களில் இருந்து என்னையும் அறியாமல் நீர் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ரஜினி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாருப்பா அது. அவர் இந்தப் படத்துல இருக்காரா ??? போங்கப்பா ??? பொய் சொல்றீங்க. அண்ணாமலை - 2 , சந்திரமுகி - 2 எல்லாம் நல்ல வேளை வரவில்லை. தப்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கிளைமேக்ஸ் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும் நல்லா இருந்தா போதுமா??? முதல் 2 1/4 மணி நேரம் யாரு உக்காற்றது??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ரசிகர்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை. உங்க தலைவர் சொன்னது தான்....&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம்.......நொந்துடுவே.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3366854515962451043?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3366854515962451043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3366854515962451043' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3366854515962451043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3366854515962451043'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/08/blog-post.html' title='குசேலன் -‍ ஏன் இந்த கொலை வெறி ???? விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3134961026141423606</id><published>2008-07-09T10:34:00.000-07:00</published><updated>2008-07-09T11:07:45.210-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கதம்பசாதம்-சுப்ரமணியபுரம்,இப்படிக்கு ரோஸ்,புதுப் பண்பலை</title><content type='html'>சுப்ரமணியபுரம்:&lt;br /&gt;&lt;br /&gt;அடிச்சுப் பிடிச்சு விமர்சனம் எழுதலாம்னு பாத்தா தலைகள் எல்லாம் ஏற்கனவே எழுதிட்டதால, ஒரு விமர்சன சுருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற‌த்தாழ‌ அனைவ‌ருமே அறிமுக‌ம்.இருந்தாலும் ப‌டத்தைப் போர் அடிக்காம‌ல் எடுத்துள்ளார்க‌ள்.எல்லோரும் போற்றும் "ராசாத்தி ச‌வுண்டு ச‌ர்வீஸ்", க‌ழுத்தைக் க‌ற‌ க‌ற‌வென‌ அறுக்கும் வ‌ன்முறை இவைகளைத் த‌விர்த்துவிட்டுப் பார்த்தால் உல‌க‌த் தர‌ம் என்று எல்லாம் ப‌ய‌முறுத்தாம‌ல் ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை த‌ந்துள்ளார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌துரை....வாக்கிங் நேர‌க் கொலை போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் ல‌க்கிலுக் த‌ன் விம‌ர்ச‌ன‌த்தில் த‌விர்த்த‌து ஏன்??? என்பது மில்லிய‌ன் யூரோ கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;.............................................................................&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப‌டிக்கு ரோஸ்" அதிக‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌ட்டு என்னை ஏமாற்றிய‌ ஒரு நிக‌ழ்ச்சி.உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்வ‌து போல் தோன்றும்.(உ.ம்.. அவ‌ர் தூக்கு போட்ட‌ போது உங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்துச்சு????).உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்யும் ஒரு ப‌ழைய‌ தொழில் ம‌ட்டும் அனைவ‌ராலும் எதிர்க்க‌ப்ப‌டுவ‌து ஏன் என்று தெரிய‌வில்லை????.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் க‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் பில்லிசூன்ய‌ம், மாந்ரீக‌ம் ப‌ற்றிய‌ ஒரு அறிமுக‌ம் கொடுத்தார்க‌ள்.நன்கு க‌வ‌னித்துப் பார்த்தால் பில்லிசூன்ய‌ம் செய்யும் ஜெய‌ராம‌ன் கையில் அனைத்து விர‌ல்க‌ளிலும் மோதிர‌ம் போட்டுள்ளார்.விக்ர‌வாண்டி ரவிச்ச‌ந்திர‌னும், சாஸ்திரிக‌ளும் கூட‌ செல்வ‌செழிப்போடுதான் உள்ளார்க‌ள்.பாம‌ர‌ன் சொன்ன‌து போல் "த‌மிழ்நாட்டிற்கு எந்த‌ சாமியும் தேவையில்லை...ஈ.வெ.ராம‌சாமியைத் த‌விர‌".&lt;br /&gt;BTW பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லையே ஏன்...ஒருவேளை ஞாநிகளுக்கு மட்டுமே தெரியுமோ???&lt;br /&gt;&lt;br /&gt;...............................................................................&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் முத்தூட் நிறுவத்தினர் Chennai - Live என்ற பண்பலையை ஆரம்பித்துள்ளார்கள்.இதன் துவக்க நிகழ்ச்சி செவ்வாய் அன்று தாஜில் நடந்தது.இதன் சிறப்பம்சம் சென்னையின் முதல் Talk FM என்று சொன்னார்கள்.நிறைய விவாத நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும் என்று சொன்னார்கள்.வரவேற்போம்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3134961026141423606?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3134961026141423606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3134961026141423606' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3134961026141423606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3134961026141423606'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/07/blog-post.html' title='கதம்பசாதம்-சுப்ரமணியபுரம்,இப்படிக்கு ரோஸ்,புதுப் பண்பலை'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8724690669676184191</id><published>2008-06-17T06:48:00.000-07:00</published><updated>2008-06-17T06:49:38.053-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தசாவதாரம்'/><title type='text'>தசாவதாரம் -‍ கடலையூர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.</title><content type='html'>என்ன அண்ணாச்சி தசாவதாரம் படம் பாத்தீயளா??? எப்படி இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;"பாத்தம்வே என்னத்த சொல்ல"???&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சி....என்ன ஆளவந்தான் பார்ட் டூ மாதிரி ஆயிடுச்சா???&lt;br /&gt;&lt;br /&gt;சே..சே அப்படி இல்லவே ....படம் பரவாயில்லவே....என்ன சில இடத்துல தான் மனசொப்பல..&lt;br /&gt;&lt;br /&gt;விவரமா சொல்லுங்க அண்ணாச்சி.....&lt;br /&gt;&lt;br /&gt;நீயே சொல்லும்வே.... நாம தமிழ் படத்துக்குதான போயிருக்கொம்...ஆனா இங்கன பாதி பேரு என்ன பேசுரானே புரியல....&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குத்தான் கீழே எழுதுராங்கலாம்ல...&lt;br /&gt;&lt;br /&gt;என்னல நீயும் ஆக்கங்கெட்ட கூவ கணக்க பேசுத....நாம என்ன மாநில மொழி திரைப்படத்துக்கால போயிருக்கோம்....கீழ எழுத்துக் கூட்டிப் படிக்க....&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்க அண்ணாச்சி...மேல சொல்லுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இந்த ஊருல 40 வருசமா இருக்கம்ல.ஆனா இங்கன இருக்கிற எட்டயபுரத்துக்கே வழி தெரியாது.ஆனா எங்கனையோ இருந்து வந்த வெள்ளக்காரன்  வில்லன் பய மெட்ராஸ், செங்கல்பட்டுனு சந்து சந்தா ஹீரோவைத் துரத்துராம்வே....&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அண்ணாச்சி நீங்களும் லாஜிக் எல்லாம் பாத்துக்கிட்டு......&lt;br /&gt;&lt;br /&gt;எல கேக்குரவன் கேனையனா இருந்தா......&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தா.....&lt;br /&gt;&lt;br /&gt;விடுல அதுக்கு மேலே அவுகளே நிரப்பிக்கிடுவாகா....&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒப்பனை பத்தி சொல்லலியே அண்ணாச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;அதுல சும்மா சொல்லக்கூடாதுவே....நல்லா பண்ணியிருகாக...ஆனா பல மேக்கப்பு இந்தியன் தாத்தா மாதிரியும், சண்முகி மாமி மாதிரியும் இருக்குறத தவித்துருக்கலாம்வே....அதே மாதிரி தேவையே இல்லாத மேக்கப்புகளும் படத்துல இருக்குதுவே....&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சி என்ன சும்மா நொள்ளை சொல்லிக்கிட்டே இருக்கீங்க....படத்துல நல்லதே இல்லையா....&lt;br /&gt;&lt;br /&gt;என்னவே இப்படி பேத்தனமா கேட்டுப்புட்ட.படத்துல வார தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்சினிமாவ அடுத்தக் கட்டத்துக்கு கூட்டிட்டு போவுதுவே....உதாரணமா கேமரா.நம்ம ரவிவர்மன் தம்பி இருக்குல்ல அது ஏதொ ஸ்பீல்பெர்க் படம் எடுத்த மாதிரில எடுத்துருக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இவ்வளவு உழைப்பையும், நல்ல கதைக்கு, நல்ல படத்துக்கு கொட்டியிருந்தா எல்லாத்துக்கும் சந்தோஷம் தானவே....அதான் துக்கமா கிடக்கு.ஆனா படத்த பாக்காம மட்டும் இருந்துராதல....பாரு என்ன‌!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்குறிப்பு :&lt;/strong&gt;அடுத்த பதிவு ... &lt;strong&gt;தசாவதாரத்தில் அரசியல்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8724690669676184191?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8724690669676184191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8724690669676184191' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8724690669676184191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8724690669676184191'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/06/blog-post_17.html' title='தசாவதாரம் -‍ கடலையூர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2177119149476509321</id><published>2008-06-15T11:28:00.000-07:00</published><updated>2008-06-15T12:26:13.372-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தசாவதாரம்'/><title type='text'>தசாவதாரம் ‍- திரை விமர்சனம்</title><content type='html'>உலகையே அழிக்கக் கூடிய ஒரு பயோ‍ வெப்பன் தீவிரவாதிகளின் கையில் கிடைக்க விடாமல் செய்யும் நாயகனின் முயற்சி என்ற ஜேம்ஸ்பாண்டு / ஜாக்கிசான் வகைப்படக் கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(கமல் சார் நீங்க மட்டும் தான் இங்கீலீசு படம் பாப்பீங்களா?? நாங்களும் பாப்போம்ல ‍ உ.ம் நம்பி பாத்திரம் ஓம் நமோ நாராயாணாய நமக என்று சொல்வது மெல்கிப்சன் "சுதந்திரம்" என்று கத்துவதைத் தேவையில்லாமல் நினைவூட்டுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;இதை அப்படியே எடுத்தால் மும்பை எக்ஸ்பிரெஸ் / ஆளவந்தான் போன்ற வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும் என்பதால் பத்து அவதாரங்கள்,நிறைய அரசியல் என்று ஜிம்மிக்ஸ் காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கமலின் உழைப்பு."வந்தோமா...இரண்டு பஞ்ச் டயலாக் பேசுனோமா...4 பாட்டுப் பாடுனமா என்று இல்லாமல் (சத்தியமா குருவி பத்தி சொல்லலீங்கோ)என்று இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே உழைத்துள்ளார்.லக்கிலுக் சொன்னது போல் தேவையில்லாத அவதாரங்களையும் எடுத்துள்ளார்.உ.ம் நெட்டைப் பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கமலைப் பார்த்து பார்த்து கடைசியில் பக்கத்து சீட்டில் உட்காந்திருப்பவர் கூட கமல் தானோ என்ற சந்தேகம் வருகிறது.இருந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;1) பூவராகவன்&lt;br /&gt;2) போலீஸ் அதிகாரி ‍(தெலுங்கு பேசுப‌வ‌ர்.)&lt;br /&gt;3) வில்ல‌ன் க‌ம‌ல் ‍ (மேக்க‌ப் த‌விர்த்து)&lt;br /&gt;4) நம்பி பாத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;அசின் நன்றாக செய்துள்ளார்.இருந்தாலும் மோசமான பாத்திரப் படைப்பு.எனக்கு விஜய் டி.வி நீயா...நானாவில் பேசிய "குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காகப் புண்ணியம் செய்த பெண்" தான் நினைவுக்கு வந்தார்.க‌டைசி சீனில் த‌மிழ்சினிமாவின் இல‌க்க‌ண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ கம‌ல் மீது காத‌லும் வ‌ந்து விடுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சீனிலும் கமலே வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைந்து விடுகிறது.இதை கமல் எப்போது நிறுத்துவாரோ...தெரியவில்லை.இந்த படத்தில் அப்படி வந்து போனவர்களுள் முக்கியமானவர்கள்....கபிலன்,நாகேஷ்,கே.ஆர்.விஜயா,மல்லிகா ஷெராவத் போன்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சங்கள் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சில மேக்கப்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தான்.அசத்தியுள்ளார்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்கள் சில இடங்களில் சுஜாதாவையும், சில இடங்களில் கிரேசி மோஹ‌னையும் நினைவூட்டுகிற‌து.எதுக்கு வ‌ம்பு என்று க‌ம‌ல் த‌ன் பெய‌ரைப் போட்டுக் கொண்டாரோ???(என்ன‌ கொடுமை சார் இது?)&lt;br /&gt;&lt;br /&gt;ஹிமேஷ் இசையில் உலகநாயகனே பாடலும், கல்லை மட்டும் பார்த்தால் பாடலும் ஓ.கே.&lt;br /&gt;&lt;br /&gt;கே.எஸ் ரவிக்குமார் தன்னால் ஹாலிவுட் ரேஞ்சிற்கு மசாலா படங்கள் :-(( எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தரம் என்ற வியாதியின் காரணமாக ஹாலிவுட் கதையையே அடித்திருப்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இது தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சியைப் பார்க்க விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்திற்குள் தாராளமாக நுழையலாம்.எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு :&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவு...கடலையூர் என்ற கிராமத்து ர‌சிக‌ர் பார்வையில் இருந்து தசாவதாரம் விமர்சனம்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌ ப‌ன்ற‌து...இந்த‌ வார‌ம் த‌சாவதார‌ம் வாரம்னு ஆகிப்போச்சுல‌..அது ம‌ட்டுமில்லாம‌ல் சிவாஜி ப‌ட‌த்திற்கு வ‌ந்த‌தை விட‌ த‌சாவதார‌ம் ப‌ட‌த்திற்கு அதிக‌ப் ப‌திவுக‌ள் கொண்டு வ‌ற்ற‌துன்னு குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ வ‌ச்சு ச‌த்திய‌ம் வேற‌ ப‌ண்ணியிருக்கோம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2177119149476509321?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2177119149476509321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2177119149476509321' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2177119149476509321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2177119149476509321'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/06/blog-post_15.html' title='தசாவதாரம் ‍- திரை விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2368328455990649297</id><published>2008-06-02T07:19:00.000-07:00</published><updated>2008-06-02T08:08:56.129-07:00</updated><title type='text'>சந்தோஷ் சுப்ரமணியமும், தமிழ் சினிமாவும்....</title><content type='html'>நேற்று உயிரைப் பணயம் வைத்தாவது சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்து விடுவது என்று முடிவு கட்டினேன்.ஒவ்வொரு திரையரங்காக பார்த்து கடைசியில் உதயம் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷ் சுப்ரமணியம் டிக்கெட் இருக்கா என்று கேட்டதற்கு ஒருவர்.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி ரோஹிணி வந்து சேர்ந்தேன்.50 நாட்களைக் கடந்த பின்னும் ஏறத்தாழ முழு திரையரங்கும் நிரம்பி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பற்றி பல பதிவுகள் வந்துவிட்டதால் மீண்டும் அதையே சொல்லி மொக்கைப் போட விரும்பவில்லை.படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி கேரம்போர்டு விளையாடும் காட்சி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தைக்கும், மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மிக அழகாக சொல்லியிடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ப்ப‌ட‌மும் திரைய‌ர‌ங்கில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக்கொண்டு தான் இருக்கிற‌து.ஆபாச‌ம் இல்லை...வ‌ன்முறை இல்லை... ப‌ஞ்ச் ட‌ய‌லாக்குக‌ள் இல்லை...பறந்து போய் ரயிலைப் பிடிக்க வில்லை...பின் எப்படி ???மக்களுக்கு மறை கழண்டு விட்டதா??? ஏதோ பீம்சிங் காலத்து படம் மாதிரி இருக்கு..இது எப்படி ஓடுது??? என்று கோட‌ம்பாக்க‌த்துக்கார‌ர்க‌ள் ரூம் போட்டு ம‌ண்டையைப் பிடித்துக் கொண்டிருப்ப‌தாக‌க் கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;ம‌க்க‌ள் பார்க்கிறார்க‌ள்...நாங்க‌ள் கொடுக்கிறோம் என்ற கேனைத்தனமான வாத‌ம் இனி எடுப‌டாதோ என்ற பீதி எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி இயக்குநர் அமீருடனான விவாதத்தில் ஒரு மிகச் சிறந்த கருத்தைச் சொன்னார்."ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல எண்ணங்களும்,வக்கிர எண்ணங்களும் சரிபாதியாக உள்ளது.மொழி போன்ற படங்கள் நல்ல எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன...பருத்திவீரன் போன்ற படங்கள் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு விஷயம்,வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது என்பது எளிதான வேலை.நல்ல விஷயங்களுக்கு தீனி போடுவது தான் கடினமான வேலை.ஒவ்வொரு ஆண்டும் 100 படங்கள் வந்தாக வேண்டிய நிலையில் எல்லாப் படங்களும் நல்ல எண்ணங்களுக்குத் தீனி போடும் வகையில் எடுப்பது என்பது பணவீக்கத்தைக் குறைப்பதை விட கடினமான வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இப்படி காப்பி அடிச்சாவது அப்பப்ப நல்ல எண்ணங்களுக்கும் தீனி போடுங்கப்பா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2368328455990649297?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2368328455990649297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2368328455990649297' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2368328455990649297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2368328455990649297'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/06/blog-post.html' title='சந்தோஷ் சுப்ரமணியமும், தமிழ் சினிமாவும்....'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6731369712840215673</id><published>2008-05-04T11:35:00.000-07:00</published><updated>2008-05-04T12:11:26.641-07:00</updated><title type='text'>தரணி - விஜய் அடுத்து இணையும் "குண்டு" (கற்பனைக்)கதை ரெடி...</title><content type='html'>"சார் அடுத்த படத்துக்கு கதை ரெடி" என்ற தரணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகப் பார்க்கிறார் விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;"ண்ணா இந்தப் படத்துக்கே வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு உட்காந்திருக்கோம்.அதுக்குள்ள அடுத்த படமா???ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"சார் இது வேற மாதிரி இருக்கும்.கேளுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் தலையை இடதும், வலதுமாக ஆட்டி ம் என்கிறார்.தரணி, சம்மதம் கொடுத்துவிட்டார் என்று நினைத்து கதையை ஆரம்பிக்கிறார்".&lt;br /&gt;&lt;br /&gt;"படத்த ஓப்பன் பண்ணவுடனேயே ஒரு பிரச்சினையைக் காட்டுறோம் சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்ன பிரச்சினை????"&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒரு பிரச்சினையே இல்லை சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பத்தான் பிரச்சினைன்னு சொன்னீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"அத சொல்லல சார்.பிரச்சினை ஒரு மாட்டேர இல்ல.ஏன்னா இன்ட்டர்வெல்க்கு 30 நிமிஷம் கழிச்சுத்தான் நீங்க பிரச்சினைக்கு உள்ளேயே போறீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவரைக்கும்....."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியெல்லாம் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுட்டு இருந்தீங்கன்ன பரதன்ட்ட சொல்லி இன்னொரு படத்துக்கு பூஜை போட சொல்லிருவேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது பரதனா???...அண்ணா நீங்க சொல்லுங்கன்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;"படத்தோட பேரு &lt;strong&gt;குண்டு&lt;/strong&gt;...இதுல நீங்க ஒரு கோலிக் குண்டு சாம்பியன்.இரண்டாவது சீன்ல பயங்கரமா ஒரு கோலிக்குண்டு மேட்சு நடக்குது..அதுல நீங்க ஜெயிக்கிறீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்..மனதிற்குள்(ஏதோ IPL match ரேஞ்சுக்குப் பேசுறாரே)&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ஜெயிச்சி கப் வாங்குறீங்க...ஸ்கீரன்ல உங்கள ப்ரீஸ் பண்ணி  கதை,திரைக்கதை,இயக்கம் தரணின்னு போடுறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்...இதுல மட்டும் தெளிவா இருங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌து???"&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நீங்க‌ க‌தைய மேல‌ சொல்லுங்க‌ன்னா...&lt;br /&gt;&lt;br /&gt;"விஜ‌ய் You are insulting me...அதான் சொல்லி முடிச்சிட்டேனே..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது சொல்லி முடிச்சுட்டீங்களா?????"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா..."&lt;br /&gt;&lt;br /&gt;"இது 15 நிமிஷத்துக்குத்தான ஓடும்.மீதி 2 மணி நேரத்துக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"வித்யாசாகர்ட்ட சொல்லி 6 பாட்டு வாங்கிட்டேன்.அப்புறம் காமெடிக்கு விவேக் கிட்ட சொல்லி பெருச்சாளி, வச்சுக்கிட்டு இருக்கிறது அப்படி இப்படின்னு ஏதாவது அசிங்கமா பேசச் சொல்லி சமாளிச்சுக்கலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப ஹீரோயினு..."&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் நீஙக 2 படம் என் கூட பண்ணியும் என் frequency க்கு வரல.திரிசா தான் ஹீரோயின்.அத அமெரிக்காவுல இருந்து நீங்க இழுத்துக்கிட்டு ஓடி வ‌றீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌து அமெரிக்காவுல‌ இருந்தா???"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ம‌துரை முடிச்சாச்சு, ம‌லேசியா முடிச்சாச்சு...அடுத்து அமெரிக்கா தானே..."&lt;br /&gt;&lt;br /&gt;"கிழிஞ்ச‌து..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புற‌ம் ஒரு முக்கிய‌மான‌ விச‌ய‌ம்.உங்க‌ளோட‌ இன்ட்ரோ சாங்குக்கு மாள‌விகா கிடையாது.ந‌மீதா தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ???"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா இந்த‌ப் ப‌ட‌த்துலேயே ஏன் மாள‌விகாவுக்குப் ப‌திலா ந‌மீதாவ‌ போட‌ல‌ன்னு ஒருத்த‌ர் த‌க‌வ‌ல் அறியும் சட்ட‌த்தின் கீழ் கேள்வி கேட்டிருக்கிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;விஜ‌ய் ம‌ய‌ங்கி விழுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க‌ட்டாய‌ பின்குறிப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது இல்லை.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6731369712840215673?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6731369712840215673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6731369712840215673' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6731369712840215673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6731369712840215673'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/05/blog-post_664.html' title='தரணி - விஜய் அடுத்து இணையும் &quot;குண்டு&quot; (கற்பனைக்)கதை ரெடி...'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3503585359924349591</id><published>2008-05-04T07:46:00.000-07:00</published><updated>2008-05-04T10:14:14.942-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??</title><content type='html'>உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்த‌வுடன் அவர் கேட்ட முதல் கேள்வி..&lt;br /&gt;&lt;br /&gt;"த‌ம்பி எங்க‌ வேலைபார்க்கிறான்???"&lt;br /&gt;&lt;br /&gt;"Wipro வுல"&lt;br /&gt;&lt;br /&gt;"சம்பளம் எவ்வளவு வரும்???"&lt;br /&gt;&lt;br /&gt;"17000 வரும்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே சேத்தீங்க??"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல Campus Interview....&lt;br /&gt;&lt;br /&gt;"சரி உனக்கு எவ்வளவு வரும்??"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் திக் என்றது.என் தம்பிக்கே இந்தக் கதியென்றால் துகிலியல் துறையில் பணிபுரியும் என் கதி...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு 9000 வரும்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது??9000...இதெல்லாம் ஒரு வேலைன்னு பாத்துக்கிட்டு இருக்க...பேசாம வுட்டுடு".&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி..சரி ஊருக்குப் போகனும்.பஸ்ஸுக்கு காசில்லை.ஒரு 250 ரூபாய் இருந்தாக் கொடு..கல்யாண‌த்துக்கு வரும் போது தந்திர்றேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3503585359924349591?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3503585359924349591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3503585359924349591' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3503585359924349591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3503585359924349591'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/05/blog-post_04.html' title='உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4480223501657878818</id><published>2008-05-04T07:15:00.000-07:00</published><updated>2008-05-04T07:44:43.115-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>குருவி‍ - திரைவிமர்சனம்</title><content type='html'>முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரன் உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குருவி.&lt;br /&gt;&lt;br /&gt;குவாரியில் வில்லன்களால் அடிமைபடுத்தப் பட்டு இருக்கும் தந்தையையும்,மற்றவர்களையும் விஜய் காப்பாற்றுவது தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் தரணி தூள் படத்தை ரீமேக் செய்துவிட்டாரோ??என்ற பயம் மனதில் எழுகிறது.திரிசாவை இழுத்துக் கொண்டு விஜய் ஓடும் காட்சிகளில் கில்லி தேவையில்லாமல் ஞாபகம் வந்து தொலைக்கிறது.(ஒரு படம் பார்த்தா பார்த்த அன்னிக்கே மறந்து போற சக்தியக் கொடு இறைவா!!!!!)&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துள்ளார்.(பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்ற அறிவுரை உட்பட).விஜயை சூப்பர்(காமெடி)மேனாக மாற்றியுள்ளார்கள்.வில்லன்கள் படம் முழுக்க சுட்டும் ஒரு குண்டு கூட மேலே படவில்லை.அடுத்த முறை சுடறதுக்கு நல்லா ட்ரெயினிங் எடுங்கப்பா...(ஹி..ஹி துப்பாக்கியைச் சொன்னேன்)&lt;br /&gt;&lt;br /&gt;திரிசா...டிட்டோ....பலபடங்களில் செய்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் க்ராஸ் ஆகும் பெண்களை அசிங்கமாக‌ப் பேசி காமெடி செய்வாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.இந்தப் படத்தில் டபுள்மீனிங் தூக்கல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லன்களாக‌ சுமன், ஆசிஷ்வித்யார்த்தி போன்றோர்.வில்லன்களாக அறிமுகமாகி காமெடியன்களாக முடிந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன.அதுவும் அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கும் மொழ..மொழன்னு பாட்டிற்கு விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.வித்யாசாக‌ர் பின்னியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ர‌த‌ன் இல்லாத‌ குறை வ‌சன‌ங்க‌ளில் தெரிகிற‌து.வெறும் பில்ட‌ப்புக‌ள் ப‌ட‌த்தின் முத‌ல் வார‌க் க‌லெக்ச‌னுக்கு ம‌ட்டுமே உத‌வும் என்ப‌தை வ‌ச‌ன‌க‌ர்த்தா உண‌ர்வார் என‌ ந‌ம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபிநாத்தின் காமிரா ப‌ட‌த்தைப் பிர‌ம்மாண்ட‌மாக‌ காட்டியுள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தரணியின் படங்களில் இருக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் படத்தில் இல்லாதது பெறும் குறை.அதிலும் இரண்டாம் பகுதி முழுவதும் சண்டைகளால் நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ங்க‌ர் எப்ப‌டி நாட்டைத் திருத்தும் க‌தைக‌ளில் சிக்கிக் கொண்டாரோ அதுபோல் த‌ர‌ணியும் இந்த‌ வ‌கைக் க‌தைக‌ளில் சிக்கிக் கொண்டாரோ என்று தோன்றுகிற‌து..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் படம் பரவாயில்லை.ஆனால் கில்லி போல் இல்லை.:-((&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4480223501657878818?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4480223501657878818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4480223501657878818' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4480223501657878818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4480223501657878818'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/05/blog-post.html' title='குருவி‍ - திரைவிமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2102451404124732776</id><published>2008-04-21T07:25:00.000-07:00</published><updated>2008-04-21T08:07:16.264-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>அறை எண் 305 ல் கடவுள் - விமர்சனம்</title><content type='html'>கடவுளின் பவரையே லவட்டிக் கொண்டு போகும் இரண்டு மேன்சன் வாழ் இளைஞர்கள் பற்றிய கதையில் லாஜிக் என்ற வஸ்துவை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாசம்,வன்முறை இல்லாத,வித்தியாசமான‌ படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சிம்புதேவனைப் பாராட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளாகப் பிரகாஷ்ராஜ்...அழகாக செய்திருக்கிறார்.கடவுளாகவும்,பின்பு பவர் திருடப்பட்ட பிறகு சாதாரண மனிதனாகவும் பின்னியிருக்கிறார்.ஆனால் தான் கடவுள் என்பதை நிரூபிக்க அடிக்கடி விண்டோஸ் டெஸ்க்டாப் பேக்ரவுண்டு மாற்றுவது போல் அடிக்கடி பேக்ட்ராப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தானம்...அநியாயத்திற்கு நடித்துள்ளார்.இப்படியே போனால் அடுத்த பேரரசு படத்தின் நாயகன் ஆகிவிடுவார் போல் இருக்கிறது.சந்தானத்திடம் நாம் எதிர்பார்க்கும் டைமிங் மிஸ்ஸிங்.:-((&lt;br /&gt;&lt;br /&gt;கஞ்சா கருப்பு நிறைவாக செய்துள்ளார்.தன் குடும்பத்தாருடனான காட்சிகளில் கலக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கூட கொஞ்சம் அதிகமாக வைத்திருப்போம்.அதைவிட குறைவாகத்தான் நாயகி மதுமிதாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.ஜோதிர்ம‌தியும் அவ்வ‌ப்போது வ‌ந்து போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ்,M.S பாஸ்கர்,இளவரசு,தலைவாசல் விஜய்,V.S ராகவன் என ரகளையான கேரக்டர்களை இயக்குநர் அறிமுகம் செய்கிறார்.ஆனால் அந்த அளவு இவர்களைப் பயன்படுத்தவில்லை என்பது கூடுதல் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறையேதும் இல்லை....,அட அட அட என்ற இரண்டு பாடல்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் மிகப் பெரிய குறை சிரிப்பு தேவனாக இருந்திருக்க வேண்டிய சிம்புத்தேவன்,அட்வைஸ் தேவனாக மாறி மொக்கை போட்டு இருப்பதுதான்.பல இடங்களில் கொத்தி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி சீனில் வரும் காமெடி படம் முழுக்க வந்திருந்தால் ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக இருந்திருக்கும்.இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.:-(((&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரின் ராசி எண்ணாண 8 வரும்படி டைட்டில் வைத்தால் மட்டும் போதாது என்பதை சிம்புத்தேவன் உணர அறை எண் 305 ற்கு வர்ம் கடவுளைப் பிரார்த்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்குறிப்பு.&lt;/strong&gt;&lt;br /&gt;85000 சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையினரின் கைகளை மொன்னையாக்கும் சிம்புத்தேவன் இப்படத்தை இயக்குவத்ற்கு மாதம் 3500 சம்பளத்திற்கும்,அவருடைய காட்பாதர் சங்கர் ரோபோ படத்தை இயக்குவதற்கு மாதம் 2500 சம்பளத்திற்கும் வேலை செய்துள்ளார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;கேட்கிறவன் கேனையனாக இருந்தால்............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2102451404124732776?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2102451404124732776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2102451404124732776' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2102451404124732776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2102451404124732776'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/04/305.html' title='அறை எண் 305 ல் கடவுள் - விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7916298648274010807</id><published>2008-04-08T06:48:00.000-07:00</published><updated>2008-04-08T07:21:41.925-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>யாரடி நீ மோகினி - திரை விமர்சனம்</title><content type='html'>தனுஷ் வேலைவெட்டி இல்லாத உருப்படாத இளைஞன்.அவருடைய பாசக்கார எதிரியான அப்பா ரகுவரன்.தீடீரென ஒரு நாள் வழியில் நயந்தாராவைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவர் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார் தனுஷ் &lt;br /&gt;:-)).தனக்குள் பற்றி எரியும் காதலை நயந்தாரவிடம் தனுஷ் சொல்ல "நோ" சொல்லிவிடுகிறார் நயன்.சிபாரிசுக்கு போகும் ரகுவரனையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.ரகுவரன் இறந்துவிடுகிறார்.ம‌ன‌மாற்ற‌த்திற்காக‌ ந‌ண்ப‌ணின் திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் கிராம‌த்திற்குச் செல்கிறார் த‌னுஷ்.அங்கே ம‌ண‌ப்பெண் ந‌ய‌ன்....இடைவேளை.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ய‌னின் மிக‌ப் பெரிய‌ குடும்ப‌ம் த‌னுஷை ஏற்றுக் கொண்டார்க‌ளா?த‌னுஷ்,ந‌ய‌ன் ஜோடி இணைந்த‌தா என்ப‌து மீதிக்க‌தை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌ 3,4 த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ள் சேர்ந்து பார்த்தது போல் உள்ள‌தா? :-((&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம்.இந்த பழைய கதைக்கு செல்வராகவன் விறுவிறுப்பான திரைக்கதையும்,போரடிக்காத வசனங்களும் எழுதித் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் பொல்லாதவனிற்கு பிறகு நடிப்பில் நல்ல முதிர்ச்சி.ஆனால் ஆங்காங்கே அவருடய‌ மாமனாரைக் காப்பியடிப்பது மட்டும் நெருடல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌ட‌த்தில் ந‌ய‌ந்தார‌வை ப‌ற்றி சொல்லாவிட்டால் புழ‌ல் சிறையில் தள்ளி விடுவார்க‌ள்.அவ்வ‌ள‌வு பாந்த‌மாக‌ இருக்கிறார்.ட‌ப்பிங் க‌லைஞ‌ரின் உத‌வியோடு ந‌ன்றாக‌ ந‌டிக்க‌வும் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ர‌குவ‌ர‌ன் வ‌ழ‌க்கமான பிரெண்ட்லியான‌ அப்பா.ஆனால் வ‌ழ‌க்கமான‌ என்று சொல்ல‌ முடியாத‌ அள‌விற்கு பின்னியுள்ளார்.ப‌ட‌த்தில் அவ‌ர் இற‌க்கும் காட்சியில் ஏனோ க‌ண்க‌ளில் இருந்து த‌ண்ணீர் வ‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;த‌னுஷின் ந‌ண்ப‌ராக‌ ந‌டிப்ப‌வர், அலைபாயுதே ப‌ட‌த்தில் இருந்து த‌ன‌க்கு நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ ஹீரோயினை ஹீரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வேலையை செய்து வ‌ருகிறார்.எப்போது தான் விடியுமோ பாவ‌ம் :-((&lt;br /&gt;&lt;br /&gt;க‌ருணாஸ் ஒரு சீனில் ம‌ட்டும் சிரிக்க‌ வைத்து விட்டுப் பின் அவ்வ‌ப்போது த‌லையை ம‌ட்டும் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து வயது பெண்ணின் காதல் எபிசோட் அபத்தம். அதிலும் அப்பெண்ணிற்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்.என்ன.. முடிக்கும் போது மெச்சூராக முடித்து தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.கொடுமை..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதி விறுவிறுப்பு பின்பகுதியில் சற்று குறைவு தான்,&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் ந‌ன்றாக‌ உள்ள‌து.அத‌ற்காக‌ இப்ப‌டியா சொல்லிக்காம கொள்ளிக்காம‌ திடீர் திடீர்னு வ‌ர்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜ‌வ‌ஹர் முத‌ல் ப‌ட‌ம் என்ற‌ சுவ‌டே தெரியாம‌ல் ந‌ன்கு இய‌க்கி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ரிந்துரை:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகியின் குடும்பப் பிண்ணணி காரணமாக தமிழ்மணத்தில் டவுசர் கிழியும் வாய்ப்பு உள்ளது.:-))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7916298648274010807?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7916298648274010807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7916298648274010807' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7916298648274010807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7916298648274010807'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/04/blog-post.html' title='யாரடி நீ மோகினி - திரை விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-1659848894817558222</id><published>2008-04-04T07:48:00.000-07:00</published><updated>2008-04-04T22:24:05.592-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் முக்கோணம்'/><title type='text'>உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்...வேறென்ன சொல்ல..(பதிவர் சந்திப்பு - 30/3/2008 கொஞ்சம் லேட்டான பார்வை).</title><content type='html'>தாழ்தளப் பேருந்தில்(Automatic Door)சென்றபடியால் காந்திசிலை சிக்னலில் இறங்க முடியாமல் கண்ணகி சிலை நிறுத்தத்தில் சென்று இறங்கினேன் :-((&lt;br /&gt;&lt;br /&gt;ஆடி அசைந்து நான் செல்வதற்குள் கூட்டம் களைகட்டத் துவங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூச்சத்தோடு என்னை அறிமுகம் செய்தவுடன் வினையூக்கி உங்கள் விமர்சனங்கள் படித்துள்ளேன்...தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் நித்யகுமாரன் அருகில் அமர்ந்து அவருடன் பேசும் போது நானாகவே "ஹி..ஹி எனக்கு இது கொஞ்சம் புதுசு.இவ்வுலகிற்கு வந்து 6 மாசம் தான் ஆகிறது" என்று சொன்னேன்.அதற்கு அவர் "நான் வந்து 2 மாசம் தான் ஆகிறது..ஒன்றும் பிரச்சினை இல்லை"என்று பதிலிறுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கூட்டத்திற்கு நம் ஆதர்ஷ நாயகன் வவ்வால் வந்திருக்கிறார்",என்ற வதந்தி கிளம்பிய போது,"ஒருவேளை அவரா இருக்குமோ..ஒருவேளை இவரா இருக்குமோ...ஒருவேளை அப்படி இருக்குமோ...ஒரு வேளை இப்படி இருக்குமோ என்றெல்லாம் குழம்பி,ஒருவேளை அது நானாகவே இருக்குமோ என்ற முடிவுக்கு வரும் அளவிற்குத் தெளிவாக இருந்தேன்.:-((&lt;br /&gt;&lt;br /&gt;"This cat ம் Milk Drink மோ "என்றவாறு மூஞ்சி வைத்திருந்த குசும்பன் வழக்கம்போல் எல்லோரையும் வாரிக்கொண்டும்,வாரப்பட்டுக் கொண்டும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கு வந்த டோண்டு சார் சுமார் 30 அடி உயரத்தில் குதித்து தான் ஒரு 65 வயது இளைஞர் என்று நிரூபித்தார்.(3 அடியை 30 அடி என்று எக்ஸாஸ்ஜிரேட் செய்வது சங்க காலத்து மரபு :-))&lt;br /&gt;&lt;br /&gt;மா.சிவக்குமார் இணையத்தில் மட்டுமில்லை, விசைப்பலகையிலும் தமிழை ஏற்றியே தீர வேண்டும் என்று தமிழ் ஒட்டியையும்(ஸ்டிக்கர்),மென்பொருள் குறுந்தகடு ஒன்றையும் விநியோகித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகுணாவிற்கும்,அதியமானிற்கும் உலகமயமாக்கல்,சந்தைப்பொருளாதாரம்,கோககோலா,மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி என்றெல்லாம் விவாதம் வந்த போது நான் "ஆத்தாடி !!!" என்று எதிர்திசைக்கு வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்திசையில் லக்கி கலக்கிக் கொண்டிருந்தார்.பாலகுமாரன்,சாரு,ஜெயமோகன்,சுஜாதா,பாட்ஷா,முகவரி பட வசனங்கள்,பதிவுலகம் என்று அனைவரும் கலந்துகட்டி பேசியது அந்தக் காலத்து குமுதம் படிப்பது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் என்ற நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது "சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம்...ஆனால் படிக்காதவர்கள் இருக்கமுடியாது"என்றெல்லாம் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசினார்கள் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;முர‌ளிக்க‌ண்ண‌ண்,ல‌க்கிலுக்,அதிஷா ஆகியோர் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு ரூபாய் புத்த‌க‌ம் வெளிக்கொண்டு வ‌ருவ‌து ப‌ற்றி பேசினார்க‌ள்.மிக நல்ல முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த முதல் நாளே வா..செல்வம் என்று தோள் மீது கை வைத்து உரிமையோடு அழைத்துச் சென்ற பாலா,&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வாங்க அங்க பழகலாம் என்று அன்போடு கூப்பிட்ட அதிஷா மற்றும் அவர் நண்பர்,&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் சொன்னவுடன் "நீ தானா அது??" என்று கேட்ட வரவனை,&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ.டி துறை,டெக்ஸ்டைல் துறை, ஈழத்தமிழர் பிரச்சினை",என்றெல்லாம் பேசிய நண்பர் பாரி, &lt;br /&gt;&lt;br /&gt;இருட்டில் கூட நான் கூலிங்கிளாஸ் அணிவதை நீங்கள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்த அபிஅப்பா,&lt;br /&gt;&lt;br /&gt;சாந்த சொரூபிகளாக காட்சியளித்த உண்மைத்தமிழன்,பைத்தியக்காரன்,சுந்தர்,ஆடுமாடு என வந்திருந்த அனைவரும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்..வேறென்ன சொல்ல...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சந்திப்பை ஆவலோடு எதிர்பார்த்து......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-1659848894817558222?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/1659848894817558222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=1659848894817558222' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/1659848894817558222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/1659848894817558222'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/04/3032008.html' title='உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்...வேறென்ன சொல்ல..(பதிவர் சந்திப்பு - 30/3/2008 கொஞ்சம் லேட்டான பார்வை).'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2454317857857918155</id><published>2008-03-27T07:10:00.000-07:00</published><updated>2008-03-27T07:38:29.525-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பங்குசந்தை'/><title type='text'>பங்குச்சந்தை - ‍சில நியாமான கேள்விகள்...</title><content type='html'>சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் (1,2)படித்தது,வீட்டில் தொலைந்துபோ என்று கொடுத்த 15000 ரூபாயை சந்தையில் முதலீடு செய்தது இதைத் தவிர எனக்கும் பங்குசந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.இதற்கே "வாரன் பப்பட்"ரேஞ்சுக்குப் பேசி இப்போது வாயைத்திறந்தாலே "போதும்! அடங்கு!" என்று சொல்லப்படும் என் துர்பாக்கிய நிலை பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.:-((&lt;br /&gt;&lt;br /&gt;வவ்வால் அவர்களின் பங்குசந்தை குறித்த சமீபத்திய பதிவினைப் படித்தேன்.அதில் அவர் "இந்தியாவின் gdp 8 சதவிகிதமாக இருக்கும் போது பங்குச்சந்தையின் வளர்ச்சி மட்டும் எப்படி 800 சதவிகிதமாக உள்ளது?" என்ற நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படித்ததும் எனக்கும் பின்வரும் சந்தேகங்கள் தோன்றின.யாராவது விளக்குங்களேன் ப்ளீஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு சந்தையில் லாப / நட்டங்கள் 2 வழிகளில் வருகிறது.அவையிவை.&lt;br /&gt;&lt;br /&gt;1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் Textile துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2)இரண்டாவது வழி அடுத்தவனை நஷ்டம் அடையச் செய்து நாம் லாபம் சம்பாதிப்பது.100 ரூபாய் பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை போகலாம்.200 ரூபாய்க்கு எப்படிப்போகும்? பெரிய பெரிய முதலைகள் "இந்நிறுவனம் நன்றாக உள்ளது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என்றெல்லாம் போங்கு ஆட்டம் ஆடி விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன.என்னைப் போல் அதி புத்திசாலிகள் அடடே...இப்படி ஒரு பங்கு இருப்பது நமக்குத் தெரியாம போச்சே!! என்று நினைத்து கொண்டு 200 ரூபாய் கொடுத்து வாங்குவோம்.அவ்வளவு தான்..விலை அப்படியே பேக் அடிக்க ஆரம்பிக்கும்.நம் பணம் கோவிந்தா...இது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;இது அரசாங்கத்தின் அனுமதியோடு நடத்தப் படும் சூதாட்டம் இல்லையா.நாம் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக நாம் நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை.ஆனால் எவனோ ஒருவன் பங்கு சந்தையில் லாபம் அடைய நாம் நஷ்டம் அடைவது என்ன நியாயம்?.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே 40% வட்டி தருகிறோம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் முதலீடு செய்து மோசம் போன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள்.எங்களிடம் வந்து   "Fundamental Analysis, Technical Analysis "என்று பல டெக்னிக்கல் விஷயங்களப் பேசி கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2454317857857918155?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2454317857857918155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2454317857857918155' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2454317857857918155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2454317857857918155'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/03/blog-post_27.html' title='பங்குச்சந்தை - ‍சில நியாமான கேள்விகள்...'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6333157692723868686</id><published>2008-03-11T07:57:00.000-07:00</published><updated>2008-03-11T07:58:35.393-07:00</updated><title type='text'>வெள்ளித்திரை - திரைவிம‌ர்ச‌ன‌ம்</title><content type='html'>"From the makers of Mozhi"என்ற எதிர்பார்ப்போடு வந்திருக்கும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாடம் 1 :(எந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்போடு செல்லக்கூடாது)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இரண்டு இளைஞர்கள்."என்ன செய்தாலும் சரி, நடிகனாக ஆகியே தீருவேன்" என்று பிரகாஷ்ராஜும்,"தரமான இயக்குநராகத்தான் ஆவேன்"என்று பிருத்விராஜும் சினிமா என்ற மாய உலகை சுற்றி சுற்றி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிருத்வியின் கதையைத் திருடி ஹீரோவாகிறார் பிரகாஷ்.படமும் ஓடி உச்சநடிகராகிறார்.பிருத்விக்கு அவர் கதை திருடப்பட்டதால் இயக்குநராகும் வாய்ப்பு பரிபோகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இடையே ந‌டிகையான கோபிகாவிற்கும்,பிருத்விக்கும் காத‌ல்.கோபிகா த‌ன் அண்ண‌ணோடு ச‌ண்டை போட்டுக் கொண்டு பிருத்வியைத் தீடீரென‌ ம‌ண‌ம் முடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ந‌டிகையின் க‌ணவ‌ர்"என்ற‌ சாயல் பிருத்வி மீது விழுந்ததும் அவர் சினிமா முயற்சியில் ஒரு தொய்வு ஏற்படுகிறது.இதை உணர்ந்து கோபிகா அவரை விட்டுப் பிரிகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ம‌ன‌ம் வெறுத்த‌ பிருத்வி த‌ன் கொள்கைக‌ளில் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்டு பிர‌காஷ்ராஜை வைத்து க‌ம‌ர்சிய‌ல் ப‌ட‌ம் ஒன்றை ஆர‌ம்பிக்கிறார்.அதில் அவ‌ர் ச‌ந்திக்கும் பிர‌ச்சினை என்ன‌ என்ப‌தே கிளைமாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பிர‌காஷ்ராஜ்  "நடிகன்" கதாபாத்திரத்தில் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளில் அல‌ப்ப‌றையாக‌ ஆர‌ம்பிக்கும் பிரகாஷ்,போக‌ போக சுண‌ங்கி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிருத்வி அநியாய‌த்திற்கு "Under Play"செய்திருக்கிறார்.தன் கதையை ஒருவன் திருடினாலும்,மனைவியே தன்னை விட்டுப் பிரிந்தாலும் ஒரே மாதிரியான ரியாக்சன்.படம் பார்ப்பவர் மனதில் எதுவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாட‌ம் 2:அதிகமான "Under play"வும் ஆபத்து.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;M.S பாஸ்கர்,சரத்பாபு,சார்லி முஸ்தபாவாக வருபவர்,அனைவரும் தங்கள் அனுபவத்தை காட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம்.விஜி வசனங்களில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாட‌ம் 3 :ந‌ல்ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ம‌ட்டும் ஒரு ப‌ட‌த்தை ஓட‌ வைக்காது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;G.V பிரகாஷ் இசையில் ஒரு பாடல் O.K.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டி.வி பாணியில் சொல்வதானால் வெள்ளித்திரை‍ இன்னும் மின்னியிருக்காலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6333157692723868686?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6333157692723868686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6333157692723868686' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6333157692723868686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6333157692723868686'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/03/blog-post_11.html' title='வெள்ளித்திரை - திரைவிம‌ர்ச‌ன‌ம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4556492765427190335</id><published>2008-03-05T05:46:00.000-08:00</published><updated>2008-03-05T05:56:25.631-08:00</updated><title type='text'>வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும் - தமிழ்மணம் - லக்கிலுக் அவதூறு</title><content type='html'>அவர்கள் இருவரின் உறவுகுறித்த நையாண்டிகள் அக்கட்சி மேடைகளில் பலகாலமாக பேசப்பட்டாலும், சில வார்த்தைகளை பூடகமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் மிக பச்சையாக திருக்கடையூர் விவகாரம் குறித்து "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" என்றெல்லாம் வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார் லக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அபிமானம் அவரது எழுத்தை தரமற்றதாக ஆக்கி வருகிறது என்பதை எப்போது தான் உணர்வாரோ? இந்த முறை தமிழ்மணத்தில் அவர் எழுதியுள்ள இடுகையை வாசிக்கும்போது ஒன்றுமே தோணவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல் சம்பந்தமில்லாமல் அதே இடுகையில் "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" பாடலை லக்கி போட்டிருப்பது உச்சக்கட்ட ஆபாசம். லக்கியின்  இந்த இடுகையை ஒரு சராசரி வாசகன் உடனடியாக அவர்கள் இருவரோடு இணைத்து தான் சிந்திப்பான். அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் லக்கி அத்துமீறல் செய்திருக்கிறார் என்பதே தெளிவான உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி கிளப்பியது அவதூறா? அல்லது லக்கி இந்த கட்டுரையின் மூலம் கிளப்பியிருப்பது அவதூறா? என்பதை அக்கட்டுரை வாசித்த லட்சக்கணக்கான தமிழ்மணம் வாசகர்கள் அறியமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ல‌க்கியின் க‌ட்டுரையை எல்லோரும் வாசித்திருப்போம் என்ப‌தால் சுட்டி கொடுக்க‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;1)இது அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட லக்கியின்  கும்மி ஸ்டைல்.என்னதான் எழுதினாலும் அவர் அளவிற்கு இல்லை என்பது நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌டைசியாக‌ கொசுறு கும்மி:&lt;br /&gt;&lt;br /&gt;வ‌லைப்ப‌திவுல‌க‌த்தின் ட்ரெண்ட் செட்ட‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ல‌க்கியின் புது ட்ரெண்ட்டிற்கு வாழ்த்துக்க‌ள்.(ஒன்னும் தெரியாத‌ பாப்பாக்க‌ளுக்கு...ல‌க்கியின் பின்னூட்ட‌ங்க‌ளைப் பார்க்க‌வும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4556492765427190335?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4556492765427190335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4556492765427190335' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4556492765427190335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4556492765427190335'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/03/blog-post.html' title='வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும் - தமிழ்மணம் - லக்கிலுக் அவதூறு'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8988296014773515548</id><published>2008-02-29T06:48:00.000-08:00</published><updated>2008-02-29T07:09:12.351-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினால் கெட்டுவிடுவோமா?என்ன கொடுமை சார் இது...</title><content type='html'>சுஜாதாவின் நினைவாக சுஜாதா...என்ற இடுகையை இட்டிருந்தேன்.அதில் சுஜாதாரசிகன் என்ற பெயரில் ஒரு நண்பர் வந்து "மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினை முழுவதும் சொல்லி, இது தான் இலக்கியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அவ‌ருக்கு சொல்ல‌ விரும்புவ‌து ஒன்றே ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா மட்டும் அந்த‌ மாதிரி எழுதியிருக்காவிட்டால் நான் ந‌ல்ல‌ பைய‌னாக‌ இருந்திருப்பேன் என்ப‌து வ‌டிவேலு காமெடியை விட‌ சிற‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதியிருந்தாலும்,எழுதியிராவிட்டாலும் நாம் இப்ப‌டியேதான் இருந்திருப்போம் என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா என்ற‌ வார்த்தையைக் கூட‌ கேள்விப் ப‌டாத‌ ந‌ம் கிராம‌த்து ம‌க்க‌ளின் பாலிய‌ல் க‌தைக‌ளை கி.ரா அவ‌ர்க‌ள் தொகுத்து த‌ந்திருக்கிறார்.(நாட்டுப்புற‌ பாலிய‌ல் க‌தைக‌ள்).ப‌டித்துப் பாருங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழ்க்கை முழுவ‌தும் ந‌ல்லவ‌ராக‌ இருப்ப‌த‌ற்கு ஒரே ஒரு வ‌ழிதான் உள்ள‌து.பிற‌ந்த‌வுட‌னே ஒரு அறைக்குள் சென்று க‌த‌வை மூடிக் கொண்டு இற‌ந்த‌ பிற‌கு தான் வ‌ர‌வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம் வாழ்க்கையில் ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளும் கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளும் ச‌ரி பாதி க‌ல‌ந்து தான் இருக்கும்.தேர்வு ந‌ம் கையில் தான் உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்ஸிகோ ச‌ல‌வைக்காரியையும் தாண்டி, பிராம‌ண ஆத‌ர‌வையும் தாண்டி,எழுத்து வியாபார‌த்தையும் தாண்டி அவ‌ருடைய‌ எழுத்து ந‌ம் அனைவ‌ரையும் பாதித்து உள்ள‌து என்ப‌தே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ இடுகைக்கு "தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா"என்ற‌ பெய‌ர் தான் வைக்க‌லாம் என்று இருந்தேன்.எதுக்கு வ‌ம்பு?யாரும் வ‌ந்து ப‌டிக்க‌மாட்டார்க‌ள் என்று தான் பெய‌ர் மாற்றி வைத்தேன்.&lt;br /&gt;(இதே விச‌ய‌த்தைத் தான் அவ‌ரும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பின்ப‌ற்றினார்.:-))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8988296014773515548?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8988296014773515548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8988296014773515548' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8988296014773515548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8988296014773515548'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_29.html' title='மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினால் கெட்டுவிடுவோமா?என்ன கொடுமை சார் இது...'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8535724326317206453</id><published>2008-02-28T10:03:00.000-08:00</published><updated>2008-02-28T10:04:21.015-08:00</updated><title type='text'>சுஜாதா....மீள்பதிவு</title><content type='html'>சுஜாதா தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்‍‍‍‍-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;1)சிறுகதைகள்‍ - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு &lt;br /&gt;&lt;br /&gt;2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)&lt;br /&gt;&lt;br /&gt;4)இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன்,மனுஷ்யபுத்திரன் போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைஎல்லாம் விட‌ ஸீரீர‌ங்க‌த்து தேவ‌தைக‌ள் (ப‌குதி 1) அவ‌ருடைய‌ ப‌டைப்பின் உச்ச‌ம் என்று கூட‌ சொல்ல‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதை எழுதினாலும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் நினைவுகளோடு.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-8535724326317206453?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/8535724326317206453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=8535724326317206453' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8535724326317206453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/8535724326317206453'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_1280.html' title='சுஜாதா....மீள்பதிவு'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4426133581422273067</id><published>2008-02-27T10:21:00.000-08:00</published><updated>2008-02-27T10:35:32.438-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>போய் வாருங்கள் சுஜாதா....</title><content type='html'>நீங்கள் ரோபோ படத்திற்கு இன்னும் இளமையாய் வசனம் எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ற்ற‌தும்..பெற்ற‌தும் தொட‌ர் அறிவிப்பு இந்த‌ வார‌மாவ‌து வ‌ந்து விடாதா???என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌த்திய‌மாய் இதை நாங்க‌ள் எதிர்பார்க்க‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க‌ளையெல்லாம் வாசிக்க‌ வைத்து, சிரிக்க‌ வைத்து, சிந்திக்க‌ வைத்த உங்க‌ள் எழுத்துக‌ளுக்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;உங்க‌ள் ஆத்மா சாந்திய‌டைய‌ட்டும்.உங்க‌ள் நினைவுக‌ள் எங்க‌ள் நெஞ்சில் எப்போதும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;THANK YOU VERY MUCH OUR DEAR SUJATHA....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4426133581422273067?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4426133581422273067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4426133581422273067' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4426133581422273067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4426133581422273067'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_27.html' title='போய் வாருங்கள் சுஜாதா....'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-5502391851897486338</id><published>2008-02-26T06:19:00.000-08:00</published><updated>2008-02-26T06:47:40.956-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் மொக்கை'/><title type='text'>காதலிப்பவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்களா???</title><content type='html'>என்ன நிசமாலுமே லவ் பண்றியா?...போடா லூசு(காதல் திரைப்படம்)&lt;br /&gt;&lt;br /&gt;நிசமாத்தான் சொல்றீயா??(கற்றது தமிழ்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழகா இருக்கேனா???(கண்ணாடில பாத்தாலே தெரியுமே!!)&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஏமாத்திற‌ மாட்டியே???(இது ஒட்டுக் கேட்ட‌து)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஆயிர‌ம் ஹார்மோன்த‌ன‌மான கேள்விக‌ள் இருந்தாலும் பின்வ‌ரும் முக்கிய‌மான‌ கேள்விக‌ளை சாய்ஸில் விட்டு விடுகிறார்க‌ள் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1)உன் எதிர்கால‌ க‌ன‌வு என்ன?(என் ச‌ம்ப‌ள‌ம் 6500 ரூபாய்தான்.)&lt;br /&gt;&lt;br /&gt;2)க‌ல்யாண‌த்திற்கு அப்புற‌மா உங்க‌ அப்பா அம்மாவையும்,எங்க‌ அப்பா அம்மாவையும் நாடு க‌ட‌த்திர‌லாமா?இல்ல‌ இங்க‌யே இருந்து தொலைக்க‌ட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;3)க‌ல்யாண‌த்திற்கு அப்புறமா கொஞ்ச நாட்களிலேயே என‌க்கு டி.வில‌ கிரிக்கெட்,உன‌க்கு டி.வி ல‌ சீரிய‌ல் ஓ.கே வா?&lt;br /&gt;&lt;br /&gt;4)இனிமே வரப்போற 40 வருசத்துக்கும் இதே மூஞ்சிதான்.பரவாயில்லையா?(இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்...என்ன பண்றது விதி)&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;Annexure 1&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த அனுபவம் இல்லை.காரணம் என் கல்லூரிப் பருவத்தின் ஒரு தலைக்காதலைத் திரைப்படமாக எடுத்தால் அது அவ்வாண்டின் சிறந்த நகைச்சுவைப் படமாக அமையும்.அதன் ஒன்லைன் இதான்...&lt;br /&gt;&lt;br /&gt;"என் வாழ்க்கை எனும் சினிமாவில் அவளை நான் ஹீரோயினாகப் பார்க்க அவள் என்னைக் காமெடியனாகப் பார்த்தாள்.:-((&lt;br /&gt;&lt;br /&gt;Annexure 2&lt;br /&gt;&lt;br /&gt;Phone-in நிகழ்ச்சியில்..&lt;br /&gt;நான்:மேடம் என்னை யாரும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;டெலிபோன் பெண்:அப்படியா?நீங்க எப்படி இருப்பீங்க சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நான்:ரஜினி மாதிரி&lt;br /&gt;&lt;br /&gt;டெ.பெ:ஸ்டைலாவா??&lt;br /&gt;&lt;br /&gt;நான்:இல்ல கருப்பா....S.P.B மாதிரி...&lt;br /&gt;&lt;br /&gt;டெ.பெ:நல்லா பாடுவீங்களா???&lt;br /&gt;&lt;br /&gt;நான்:இல்ல குண்டா இருப்பேன்.அப்புறம் நம்ம S.J சூர்யா மாதிரி...&lt;br /&gt;&lt;br /&gt;டெ.பெ:அய்யய்யோ....Better Luck Next ஜென்மம்!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-5502391851897486338?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/5502391851897486338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=5502391851897486338' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5502391851897486338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/5502391851897486338'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_26.html' title='காதலிப்பவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்களா???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-626707946281139858</id><published>2008-02-18T19:52:00.000-08:00</published><updated>2008-02-18T20:59:55.961-08:00</updated><title type='text'>அஞ்சாதே ‍- திரைவிமர்சனம்</title><content type='html'>அலுவலகத்தில் ஆணி பிடுங்குவதற்காக பாண்டிச்சேரி அனுப்பியிருந்தார்கள்.ஆணியெல்லாம் பிடுங்கி முடித்தபின்பு நைட்சோ - ‍அஞ்சாதே.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யா,கிருபா என இரு நண்பர்கள்.இருவரின் அப்பாக்களும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள்.கிருபா போலீஸ் ஆகியே தீருவது என்ற வெறியோடு பயிற்சி எடுக்கிறான்.சத்யாவோ போலீஸில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்டீரீட் தாதாவாகச் சுற்றுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யாவின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்ட எப்போதும் கிருபாவுடன் ஒப்பிடுகிறார் சத்யாவின் அப்பா.இந்நிலையில் சிறுமிகளை பணத்திற்காகவும்,பலாத்காரத்திற்காகவும்  கடத்திக் கொண்டு போகும் தயா கும்பலின் என்ட்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;கிருபாவின் தங்கை குளிப்பதை தயா பார்ப்பதைப் பார்த்து டென்சனாகும் சத்யா கோவில் திருவிழாவின் போது தயாவைப் போட்டு பின்னியெடுக்கிறான்.இதைப் பார்த்த சத்யாவின் அப்பா அனைவர் முன்னிலையிலும் "நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்டா" என்று சத்யாவை அவமானப் படுத்த கோபமடைந்த சத்யா அவன் மாமா மூலமாக குறுக்கு வழியில் போலீஸில் சேர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முறையான‌ பயிற்சி எடுத்துவ‌ரும் கிருபாவிற்கு போலீஸ் வேலை கிடைக்காம‌ல் போக, இத‌ற்குக் கார‌ண‌ம் குறுக்கு வ‌ழியில் வேலை வாங்கிய‌ ச‌த்யாதான் என்று அவ‌ன் மீது கோப‌ம் கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு சேர்ந்த புதிதில் போலீஸ் லைப் ஸ்டைலாலும், கிருபாவின் விரக்தி நிலையைப் பார்த்தும் சத்யா வருந்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யாவின் மீதான கிருபாவின் கோபத்தை தயா தன் சிறுமிகளைக் கடத்தும் தொழிலுக்குப் பயன்படுத்திகொள்கிறான்.கிருபாவும் பணத்தேவை,விரக்தி மற்றும் சத்யா மீதுள்ள கோபம் இவற்றால் தயாவுடன் சேர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கும்பலைப் பிடிக்க பொன்வண்ணண் தலைமையில் ஒரு டீம் ஏற்பாடு செய்யப் படுகிறது.சத்யாவும் அந்த டீமில் ஒரு ஆளாக போடப்படுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;தயா கும்பலைப் எப்படிப் பிடித்தார்கள்?அனைவரின் முடிவு என்ன என்பது தான் கிளைமேக்ஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;சத்யாவாக நரேன்.சத்யாவாகவே மாறியிருக்கிறார்.ஆரம்பத்தில் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு அலம்பல் பண்ணுவது,போலீஸ் ஆன பின்பு அவர்கள் லைப்ஸ்டையிலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது,நண்பனும் தயா கும்பலோடு சேர்ந்து விட்டான் என்று வருத்தப் படுவது என்று பல இடங்களில் பின்னியிருக்கிறார்.ஆனால் ஆங்காங்கே ச‌ற்றே ஓவ‌ராக்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருபாவாக‌ அமீர்.த‌ன் லுங்கியை க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ பெண் அணிந்திருப்ப‌தைப் பார்த்த‌வுட‌ன் த‌லையில் அடித்துக் கொள்வ‌து, போலீஸ் ஆக‌ முடியாத‌ விர‌க்தி, என்று இவ‌ரும் மிர‌ட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌யாவாக‌ பிர‌ச‌ன்னா.காக்க..காக்க‌ ஜீவ‌னையும்,வேட்டையாடு..விளையாடு இளாவையும் ஞாப‌க‌ப்ப‌டுத்தும் க‌தாபாத்திர‌ம்.ஆனால் த‌ன் ந‌டிப்பாலும்,மேன‌ரிச‌ங்க‌ளாலும்,அந்த சாயலே தெரியாமல் வித்தியாசப்ப‌டுத்திக் காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ அங்கிள்!எப்படி இருக்கீங்க என்ற ஒற்றை வரியை மட்டும் டயலாக்காகப் (சென்னை 600028) பேசிய விஜயலக்ஷ்மி இதில் குறிப்பிடத்தகுந்த பாத்திரத்தை செய்துள்ளார்.ஹீரோவுடன் டூயட் பாடாமல் சமீபத்தில் நடித்த ஒரே ஒரு ஹீரோயின் இவராகத்தான் இருப்பார்.(திரிசா,அசின் கவனிக்க)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் M.S.பாஸ்கர்,பொன்வன்னன், பாண்டியராஜன்,லிவிங்ஸ்டன்,குருவி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பவர் என அனைவரும் கச்சிதமான பாத்திரப்படைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் உண்மையான ஹீரோ மிஷ்கின் தான்.தேர்வு செய்த கதையில் ஆகட்டும்,அதற்கு அவர் அமைத்த திரைக்கதை ஆகட்டும், படமாக்கியவிதமாகட்டும் மிஷ்கின் கலக்கியுள்ளார்.படத்தில் நிறைய புதுமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1) கைக‌ளையும்,கால்க‌ளையும் ம‌ட்டும் நடிக்க‌ வைத்து சீன் மூடைக் கொண்டுவ‌ரும் காட்சிக‌ள் நிறைய‌ உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;2) வான‌த்தில் காட்ட‌ப்ப‌டும் அரைநிலா,கிருபா சேற்றில் விழுவ‌து, கிருபாவின் த‌ங்கை அவ‌னை அடிக்க‌டி கைவில‌ங்கால் க‌ட்டிப்போடுவ‌து என்று நிறைய‌ காட்சிக‌ள் பொய‌ட்டிக் ஆக‌ உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌கேஷின் ஒளிப்ப‌திவு.அதை விட‌ ப‌ட‌த்தின் லைட்டிங்.ஒவ்வோர் மூடிற்கும் ஒரு லைட்டிங் என‌ அச‌த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தில் இர‌ண்டே இர‌ண்டு பாட‌ல்க‌ள் தான்.சேர்த்து வைத்து பிண்ணணி இசையில் மிர‌ட்டிவிட்டார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;BTW "கண்ணதாசன் காரைக்குடி...என்ற பார் பாடலுக்கு ஏன் பாண்டியில் அவ்வளவு விசில்..எனக்குப் புரியவேயில்லை..யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ...&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக்காட்சியில் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு ஹீரோவும்,வில்லனும் சண்டை போடுவது போன்ற அபத்தக் காட்சிகளும் உண்டு.ஆனால் அதெல்லாம் மிகவும் குறைவே.வ‌ன்முறை ஜாஸ்தி.16 வ‌ய‌து சிறுமிக‌ள் என்ற‌ வ‌க்கிர‌ உணர்வைத்த‌விர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌ ஒரு த‌மிழ்த்திரைப்ப‌ட‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ப் ப‌ட‌ம் ம‌ட்டும் ஓடாவிட்டால் காளைக‌ளும்,ப‌ழ‌னிக‌ளும் உங்க‌ளைத்(க‌ன‌வில்) துர‌த்தும் என்று அன்போடு எச்ச‌ரிக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-626707946281139858?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/626707946281139858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=626707946281139858' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/626707946281139858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/626707946281139858'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_18.html' title='அஞ்சாதே ‍- திரைவிமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7743670339330794408</id><published>2008-02-17T08:05:00.000-08:00</published><updated>2008-02-17T08:32:00.502-08:00</updated><title type='text'>ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?</title><content type='html'>&lt;strong&gt;"பூஜா - சிங்களத்துக்காரி&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியா - மலையாளத்தான். ஜம்ஷத்துண்ணு பேரு&lt;br /&gt;&lt;br /&gt;கோணங்கி -  தேவமாரு."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கூறிய அறிய தகவல்கள் அனைத்தும் நம் எழுத்துலக டைனசோரான திரு.ஜெயமோஹன் அவர்களின் (அதிகமில்லை ஜென்டில்மேன்...)2 பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு ப‌திவுக‌ளில் இருந்து 3 பேர்க‌ளின் சமூக‌த்தை அறிய‌ முடிகிற‌து என்றால்,அவ‌ருடைய‌ ல‌ட்ச‌க்க‌ணக்கான‌ க‌ட்டுரைக‌ளைப் ப‌டித்தால் 10 கோடி த‌மிழ‌ர்க‌ளின் ச‌மூக‌த்தையும் அறிந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாதி இரண்டொழிய வேறில்லை"...."யாவருங் கேளீர்"...என்றெல்லாம் சொல்லிக் கொடுத்த நம் தமிழ் மொழியை 1 இஞ்ச் மேலே உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை,எட்டிக் கீழே தள்ளாமல் இருந்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தோ,தெரியாமலோ நீங்கள் இந்த சமுதாயத்தின் icon ஆக உள்ளீர்கள்.உங்களைப் படித்து உங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தாலும் இருப்பார்கள்.அவர்களுக்காகவாது நீங்கள் எழுதுகின்ற‌ விஷயங்களை நீங்களே ஒருமுறை படித்து விட்டு அச்சு/வலையில் ஏற்றுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7743670339330794408?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7743670339330794408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7743670339330794408' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7743670339330794408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7743670339330794408'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_17.html' title='ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7088581625139963753</id><published>2008-02-15T20:42:00.000-08:00</published><updated>2008-02-15T21:18:16.348-08:00</updated><title type='text'>நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!</title><content type='html'>"எல்லாவற்றையும் பகடி செய்வது சிதைந்த மனது" என்று அய்யனார் அவர்களின் பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஆம் அப்படிப் பார்த்தால் அந்த சிதைந்த மனது எனக்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் பருமனாக இருப்பேன்.(கொஞ்சம் என்பது பொய்).என்னுடைய கல்லூரிப்பருவத்தில் இதனால் நம்மை யாரும் ஓட்டுவார்களோ என்ற தாழ்வுமனப்பான்மையில் நான் எல்லோரையும் ஓட்ட ஆரம்பித்தேன் நகைச்சுவை என்ற பெயரில்.அத‌ற்கு எல்லோரும் சிரிப்பார்க‌ள்.நான் யாரை ஓட்டுகிறோனோ அவ‌ரைத்த‌விர‌.&lt;br /&gt;&lt;br /&gt;நாள‌டைவில் எப்ப‌டி எல்லோரையும் ஓட்டுவ‌து என்று வித்தை (!)ப‌ழ‌க்க‌மான‌து.அதிலும் பெண்கள் அருகில் இருந்தால் இரு மடங்கு சக்தி வந்துவிடும்.இத‌னால் என‌க்கு எல்லோரும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்.ஆனால் நெருக்கமாக ஒருவர் கூட‌ இல்லை என்ற‌ நிலை உருவான‌து.&lt;strong&gt;அவ‌னைத்&lt;/strong&gt;த‌விர‌.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிட‌ம் பேசிக்கொண்டிருந்தால் 10 நிமிட‌ங்க‌ள் பொழுது போகும் என்ற‌ நிலைமையில் தான் என்னிட‌ம் எல்லோரும் ப‌ழ‌கினார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து நான் &lt;strong&gt;அவனிடம்&lt;/strong&gt; வருத்தப்படும் போதெல்லாம், "இதற்கெல்லாம் காரணம் நீயே தான்...ஒருவர் நம்மைப் பற்றி தப்பு சொன்னால் அவரைக் குறை சொல்லலாம்..ஆனால் எல்லோரும் நம்மைப் பற்றிக் குறை சொன்னால் நாம் தான் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்"என்று சொல்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்னைப்பற்றி சுயபரிசோதனை செய்து பார்த்ததில் என் தவறுகள் புரிய ஆரம்பித்தது.ஆனால் என்ன கல்லூரிப் பருவம் முடிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கதம் குறித்து என் அனுபவத்தில் அறிந்து கொண்டவை:&lt;br /&gt;&lt;br /&gt;1)நாம் ஒருவரைக் கிண்டல் செய்யத் துவங்கும் போது அவர்களை விட நம்மை உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2)நம்முடைய கிண்டலுக்கு அடுத்தவர்கள் சிரிக்கும் போது நம் கண்கள் மேலே செருக ஆரம்பிக்கும்.உலகத்திலேயே நமக்கு கீழ் தான் எல்லோரும் என்ற நினைப்பு உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;3)உண்மை புரியும் போது நம் கூட நெருக்கமாக யாரும் இருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4)ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஜெயமோஹனும் அங்கதம் என்ற பெயரில் நான் செய்ததைத்தான் செய்துவருகிறார்.எனக்காவது என் தவறுகளை சுட்டிக்காட்ட அவன் இருந்தான்.ஆனால் அவருக்கு....அவருக்குத்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நான் ஒன்றும் ஜெயமோஹன் அளவிற்கு உயர்ந்துவிடவில்லை.அவர் தான் என் அளவிற்கு தாழ்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசியாக ஜெயமோஹனிடம் ஒரு கேள்வி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துலக டைனசோரான நீங்கள் வசனம் எழுதித் தள்ளிய,தமிழ்நாட்டிலேயே 1000 நாட்கள் ஓடி சாதனை செய்த "கஸ்தூரிமான்"என்ற திரைக்காவியத்தை விட பழைய படங்கள் எதில் குறைந்து விட்டது?&lt;br /&gt;(இதுவும் அங்க‌த‌ம் தான்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7088581625139963753?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7088581625139963753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7088581625139963753' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7088581625139963753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7088581625139963753'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_15.html' title='நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2053668353000383853</id><published>2008-02-12T05:09:00.000-08:00</published><updated>2008-02-12T05:30:18.959-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ராஜ்தாக்கரேவும்,கலைஞரும் ஒன்றா? - என்ன கொடுமை சார் இது?</title><content type='html'>//மலேசிய தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்கலாம்; நான் மராட்டியர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்//&lt;br /&gt;&lt;br /&gt;அடி கொடுப்பவர்களும், அடி வாங்குபவர்களும் ஒன்று என்று கண்டுபிடித்து சொன்ன ராஜ்தாக்கரே இன்று முதல் "&lt;strong&gt;இந்தியாவின் ஒரே விஞ்ஞானி&lt;/strong&gt;"என்று அன்போடு அழைக்கப்படுவார்.(courtesy - புலிகேசி)&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் தமிழர்கள் அடிவாங்கியதற்காக கலைஞர் குரல் கொடுத்தாரேயன்றி,மலேசியர்களை அடித்துவிட்டு குரல் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ற்ற‌ மாநில‌ம‌க்க‌ளை அடித்து துரத்தும் ப‌ழ‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் கிடையாது.அவ‌ர்க‌ளுக்கு என்று ஒரு த‌னி ஏரியாவைக் கொடுத்து (ச‌வுக்கார்பேட்)அவ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கிறார்க‌ளா என்று ம‌ட்டும் அவ்வ‌ப்போது பார்த்து வ‌ருவோம்.(சைட் அடிக்கிற‌துக்கு என்னா பில்ட‌ப்பு..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..)&lt;br /&gt;&lt;br /&gt;மொழிப்போராட்ட‌த்தோடு இதை போட்டுக் குழ‌ப்பிக் கொள்ளும் ஆப‌த்து இருப்ப‌தால் முன்னெச்ச‌ரிக்கையாக‌ இப்போதே சில‌ விள‌க்க‌ங்க‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;1)வ‌ட‌ நாட்டுக்கார‌ர்க‌ளின் மொழியைத்தான் வேண்டாம் என்று சொன்னோமே த‌விர‌ வ‌ட‌நாட்டு ஆட்கள் இங்கு வ‌ருவ‌தை வேண்டாம் என்று சொன்ன‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2)"நான் உங்க‌ள் ஊரில் வியாபார‌ம் செய்ய‌ வேண்டும்..ஒழுங்காக‌ எங்க‌ள் மொழியைப் ப‌டியுங்க‌ள்"என்ப‌து போங்கு ஆட்ட‌ம் என்ப‌தால் தான் ஹிந்தியை வேண்டாம் என்று சொன்னோம்.&lt;br /&gt;&lt;br /&gt;3)"ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன‌தால் தான் எங்க‌ளுக்கு என்று த‌னி ச‌ந்தை உள்ள‌து.தனித் திரைப்ப‌ட‌ங்க‌ள்,தொலைக்காட்சிக‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள்  உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எங்களை வைத்து ஒன்றும் காமெடி...கீமெடி பண்ணவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ கொடுமை சார் இது?" என்ற‌ த‌லைப்பில் இனி அடிக்க‌டி இது போன்ற‌ சீரிய‌ஸ் விசய‌ங்க‌ள் சிரிய‌ஸாக‌ அல‌ச‌ப்ப‌டும் என்ப‌தை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2053668353000383853?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2053668353000383853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2053668353000383853' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2053668353000383853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2053668353000383853'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_12.html' title='ராஜ்தாக்கரேவும்,கலைஞரும் ஒன்றா? - என்ன கொடுமை சார் இது?'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4021500919497235111</id><published>2008-02-11T05:36:00.000-08:00</published><updated>2008-02-11T06:22:23.727-08:00</updated><title type='text'>A.R.ரஹ்மான்‍ இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வை</title><content type='html'>சனிக்கிழமை பக்கத்து வீட்டு பையன் ஓடோடி வந்தான்."அண்ணா என்கிட்ட live concert க்கு 2 டிக்கெட் இருக்கு.உங்க‌கிட்ட வண்டி இருக்கு.உங்க வண்டில போலாம்னு சொன்னீங்கன்னா உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றான்.ஒரு நிமிடம் பொல்லாதவன் தனுஷ் போல் உணர்ந்தேன்."சண்முகம் உட்றா வண்டிய"ன்னு(நாட்டாமை) சொல்லிக்கிட்டு என் சூரப்புலியைக் கிளப்பினேன்.(தெரியாதவர்களுக்கு சூரப்புலி என்பது ஹீமேனின் வாகனம்)...(டேய் நீ வச்சிருக்கிற‌ xl super க்கு இது கொஞ்சம் ஓவர்டா என்று என் தம்பி சவுண்டு விட்டான்) &lt;br /&gt;&lt;br /&gt;YMCA போனவுடன் முதல் நுழைவுவாயிலில் நுழைந்தோம்.பதறிப் போன security "சார்..இது VIPங்க வர்ற வழி.நீங்க 4 வது வாசல் வழியா போங்க" என்றார்.(அங்கிருந்து பார்த்த போது A.R.ரஹ்மான் ஒரு புள்ளி போலத்தான் தெரிந்தார்.:-(( &lt;br /&gt;&lt;br /&gt;MARG என்ற கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாதலால் முதலில் அவர்கள் நிறுவனத்தைப் பற்றி சிறிது நேரம் பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;A.Rரஹ்மான் மேடைக்கு வந்த போது அந்த மைதானமே அதிர்ந்தது.வாணவேடிக்கைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.A.R.ரஹ்மான் ஹிந்தி பாடலைப் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;(எனக்கு "துமாரா நாம் கியா ஹை?" தவிர வேறு எதுவும் ஹிந்தியில் தெரியாது என்பதால் தமிழ்ப் பாடல்கள் பற்றி மட்டும் இங்கே...)&lt;br /&gt;&lt;br /&gt;ஹ‌ரிஹ‌ர‌ன்,சித்ரா,சின்ம‌யி,ஷ்ரேயாகோச‌ல்,பிளேஸ்,போன்ற‌ பாட‌க‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள்.(இன்னும் சில‌ பேர் பெய‌ர் தெரிய‌வில்லை..ஹி..ஹி..)&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிஹ‌ர‌ன் ரோஜா பாட‌லில் இருந்து துவ‌ங்கினார்.வாய்ஸும்,இசையும் பொருந்தாம‌ல் ஏதோ சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் ஆடிஷ‌ன் ர‌வுண்டு பார்ப்ப‌து போல் இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;A.R.ரஹ்மான் பாடிய‌ அத்த‌னை பாட‌ல்க‌ளும் அருமையாக‌ இருந்த‌து."அதிர‌டிக்காரன் மச்சான்..." (சிவாஜி)பாட‌ல் A.R.ரஹ்மானின் அதிர‌டி..&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரா "க‌ண்ணாள‌ணே என‌து க‌ண்ணை..."(ப‌ம்பாய்)பாட‌லைப் பாடிய‌ போது ப‌ய‌ங்க‌ர‌ கிளாப்ஸ்.அவ‌ருடைய‌ குர‌லுக்கு ஒரு ஊரையே எழுதிவைக்க‌லாம்.என் பெய‌ரில் எந்த‌ ஊரும் இல்லாத‌தால் கை வ‌லிக்கும் வ‌ரை கை ம‌ட்டும் த‌ட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளேஸ் "வாடா..வாடா(சிவாஜி) பாட‌லைப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மதுரைக்கு போகாதடி...(ATM)பாடலை அந்த பாடகரே வந்து அசத்தலாகப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது நியாயமா??.. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1)"மதுரைக்கு போகாதடி.."பாட்டிற்கு கிடைத்த வரவேற்பு "தில்சேரே..." பாடலுக்கு இல்லாத போது ஏன் இவ்வளவு ஹிந்தி பாடல்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;2)நீங்க‌ள் கொடுத்த‌ ஹிட் ப‌ட‌ங்க‌ள் ஏராள‌மாக‌ இருக்கும் போது ஏன் பாட‌ல் தேர்வில் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல்?(சிவாஜியில் இருந்து 3 பாட‌ல்க‌ள், ATMலிருந்து 3 பாடல்கள்,குரு ஹிந்தி படத்தில் இருந்து 3 பாடல்கள்..ஏன் உங்கள் ஹிட்டுகள் மறந்து விட்டதா?இல்லை பாடகர்கள் பற்றாக்குறையா?&lt;br /&gt;&lt;br /&gt;3)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ்மன் ஸ்ருதி இதை விட 10 மடங்கு நன்றாகப் பண்ணுவார்கள்.பயிற்சியே எடுக்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;4)கடைசியாக இங்கு வரும் வெளிநாடு/வெளிமாநில ஆட்களே "வண்க்கம்...நல்ல இர்க்கீங்களா?"என்று தமிழில் பேச ஆசைப்படும் போது மருந்துக்கு கூட ஒரு தமிழ் வார்த்தை இல்லை.. ஏன் ரஹ்மான்?&lt;br /&gt;&lt;br /&gt;5)நீங்க‌ளே சொல்லுங்க‌ள் இது நியாய‌மா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4021500919497235111?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4021500919497235111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4021500919497235111' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4021500919497235111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4021500919497235111'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/ar-live-concert.html' title='A.R.ரஹ்மான்‍ இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வை'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4797953020461525383</id><published>2008-02-02T09:36:00.000-08:00</published><updated>2008-02-02T11:01:06.162-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்</title><content type='html'>ஒரு சேஞ்சுக்கு படத்தின் நாயகன் நா.அழகப்பனே வந்து படத்தை விமர்சிக்கிறார்.ஓவர் டூ நா.அழகப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கங்க.நாந்தான் நாவன்னா.அழகப்பன்.உங்க படத்த நீங்களே விமர்சனம் பண்ணுங்கன்னு நம்ம செல்வம் தம்பி கூப்டுச்சு.சரி தான் கழுதய பண்ணிட்டு போவோமுன்னு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்துல நான் ஒரு நாடக ட்ரூப் வச்சிருக்கேன்.(தியாகு,மனோபாலா தவிர மத்ததெல்லாம் நம்ம பசங்க தான்).ஓப்பனிங் சாங்க முடிச்சிட்டு வந்து பாத்தா எங்கம்மா என் சாதகத்த பாத்துட்டு பயந்து போய் கிடக்காங்க.அதுக்கு பரிகாரமா அங்கன தீடீரென முளச்ச ரம்பயோட சிலைக்கு மால போடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஏற்கனவே என் நகைச்சுவையில மயங்குன (டி.வி ல வின்னர்,மருதமலை,புலிகேசி, படத்து ஜோக்ஸெல்லாம் பாத்துருக்கும் போல இருக்கு.ஏன்னா இந்தப்படத்துல நான் ஒன்னும் பெரிசா செய்யலியே) ரம்பை என்னை ஆள் வச்சு இந்திரலோகத்துக்கு தூக்கிட்டுப் போய்டுது.இருங்க..இருங்க முழுக்கதையும் சொல்றேன்.அதுக்குள்ள ஓடுனா எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்&lt;br /&gt;&lt;br /&gt;மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவுல நாரதரா நாசர் அப்பப்போ வந்து போறாரு.எங்க பக்கத்து வீட்டு குழந்தை தீடீரினு செத்துப்போக,எனக்கு இந்த எமப் பய மேல வந்தது பாருங்க கோவம்...இன்டர்வெல்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அப்புறம் கதய எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.கழுதய கொண்டு போய்த்தான ஆகனும்னு, பூலோகத்துல காச்சுன சாராயத்த மேலோகத்துக்கு எடுத்துட்டு போய் கிங்கரப்பசங்களுக்கும்,சித்ரகுப்தனுக்கும் ஊத்திக் கொடுத்து இந்த எமப் பயல கொல்லலாம்னு பாத்தா,அந்தப் பயலுக்கு சாவே கிடையாதாம்.அந்த நன்னாரிக்கு பொறந்த நாதாறி எல்லாம் கனவுன்னு நம்பி எங்கள ஏதும் செய்யாம விட்டுடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மக்களோட விதிய மேலோகத்துல இருந்து படிச்சிட்டு போய் பூலோகத்துல அதையெல்லாம் சொல்லி,நரகத்துல கொடுக்கிற தண்டனையையும் சொல்லி அவங்களோட பாவங்கள குறைக்கிறேன்.இதனால‌ முல்லைப் பெரியாறு பிரச்சினை வரைக்கும் தீந்துருதுன்னா பாருங்களேன்.படத்துலயே இதான் பெரிய காமெடின்னு சில நன்னாரிக சொல்லிக்கிட்டு திரியுதுங்க.இருக்கட்டும்...இருக்கட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;எமப்பயலோட வரவுல ஆட்கள் குறைய டென்சனாகிறாரு எமன்.நாரதர் வந்து என்னைப் போட்டுக் கொடுக்க கடுப்பான இந்திரனும்,எமனும் எனக்கும்,ரம்பைக்கும் சாபம் கொடுக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை,கொடுமைன்னு இவ்வளவு நேரம் படம் பாத்தா கிளைமேக்ஸ்ல ஒரு கொடுமை திங்கு,திங்குன்னு ஆடுச்சாங்குற கதையா நான் 90 வயசுக் கிழவனா மாறிடுறேன்.அப்புறம் என்ன ஆச்சு.கத முடிஞ்சது.உங்க கத இல்லீங்க.எங்க படத்தோட கதை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல படத்துல இருக்கிற நல்ல விசயங்கள பாப்போம்.முதல்ல ஞாபகம் வர்றது நம்ம தோட்டா தரணி அண்ணண் தான்.என்ன அருமையா,பிரம்மாண்டமா செட் போட்டுருக்காரு.உங்களுக்கு ஒரு தொப்பிதூக்கல்ணே(ஹேட்ஸாப்).&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்த எமப்பயலா வற்றானே.அவன் நல்லா நடிச்சிருக்கான்ப்பு.சும்மா சொல்லக்கூடாது.டயலாக் டெலிவரியும்,பாடி மாடுலேசனும் பய பின்னியிருக்கான்.அதுவும் நீங்க நல்லவரா?கெட்டவரா?ன்னு ஒருத்தன் கேட்குற சீன்ல பிச்சு உதறியிருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஒளிப்பதிவாளர் கோபிநாத்.நல்லா கலர்புல்லா படம்புடிச்சிருக்காரு அண்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;அம்புட்டுதேன். இப்ப மத்த விசயங்கள பாப்போமா...(ஆஹா கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க)&lt;br /&gt;&lt;br /&gt;படத்துல கதையும்,திரைக்கதையும் கொஞ்சம் அப்படி,இப்படி இருக்கிறதால நம்ம ஹீரோயினையும் கொஞ்சம் அப்படி,இப்படி காட்டியிருக்கோம்.ஒரு வார்த்தைல சொல்லனும்னா பில்லா நயந்தாராவுக்கு மேலா.என்ன‌ வ‌டிவேலு ப‌ட‌த்துல‌யா இப்ப‌டினு கேட்க‌க்கூடாது.வேற‌ வ‌ழியில்ல‌.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் படத்துல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர்ற மாறியெல்லாம் சீன் இல்ல.ஏதோ அங்கொன்னும்,இங்கொன்னுமா எங்கள அறியாம வந்தது தான் இருக்கு.அதனால ஓவரா எதிர்பார்த்து படத்துக்கு வராதீங்க சொல்லிப்புட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வசனங்கள்.நம்ம தம்பிராமையா நல்லா தமிழ்ல வசனம் எழுதுறாப்ல.ஒத்துகிடுதோம்.அதுக்காக இப்படியா தீடீர் திடீர்னு...முடியல‌...&lt;br /&gt;&lt;br /&gt;படத்துல நானும்,அந்த எமப்பயலும்,நாரதரும் நல்லா நடிச்சிட்டதால மத்தவங்கெல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கண்ணண் கவுண்டமணி எமனாகவும்,செந்திலு சித்ரகுப்தனாகவும் நடிச்ச லக்கிமேன் அளவுக்கு கூட படம் இல்லைன்னு பாத்தவங்க சொல்றாங்க.வெயிட் பண்ணி பாப்போம்&lt;br /&gt;எப்ப‌டி ஓடுதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததுல தமிழ்மண வாசகர்களுக்கு புரியறா மாதிரி சொல்லனும்னா ஒரு நல்ல உபத்திரவம் இல்லாத,எந்த வம்பதும்புக்கும் போகாத,&lt;strong&gt;மொக்கை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நாங்க எப்படி படம் எடுத்தாலும் வந்து பாக்குறீங்க...நீங்க ரொம்ப நல்லவங்க...(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)&lt;br /&gt;&lt;br /&gt;சரி வர்ட்டா...அடுத்து ஒரு நல்ல படத்துல சந்திப்போம்(எடுத்தா...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீதி:&lt;/strong&gt;&lt;br /&gt;வருடத்திற்கு சுமார் 100 தமிழ்ப்படங்கள் வெளிவரும்.அதில் 10 தான் நல்ல படங்களாக இருக்கும்.இன்னும் 11 மாசங்கள் இருக்கிறது.காத்திருப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4797953020461525383?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4797953020461525383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4797953020461525383' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4797953020461525383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4797953020461525383'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_02.html' title='இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2380053470266564720</id><published>2008-02-01T09:01:00.000-08:00</published><updated>2008-02-01T09:03:02.556-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஒரு எலியின் காறித்துப்பல்....மீள்பதிவு</title><content type='html'>சரி நம் கதைக்கு வருவோம்...அதற்கு முன் ஒரு விளம்பர இடைவேளை...&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;இந்தியப் பதிவுகளில் முதன்முறையாக....&lt;br /&gt;திரைக்கு வந்து ஒரு நாளே ஆன....&lt;br /&gt;இந்திரலோகத்தில் நா.அழகப்பன் விமர்சனம் நாளை&lt;br /&gt;உங்கள் கடலையூர் பதிவில்*....&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ.....&lt;br /&gt;&lt;br /&gt;சாரிபா இரண்டும் மிக்ஸ் ஆயிடுச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;இதை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்குப‌வ‌ர்க‌ள்.....&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ழ‌க்க‌ம் போல‌ அப்பா குடுக்கிற‌ காசு தான்...&lt;br /&gt;&lt;br /&gt;* condition apply...பட‌ம் பார்த்தால் தான்&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வோல்டுலயே பிந்நவீனத்துக்கு அப்புறமா நான் அதிகம் பயப்படுவது எங்க வீட்டு எலிக்குத்தான்.இப்படித்தான் சமீபத்தில் 1965 ல் இல்லீங்க..2008 ல் தான் ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த எலி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா!பகலெல்லாம் நல்லா தூங்கிட்டு நைட்டு கரெக்ட்டா டூட்டி பாக்க வந்துடுச்சுடா"என்று மனதில் நினைத்து கொண்டே படாரென எழுந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌? என்றார் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லம்மா,அந்த‌ எலிய‌ அடிக்க‌ப் போறேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா ப‌டுறா..நைட்டு டைம்ல‌ போய் காமெடி ப‌ண்ணிக்கிட்டு",என்றார் என்னைப் ப‌ற்றி ஏற்க‌ன‌வே தெரிந்து வைத்திருந்த‌ என் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் எலியின் உருட்ட‌ல்.அது என்னைப் பார்த்து சிரித்த‌தோ என்ன‌வோ??&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கையில் mob யும்,ஒரு கையில் தடியையும் எடுத்துக் கொண்டு சமயலறையில் நுழைந்தேன்.(அறுக்க மாட்டாதவன் கையில்... போன்ற பழமொழியெல்லாம் ஞாபகத்திற்கு வரக் கூடாது)&lt;br /&gt;&lt;br /&gt;எலி என்னைப் பார்த்து "வாடா வாடா வாடா உன் ப‌ல‌த்துக்கும் என் ப‌ல‌த்துக்கும் சோடி போட்டுகிடுவோமா???வாடா வாடா "என்று கூப்பிட்ட‌து போல் இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் தலைக்கேற கண்ணை மூடிக்கொண்டு (பயத்துல தான்)ஒரே அடி.இரண்டாக உடைந்தது...அம்மா வாங்கி வைத்திருந்த பொங்கல் பானை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரே அடி.இந்த‌ முறை வாங்கிய‌து நான்...அம்மாவிட‌ம்.ஏண்டா பொங்க‌ளுக்கு வாங்கி வ‌ச்சிருந்த‌ பானைய‌ யாராவ‌து உடைப்பாங்க‌ளா??நாந்தான் அப்ப‌மே சொன்ன‌னே..பேசாம‌ ப‌டுன்னு..கேட்டியா???&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ல்ல‌ வேளை எலி என்னைப் பார்த்து காறி துப்பிய‌தை என் அம்மா பார்க்க‌வில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2380053470266564720?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2380053470266564720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2380053470266564720' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2380053470266564720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2380053470266564720'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_01.html' title='ஒரு எலியின் காறித்துப்பல்....மீள்பதிவு'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-6127457403634678491</id><published>2008-01-23T05:24:00.000-08:00</published><updated>2008-01-23T05:38:05.302-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டுபிடிப்பு'/><title type='text'>"கனா காணும் காலங்கள்"கதாசிரியருக்குக் கல்தா???</title><content type='html'>விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் "கனா காணும் காலங்கள்".பள்ளிப் பருவத்து சம்பவங்களை மிகக் கச்சிதமாக தொடராக மாற்றியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகைப்படுத்துதல் இருந்தாலும்,சுமார் 2 டசன் கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசியங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் என்று புகுந்து விளையாடியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்களின் நடிப்பு ஆகட்டும், கேமரா, பிண்ணணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஆகட்டும் ஒரு நேர்த்தி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திரைக்கதையும், வசன‌ங்களும் இருக்கும்.பிரம்மா என்பவர் எழுதி வந்தார்.இப்போது பார்த்தால் திடீரென அந்த நாடகத்தின் உயரதிகாரியின் பெயர் (ரமண கிரிவாசன் executive producer)வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்க‌ன‌வே இய‌க்குந‌ர் பிர‌புக‌ண்ணாவிற்குப் ப‌திலாக‌ ராஜா என்ப‌வ‌ரை மாற்றினார்க‌ள்.நாட‌க‌ம் நொண்டிய‌டிக்க‌த் தொட‌ங்கிய‌து...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது க‌தாசிரிய‌ரையும் மாற்றி விட்டார்க‌ள் .... பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று??&lt;br /&gt;&lt;br /&gt;(நாங்க‌ளும் ரிப்போர்ட்ட‌ர் ஆயிட்டோம்ல‌)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-6127457403634678491?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/6127457403634678491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=6127457403634678491' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6127457403634678491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/6127457403634678491'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/01/blog-post_23.html' title='&quot;கனா காணும் காலங்கள்&quot;கதாசிரியருக்குக் கல்தா???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2537399666959427632</id><published>2008-01-21T05:22:00.000-08:00</published><updated>2008-01-21T07:31:58.170-08:00</updated><title type='text'>பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்</title><content type='html'>முன்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வாடா படத்துக்குப் போகலாம்" என்றேன் தம்பியிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன படத்துக்கு?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது வந்து,அது வந்து...பிரிவோம் சந்திப்போம்"கு போகலாம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌து?"&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல‌டா ப‌ட‌ம் ந‌ல்லா இருக்காம்..போய்த்தான் பாப்போமே !!!&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப‌டித்தான் சொல்லி மாய‌க்க‌ண்ணாடிக்கு கூட்டிட்டுப் போன.சேர‌ன் இனிமே என் ப‌ட‌த்துக்கு வ‌ருவியா?வ‌ருவியானு செருப்பால‌யே அடிச்சுத் தொர‌த்தினாரு"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா இந்த‌ப் ப‌ட‌ம் அப்ப‌டி இல்லையாம்" &lt;br /&gt;&lt;br /&gt;ஓவ‌ர் டூ பிரிவோம் ச‌ந்திப்போம்(டேய் உன‌க்கே கொஞ்ச‌ம் ஓவ‌ரா இல்ல‌)&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் க‌தையை நீங்க‌ள் ப‌ல‌ ப‌திவுக‌ளில்/இட‌ங்க‌ளில் ப‌டித்திருக்க‌க் கூடும் என்ப‌தால் சி.சி.கதையாக‌ ம‌ட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"திருமணத்திற்கு பிறகு கூட்டுக்குடும்ப‌த்தில் வாழ‌ ஆச‌ப்ப‌டும் பெண்ணிற்கும், த‌னிக்குடும்ப‌மாக‌ வாழ‌ ஆசைப்ப‌டும் ஆணிற்கும் திரும‌ண‌ம் ந‌ட‌க்கிற‌து.திரும‌ண‌த்திற்குப் பிற‌கு த‌னியே அவர்க‌ள் வாழும் போது அந்த‌ப் பெண்ணிற்கு என்ன‌ பிர‌ச்சினை ஏற்ப‌டுகிற‌து என்ப‌து தான் க‌தை..&lt;br /&gt;&lt;br /&gt;இனி பிடித்த‌தும்,பிடிக்காத‌தும்.....&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த‌து...&lt;br /&gt;&lt;br /&gt;1)"வெட்டுறதுக்கு நான் ஒன்னும் இளனி இல்லடா பளனி.."போன்ற பஞ்(சர்)டயலாக்குகள் இல்லை."ஏன் நம்ம த.. கூட..வேண்டாம் விட்டுடு" போன்ற சீண்டல்கள் இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;2)சிநேகா...மிக‌ச் சிற‌ந்த‌ ந‌டிப்பு.வ‌ந்தோமா,ஹீரோவ‌ ல‌வ் ப‌ண்ண‌மோ,டூய‌ட் பாடுன‌மா என்றில்லாம‌ல் அருமையாக‌ச் செய்து இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;3)ஆரம்பக் காட்சியிலேயே கிட்டத்தட்ட 2 டசன் கதாபாத்திரங்களை அழகாக அறிமுகப் படுத்தி அட போட வைக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;4)கதாபாத்திரங்களும்,அதற்கான தேர்வும்,அவர்கள் நடிப்பும் கச்சிதம்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் M.S.பாஸ்கர்,ஜெயராம் போன்றோர்கள்.அதிலும் ஜெயராம் மருத்துவராகப் பின்னி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;5)நிறைய காட்சிகளைக் கவித்துவமாக எடுத்துள்ளார்.இன்விடேச‌ன் தேர்ந்தெடுப்ப‌து...ஒலிகளைப் ப‌திவு செய்வ‌து...ஜி.நாக‌ராஜ‌ன் ப‌ற்றிப் பேசுவ‌து... போன்ற‌வை.&lt;br /&gt;&lt;br /&gt;6)கேம‌ரா அட்ட‌க்க‌ட்டு ப‌குதியை மிக‌ அழ‌காக‌ப் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காத‌து....&lt;br /&gt;&lt;br /&gt;1)ப‌ட‌த்தில் எல்லோரும் இய‌ல்பாக‌ ந‌டித்திருக்க‌ சேர‌ன் ம‌ட்டும் "அப்ப‌டின்னா என்ன?" என்று கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2)ப‌ட‌ம் அடிக்கடி ஒரே இட‌த்தில் தேங்கி விடுகிற‌து.ந‌க‌ர‌ மாட்டேன் என்கிற‌து.இடைவேளைக்குப் பிற‌கு த‌னியே இருப்ப‌தால் சிநேகாவுக்கு வ‌ரும் பிர‌ச்சினைக‌ள் என்ற‌ ஒன்லைனையே 1 ம‌ணி நேரம் இழுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3)படத்தில் மிகைப்&lt;strong&gt;படுத்துதல்&lt;/strong&gt; ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;4)நாடக சினிமா...(முன்னோர்கள் விசு,பாலச்சந்தர் போன்றோர்)&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ரிந்துரை:&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் பார்க்க‌லாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2537399666959427632?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2537399666959427632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2537399666959427632' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2537399666959427632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2537399666959427632'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/01/blog-post_21.html' title='பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7656241378917488869</id><published>2008-01-16T05:03:00.000-08:00</published><updated>2008-01-16T06:02:10.906-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>பீமா -  என்ன கொடுமை சார் இது? (விமர்சனம்)</title><content type='html'>ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் ஹீரோவாக‌ அடித்திருப்ப‌வ‌ர்...சாரி நடித்திருப்ப‌வ‌ர் சேது,அந்நிய‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் எல்லாம் ந‌டித்திருக்கும் விக்ர‌ம்.வில்ல‌னாக‌ ந‌டித்திருப்ப‌வ‌ர் பாட்ஷா ப‌ட‌த்தில் ந‌டித்த‌ ர‌குவ‌ர‌ன்.ப‌ட‌த்தை இயக்கியிருப்ப‌வ‌ர் ஆனந்த‌ம்,ர‌ன் இவ‌ற்றின் இய‌க்குன‌ர் லிங்குசாமி.இப்ப‌டியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்க‌ள்!!.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் க‌தை...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ப‌ணிபுரியும்(!) ஒரு நல்ல‌ ர‌வுடி பிர‌காஷ்ராஜ்.(காட்பாத‌ர் மாதிரி, நாய‌க‌ன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புற‌ம் ச‌ரி வேண்டாம் விடுங்க‌)&lt;br /&gt;இவ‌ர் போட்டுத்த‌ள்ள‌ நினைக்கும் ஆட்க‌ளை இவ‌ருக்கு முன் போட்டுத் த‌ள்ளுகிறார் விக்ர‌ம்.யாருடா நீ? என்று பிர‌காஷ் கோப‌மாக‌க் கேட்க‌ விக்ர‌ம் உன்கிட்ட‌ வேலைக்கு சேர‌ணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு சேர்ந்த‌ கொஞ்ச‌ நாட்க‌ளிலேயே விக்ர‌மின் புஜ‌ப‌ல‌ப‌ராக்கிர‌ம‌த்தைப் பார்த்து "25 வ‌ருச‌ங்க‌ளுக்கு முன்பு நான் என்னையே பார்த்த‌ மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்ப‌டின்னு கேட்க... பிளாஷ்பேக்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவ‌னான‌ விக்ர‌மிற்கு த‌ப்புக‌ளைத் த‌ட்டிக்கேட்கும் பிர‌காஷ்ராஜ் ஒரு ஹீரோவாக‌த் தெரிகிறார்.ஒரு க‌ட்ட‌த்தில் விக்ர‌மின் அப்பாவை அடித்த‌வ‌ர்க‌ளைப் பிரகாஷ் அடிக்க, விக்ர‌மும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிர‌காஷ்ராஜ் போல் ஆக‌ வேண்டும் என்று ஆசைப்ப‌ட்டு அவ‌ரிட‌ம் வ‌ந்து சேர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக‌ அவ‌ர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வ‌ந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காத‌லிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிர‌காஷ்ராஜின் எதிரி ர‌குவ‌ர‌ன்.அவ‌ரும் ஒரு ர‌வுடி தான்.(கெட்ட‌ ர‌வுடி!!).பிர‌காஷ்ராஜிற்கு விக்ர‌ம் அவ‌ருடைய‌ ப‌ழை‌ய‌ காத‌லியையே திரும‌ணம் செய்து வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ர‌குவ‌ர‌ன்,பிர‌காஷ்ராஜ் கும்ப‌ல் அடிக்க‌டி மோதிக்கொள்கிற‌து.இர‌ண்டு ப‌க்க‌மும் ஆட்க‌ள் இற‌க்கிறார்க‌ள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு புது போலீஸ் க‌மிஷ‌ன‌ராக‌ வ‌ரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ர‌வுடிக‌ளையும் என்க‌வுன்ட்ட‌ரில் போட்டுத் த‌ள்ள‌ உத்த‌ர‌விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ர‌மிற்கும் எல்லாவ‌ற்றையும் விட்டுவிட்டு திரிசாவுட‌ன் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ வேண்டும் என்று ஆசைவ‌ர‌...முடிவில் என்ன‌ ஆன‌து என்ப‌து தான் கிளைமாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ர‌ம் இந்த‌ப்ப‌ட‌ம் முழுக்க யாரையாவ‌து அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அத‌ற்கே நேர‌ம் போய்விடுவ‌தால் நடிப்பதற்கு நேரமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரிசா மூன்றாவ‌து சீனிலேயே விக்ர‌மை காத‌லித்து விட்டு அவ்வ‌ப்போது டூய‌ட்டிற்கு ம‌ட்டும் வ‌ருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ர‌குவ‌ர‌னின் வில்ல‌த்த‌ன‌த்தைப் பார்த்து தியேட்ட‌ரில் அனைவ‌ரும் சிரிக்கிறார்க‌ள்.ப‌ட‌த்தில் காமெடி இல்லை என்ற‌ குறையைத் தீர்த்து வைப்ப‌து ர‌குவ‌ர‌னின் வில்ல‌த்த‌ன‌ம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் ஒரே ஆறுத‌ல் பிர‌காஷ்ராஜ் தான்.ந‌ன்றாக‌ ந‌டித்துள்ளார்.ஆனால் ஏற்க‌ன‌வே ப‌ல‌ முறை இதே போல் பார்த்துவிட்ட‌தால் nothing special.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் வ‌சன‌ங்க‌ள் எஸ்.ராம‌கிருஷ்னண‌ன்.பாபாவில் தொட‌ங்கி இந்த‌ப் ப‌ட‌ம் வ‌ரை த‌ன‌க்கு சினிமா வ‌ச‌ங்க‌ள் எழுத‌ வ‌ராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க‌ துணையெழுத்து ப‌டிச்சிட்டு ப‌ல‌ நேர‌ங்க‌ள்ள‌ க‌ண்ல‌ இருந்து த‌ண்ணி வ‌ந்திருக்கு)ப்ச்..&lt;br /&gt;&lt;br /&gt;"முத‌ன்முறை" என்ற‌ பாட‌ல் ம‌ட்டும் ப‌ர‌வாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வ‌ந்து குத்தாட்ட‌ம் போடுகிறார்.நீங்க‌ள் க‌ண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாட‌ல் வ‌ரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாட‌ல் வ‌ருகிற‌து ஒரே ச‌லிப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;கேம‌ரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வ‌த‌ற்கில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;2007 ல் ர‌வுடிக‌ள் ப‌ட‌மாக‌ வ‌ந்து கொண்டிருந்த‌தே...அப்போதே வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம்.த‌மிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட‌ இந்நிலையில் too late...&lt;br /&gt;&lt;br /&gt;முடிவில் எல்லோரும் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ள்.ந‌ம்மையும் சேர்த்து...&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ரிந்துரை:&lt;br /&gt;&lt;br /&gt;இத‌ற்கு மேல் உங்க‌ள் இஷ்ட‌ம்!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌ம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வ‌ந்தால் அங்கு ஒருவ‌ர் என் வ‌ண்டியில் அவ‌ருடைய‌ சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன‌ இது ? என்று கேட்ட‌த‌ற்கு சாரி பாஸ் பீமா எப‌க்ட் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌ கொடுமை சார் இது??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7656241378917488869?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7656241378917488869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7656241378917488869' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7656241378917488869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7656241378917488869'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/01/blog-post.html' title='பீமா -  என்ன கொடுமை சார் இது? (விமர்சனம்)'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4085580295817646776</id><published>2008-01-15T22:24:00.000-08:00</published><updated>2008-01-15T22:25:16.618-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகத் திருவிழா'/><title type='text'>புத்தகச் சந்தையில் 1/4 நாள்</title><content type='html'>போன சனிக்கிழம‌ லீவு விட்டிருந்தாங்க‌.சென்னையோட‌ ஹீரோவான டிராபிக்ஜாமுடன் முட்டி மோதித் தோத்துப்போய் கண்காட்சியை அடைஞ்சேன்.மிகச் சரியாக Exitனு போட்டிருந்த பாதையில் உள்ளே நுழைந்தேன்.அமைப்பாளர் ஒருத்தரு ஓடி வந்து "கொஞ்சமாவது அறிவிருக்கா?னு டோக்கன் போடும் ஊழியரைச் சத்தம் போட்டாரு.(சத்தியமாய் அவரத்தாங்க.:-))அத வாங்கத் தான உள்ள போறோம்னு மனசில சொல்லிக்கிட்டே உள்ள நுழஞ்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் பூராவும் கட்டவுட், பேனர்..இதென்னடா ஏதும் அரசியல் கூட்டத்துக்கு தப்பா வந்துட்டோமானு பாத்தா நம்ம எழுத்தாளர்கள் விதவிதமான போசில சிந்திச்சுக்கிட்டு இருந்தாங்க..ஆகா நாம சரியாத்தான் வந்திருக்கோம்னு நினச்சிக்கிட்டு டிக்கட் எடுத்துட்டு உள்ர போய் பாத்தா..ஏத்தே!!எத்தன கடைங்க.ஒரு நிமிசம் நாம இதில தொலஞ்சு போய்டுவோமோன்னு பயமே வந்துடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே முதல்ல நுழஞ்சது கிழக்கு பதிப்பகம்.எம்மாடி எத்தன வகையான புத்தகங்க!!.நம்ம சிவாஜி படத்த பத்தின ராணிமைந்தன் புத்தகத்துல ஆரம்பிச்சு எச்சக்கச்சமா அடுக்கி வச்சிருந்தாங்க."அள்ள அள்ளப் பணம்‍ 3", "நான் சரவணண்" இந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன்.ஸ்டாலுக்கு வெளியே சில பேர் கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.பதிவர்கள் களை அவங்க கிட்ட‌ இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புற‌மா நான் நுழ‌ஞ்ச‌து ஞான‌பானு ப‌திப்ப‌க‌ம்.இங்க‌ன ஞானியோட புத்த‌க‌ங்க எல்லாம் ம‌லிவுவிலைப் ப‌திப்பா போட்டிருந்தாங்க.ம‌க்க‌ள் க‌ருத்த‌ கேட்க‌ இரண்டு பானையையும் வ‌ச்சிருந்தாங்க.இங்கன 3 புத்தகங்கள வாங்கிட்டு அப்படியே நடையக் கட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மை வாசல்ல மனுஷ்யபுத்திரன் உக்கார்ந்திருந்தாரு.அழகா சிரிச்சுகிட்டேயிருந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடுலயும் நல்ல கூட்டம்.வகைவகையா நிறய புத்தகங்க இருந்துச்சு.என்ன வில தான் கொஞ்சம் ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்ன‌ம் ப‌திப்ப‌க‌ம் கி.ரா வோட‌ எல்லா புத்த‌க‌ங்க‌ள‌யும் போட்டிருந்தாங்க‌.கி.ரா ஐயா வெளியே உக்காந்திருந்தாரு.அவ‌ருகிட்ட‌ போய் 2 நிமிச‌ம் பேசினேன்.எங்க‌ ஊரும் கோவில்ப‌ட்டி ப‌க்க‌த்தில‌ தான்னு சொன்னேன்.ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டாரு.நான் வாங்கி வ‌ச்சிருந்த "கோபல்ல‌ கிராம‌ம்" புத்த‌க‌த்தில‌ கையெழுத்து போட்டுக் கொடுத்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ழ‌.நெடுமாற‌ன் அய்யாவும் ஸ்டாலுக்கு வெளியே உக்காந்திருந்தாரு.திடீர்னு ஒருத்த‌ரு அய்யாவோட‌ கால்ல‌ ச‌ட்டுனு விழுந்தாரு.அவ‌ரு விழ‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே அவ‌ருக்கு இருந்த‌ மாதிரி தெரிய‌ல‌.இருந்தும் அவ‌ரு விழுந்த‌து என்னென்னமோ மனசுக்குள்ள‌ சொல்லிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ருதா ப‌திப்ப‌க‌ம் சிற‌ந்த‌ எழுத்தாள‌ர்க‌ளோட‌ 10 ப‌டைப்புகள் தில‌க‌வ‌தி அவ‌ர்க‌ளால‌ தொகுக்க‌ப்ப‌ட்டு "முத்துக்க‌ள் ப‌த்து" அப்ப‌டின்னு பேர் கொடுத்து வெளியிட்டு இருந்தாங்க‌.நான் அசோக‌மித்திர‌ன் ம‌ற்றும் வ‌ண்ண‌தாச‌ன் இவ‌ங்க‌ளோட‌ தொகுப்புக‌ள‌ வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விக‌ட‌ன், குமுத‌ம், ஹிந்து ஸ்டால்க‌ள்ள‌ ந‌ல்ல‌ கூட்ட‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"த‌மிழ‌ன் என்றோர் இன‌முண்டு,த‌னியே அவ‌ர்க்கோர் குணமுன்டு"னு சொல்றதுக்கேற்ப கண்காட்சியிலேயே food court பகுதியில தான் நல்ல கூட்டம்.பச்சைத் தமிழனான நானும் மரபிற்கேற்ப ஒரு icecream வாங்கி சாப்பிட்டு வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே அரங்கத்தில கவியரங்கம் ஒன்று நடத்திக்கிட்டு இருந்தாங்க.வெண்ணிலா,யுகபாரதி எல்லோரும் இருந்தாங்க.தங்களோட கவிதைகளால உலகத்தையே திருத்திட ஆசப்படும் அவங்க பண்ணுணது எல்லாம் கொஞ்சம் ஓவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிலா க‌விதை வாசிச்சு முடிச்சுட்டு கிள‌ம்பிட்டாங்க‌.அடுத்த‌வ‌ரு என்ன‌ சொல்ல‌றாருனு மேடையில‌ இருந்த‌வ‌ங்க‌ளே கேட்க‌ல‌.ஒருத்த‌ரு க‌வித‌ வாசிக்க‌ ந‌டுவ‌ரா இருந்த‌வ‌ரு மைக்கக் கூட‌ அமைக்காம‌ ப‌க்க‌த்துல‌ பேசிக்கிட்டே இருந்தாரு.பிரபஞ்சன் வேற உக்காந்துகிட்டு இருந்தாரு.கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;திருஷ்டிப‌ரிகார‌ங்க‌ள்:&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வ‌ள‌வு செல‌வு செஞ்ச‌ bapasi ந‌ல்ல முறையில‌ க‌ழிப்பிட‌ வ‌ச‌தி செய்யாம விட்டுடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;புத்த‌க‌ ரேட் எல்லாம் கூடிகிட்டே போகுது.15 ரூபாய்க்கு நான் வாங்கி ப‌டிச்ச "பூக்குட்டி" இன்ன‌க்கி 90 ரூபாய்.ப‌டிப்பானுப‌வ‌ம், உல‌க‌த்த‌ர‌ம்னு என்னென்ன‌மோ சொல்றாங்க‌.&lt;br /&gt;"யாதும் ஊரே யாவ‌ருங் கேளிர்" பாட்டு ப‌னை ஓலையில‌ தான் எழுதியிருப்பாங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட‌ம் க‌ம்மி.ப‌ல‌ ஸ்டால்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஒரு நிறைவான திருவிழா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4085580295817646776?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4085580295817646776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4085580295817646776' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4085580295817646776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4085580295817646776'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2008/01/14_15.html' title='புத்தகச் சந்தையில் 1/4 நாள்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2379069873585447178</id><published>2007-12-23T20:53:00.000-08:00</published><updated>2007-12-23T22:06:04.116-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நீதிமன்றம் செல்லவிருக்கும் இயக்குநர்கள் சாமி மற்றும் தங்கர்பச்சான் அவர்களுக்கு...</title><content type='html'>&lt;strong&gt;சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா?? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஜெயா தொலைக்காட்சியில் கோலிவுட் கோர்ட் என்ற நிகழ்ச்சியில் மிருகம் பட இயக்குநர் சாமி "Animal Welfare Association" இடமிருந்து NOC வாங்குவது பற்றிப் பொங்கிக் கொண்டிருந்தார்.மிருகம் படத்தில் சுமார் 10 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகள் தூக்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் கூறியிருந்தார்.(சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா?? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்).&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் சென்ற வாரத்தில் தங்கர்பச்சான் ஒன்பது ரூபாய் நோட்டின் கள்ளக்குறுந்தகடு (நன்றி சுகுணா திவாகர்) 30 ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்டுபிடித்து அதைப் போலீஸில் புகார் செய்திருந்தார்.(ஏற்கனவே அந்தப் படத்தில் கள்ளக்குறுந்தகட்டிற்கு எதிராக ஒரு காட்சியும் வைத்திருப்பார்).இவரும் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்று.அப்படியே எங்கள் பிரச்சினைகளையும் சொல்கிறோம். அதையும் அங்கே சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகர்கள் இளிச்சவாயர்களா???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் திரைப்படங்கள் வெளிவருகிறது.அதை அந்த வார இறுதியில் கவுண்டரில் டிக்கெட் எடுத்து யாராவது பார்த்தால் அவர்கள் பெயரை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.உன்னை யாருய்யா அந்த வாரமே பார்க்கச் சொன்னா?? என்று கேள்வி எழுப்பாதீர்கள்.அடுத்த வாரங்களில் அந்தத் திரைப்படங்கள் அந்தத் திரையரங்குகளில் ஓடுவதில்லை.வேறு புதிய படங்கள் வந்து அதையும் பிளாக்கில் பார்க்க வேண்டிய நிலைதான் உள்ளது.சுருக்கமாகச் சொல்லப்போனால் "First come first serve" லாம் இப்போது இல்லை. "கையில காசு வாயில தோசை" தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மொத்த‌க் க‌ருப்புப்ப‌ணத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட்ட உச்ச நடிகரின் திரைப்படந்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று கேள்வி.(சென்னையில் அதன் ஒரு டிக்கெட்டின் விலை 300 - 1000 வரை).&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உங்கள் டார்கெட் மார்க்கெட் பணம் ஜாஸ்தியாகக் கொடுக்க மறுக்கும் நடுத்தரக்குடும்பமோ அல்லது குடும்பப் பெண்களோ இல்லை தான்.பர்ச்சேஸிங் பவர் ஜாஸ்தியாக உள்ள இளைஞர்கள் தான்.ஆனால் அதற்காக வழக்கமான கட்டணத்தை விட 5 மடங்கு எல்லாம் கொஞ்சம் ஓவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மார்க்கெட்டை அழிக்க எப்படி டி.வி யும், கள்ளக்குறுந்தகடும் வந்ததோ அதே போல் இந்த மார்க்கெட்டையும் அழிக்க ஏதொவொன்று வரும்.அதற்கு முன்பாகவே முடிவு நீங்கள் தான் எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தரமான படங்களைச் சரியான கட்டணங்களோடு நல்ல தியேட்டர் வசதிகளுடன் எங்களுக்குக் கொடுங்கள்.இப்படி இருந்தால் தான் நாம் அனைவரும் ஒரு product (திரைப்படம்) மூலம் சந்தோசமடைய முடியும்.கள்ளக்குறுந்தகடும் இன்ன பிற பிரச்சினைகளும் தாமாகவே அழிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;(பில்லா படத்திற்குச் சென்று டிக்கெட் விலை கேட்டு நாங்கள் எங்கள் எதிர்ப்பைத்தெரிவிக்க அன்று படத்திற்குச் செல்லவில்லை :)))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2379069873585447178?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2379069873585447178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2379069873585447178' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2379069873585447178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2379069873585447178'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post_23.html' title='நீதிமன்றம் செல்லவிருக்கும் இயக்குநர்கள் சாமி மற்றும் தங்கர்பச்சான் அவர்களுக்கு...'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7810940057486514248</id><published>2007-12-16T20:34:00.000-08:00</published><updated>2007-12-16T20:57:00.948-08:00</updated><title type='text'>பில்லா - தியேட்டரில் கொலை???</title><content type='html'>பில்லா திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.தியேட்டரில் உள்ள அனைவரும் அஜீத்திடமும்,நயந்தாராவிடமும் மனசை விட்டுக்கொண்டிருக்க என் அருகில் அமர்ந்திருந்தவர் உயிரை விட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க.அவர் சுடப்பட்டு இறந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம் படத்தில் அம்பிகாவை நெற்றிப் பொட்டில் சுடுவார்களே.அந்த மாதிரி சுட்டிருந்தார்கள்.(சே இந்த நேரத்தில் கூட திரைப்பட ஞாபகமா??)&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டவன் நல்ல வேலைக்காரானாக இருந்திருக்க வேண்டும்.சென்னையின் மையப்பகுதியில், ஞாயிற்றுக் கிழமையில், பட்டப் பகலில், தியேட்டரில் துப்பாக்கி சுடும் காட்சி வரும் சமயத்தில் சுட்டிருந்ததால் டி.டி.எஸ் எபக்டில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த அசம்பாவிதத்தை உணரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போது நான் என்ன செய்வது?.கத்துவதா? தியேட்டர் மேனேஜர் ரூம் எங்கு இருக்கும்??&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ண்பா நீ யார்? தியேட்ட‌ரில் வ‌ந்து சுடும் அளவிற்கு உன் எதிரி யார்? அவ‌ருக்கு நீ செய்த‌ கொடுமை என்ன‌?&lt;br /&gt;&lt;br /&gt;அச‌ந்த‌ர்ப்ப‌மாக‌ செல்போன் அடித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"சே முடிவைக் கூட‌ ப‌டிக்க‌ விட‌மாட்டேங்கிறாங்க‌" என்று சொல்லிய‌வாறே அலுவ‌ல‌க‌க் க‌ணிணியின் த‌மிழ்ம‌ண‌ விண்டோவைக் க்ளோஸ் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;1)இது பதிவர் ச‌ர்வேச‌னின் &lt;strong&gt;ந‌ஒக‌&lt;/strong&gt; விற்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;2)இத‌ற்கு முன்பு என்னால் எழுதப்ப‌ட்ட‌ ஒரு சிறுக‌தை நண்ப‌ர்க‌ளிட‌ம் அடி வாங்கித்த‌ரும் அள‌விற்குத் திறமையுட‌ன் இருந்த‌து.இப்போது ந‌ண்ப‌ர்க‌ள் யாரும் அருகில் இல்லாத‌ தைரிய‌த்தில் எழுதிவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7810940057486514248?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7810940057486514248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7810940057486514248' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7810940057486514248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7810940057486514248'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post_16.html' title='பில்லா - தியேட்டரில் கொலை???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2485678973274421018</id><published>2007-12-13T23:15:00.000-08:00</published><updated>2007-12-14T00:24:00.767-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>சோ‍ -  நல்லவரா?? கெட்டவரா??</title><content type='html'>காலையில் எழுந்து "இட்லிவடை" சாப்பிடும் போது அறிவாளியாக,நடுநிலையானவாராக, தைரியமானவராக, நேர்மையானவராகத் திரியும் ஒரு மனிதர், தமிழினி பக்கம் ஒதுங்கினால் கோமாளியாக, ஒரு கட்சி சார்புடையவராக,பழமைவாதியாகத் தெரிவது எப்படி?.அவர் என்ன அந்நியன் படத்தில் வரும் விக்ரமா?. இது குறித்து பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம்.(யாருப்பா அது சோ னாலே குழப்பந்தான்னு சவுண்டு குடுக்கிறது).போடலாம் என்று அங்கீகரிப்பவர்கள் மேலே படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்லவரா???????&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) சோ வின் நகைச்சுவை உணர்ச்சி.தேன்மழை, நினைவில் நின்றவள் இந்த இரண்டு படங்கள் மட்டும் போதும் அவருடைய ஹியூமரை எடுத்துக்காட்ட.என்னைப் பொறுத்த வரை தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த காமெடி ஜோடிகளில் ஒன்று நாகேஷ்‍ - சோ.&lt;br /&gt;&lt;br /&gt;2) அவருடைய எழுத்து.சமீபத்தில் அவருடைய புத்தகங்களில் சுமார் 10 புத்தகங்களைப் படித்தேன்.கவனிக்கப் பட வேண்டிய நகைச்சுவையான எழுத்து.விகடனில் வெளிவந்த மிஸ்டர்.ரீல் முதல் இப்போது வரும் லூசுப்பையன் வகை எழுத்துக்கு அவர் தான் முன்னோடி.அவருடய "துக்ளக் படமெடுக்கிறார்" படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3) அவர் நடத்தி வரும் துக்ளக் பத்திரிக்கையில் இது வரை ஒரு நடிகையின் நாபிக் கமலத்தைக் கூடக் காட்டியது இல்லை.சினிமாவில் குப்பை கொட்டிய அவருக்கு இது முடியாதது இல்லை.கவர்ச்சிப் படங்கள் போடாமல் வரும் வெகுசனப் பத்திரிக்கைகளை எண்ணுவதற்கு நம் ஒரு கையில் உள்ள விரல்களே போதும் என்ற இந்த சூழ்நிலையிலும் அவர் கொள்கை.ஹேட்ஸ் ஆப்.&lt;br /&gt;&lt;br /&gt;4) அவர் வாதங்கள் எடுத்து வைக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியதே. அது சரியா? தவறா? என்பது வேறு.இன்றளவும் தமிழ்நாட்டின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரிடம் கருத்துக் கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;5) ஆட்சியில் இருப்பவர்களைப் பிரபலங்கள் "இவரு நல்லவரு, வல்லவரு, தங்கமான தங்கமானவரு" என்று மட்டுமே கூறும் இந்த வேளையில் குறைகளைச் சொல்ல இருக்கும் சில பேர்களில் ஒருவர்.வெறும் முரசொலியோ, நமது எம்.ஜி.யார் மட்டும் வெளிவரும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;6) "எங்கே பிராமணண்?", "சாத்திரங்கள் சொன்னதில்லை" போன்ற நூல்களை அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்குப் பிடிக்காத வண்ணம் எழுதியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கெட்டவரா????&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) "ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால் அவர்கள் மொழியை அழித்தால் போதும்", என்ற கருத்தை உணர்ந்து இன்று வரை டி.வி பேட்டிகளில் ஆகட்டும், மற்ற பேட்டிகளில் ஆகட்டும் அந்த பிராமண பாஷையை விடாமல் இருக்கும் பாஷாபிமானம்.இவருடைய சென்னைத் தமிழ் உலகறிந்தது.ஏன் அதிலேயே பேசலாமே.பெரியார் தாசன் சென்னைத் தமிழில் தான் பேசுவார்.ஆனால் மற்றவர்களின் மொழிப் போராட்டங்களை மட்டும் கிண்டல் செய்யும் ஹிப்பொக்ரெட்.&lt;br /&gt;&lt;br /&gt;2) எழுதுவது குருமூர்த்தியாக இருந்தாலும் அந்த தீவிரவாதக் கருத்துகளை அங்கீகரித்து வெளியிடுவது இவர் தான்.உலகெங்கும் இருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்கும் இவர்கள் இஸ்லாம் சகோதரர்கள் பற்றி வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் படித்து என் நண்பர் ஒருவர் அந்த சமூகமே நமக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்த பின்பு நான் துக்ளக் படிப்பதை நிறுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3) பெண்கள் மீதான இவர் பார்வை.இவர் படத்தில் கூட பெண்களைத் தான் அதிகம் ஓட்டுவார்.சரி ஏதோ காமெடி செய்கிறார் என்று நினைத்தால், இப்போது தான் அது காமெடி மட்டும் இல்லை என்று புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4) பாரதிய சனதா கட்சி என்ன செய்தாலும் சரி. தி.மு.க என்ன செய்தாலும் தவறு என்ற நிலைப்பாடு.இரண்டு கட்சிகளிலும் சரி, தவறு கலந்து உள்ளது என்ற மினிமம் கருத்துடன் கூட ஒத்துப் போகாத நடுநிலையாளர். என் பதின்ம வயதில் என்ன ஏது என்றே தெரியாமல் நான் r.s.s ல் சேர்ந்த போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை விதைத்த போது வேண்டாம் என்று விலகினேன்.(அப்போது வயது 10).&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவரா? கெட்டவரா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;&lt;br /&gt;தெரியலயேப்பா!!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2485678973274421018?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2485678973274421018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2485678973274421018' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2485678973274421018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2485678973274421018'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post_13.html' title='சோ‍ -  நல்லவரா?? கெட்டவரா??'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-2432215456732503639</id><published>2007-12-09T20:17:00.000-08:00</published><updated>2007-12-09T21:12:45.153-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>கல்லூரி - விமர்சனம்</title><content type='html'>+2 வில் சேர்ந்து படிக்கும் 9 நண்பர்கள்(4 பெண்கள்,5 ஆண்கள்) மதுரைக்கு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக B.A வரலாறு பிரிவில் சேர்கிறார்கள்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் படிக்க வேண்டிய பெண் (தமன்னா) தற்காலிகமாக அந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளது.ஆரம்பத்தில் இவர்களோடு ஒட்டாமல் இருக்கும் அந்தப் பெண், ராகிங்கில் இருந்து காப்பாற்றியவுடன் இவர்களோடு நட்பு கொள்கிறது.நட்பின் காரணமாக டெல்லியில் இருந்து படிக்க வரும் வாய்ப்பையும் மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுக்குள் காதல் வராது , நட்பு மட்டுமே வாழ்க்கை முழுவதும் தொடரும்" என்ற நண்பர்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தகர்த்து அகிலிற்கும், தமன்னாவிற்கும் காதல் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ச‌ரியா? த‌வ‌றா? என்ற குழ‌ப்ப‌ம் இருவ‌ருக்கும் தீர்வ‌த‌ற்குள் அனைவ‌ரும் ஒரு பேருந்தில் க‌ல்விச் சுற்றுலா செல்கிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் காத‌ல் நண்ப‌ர்க‌ளுக்குத் தெரிய‌வ‌ரும் வேளையில்....தியேட்ட‌ரில் நிச‌ப்த‌ம்.அனைவ‌ரும் க‌ன‌த்த ம‌ன‌துட‌ன் வெளியே வ‌ருகின்ற‌ன‌ர்.(அப்பாடா கிளைமேக்ஸ் என்ன‌ன்னு சொல்ல‌ல‌)&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ரும் ப‌ஸ் பாட‌ல் காட்சியிலேயே ந‌ம்மைக் க‌ல்லூரி மூடிற்கு கொண்டு வ‌ந்து விடுகிறார் பாலாஜி ச‌க்திவேல்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தில் வ‌ரும் ஒவ்வொரு க‌தாபாத்திர‌த்தையும் இய‌ல்பாகவே உல‌வ‌ விட்டிருப்ப‌து ப‌ட‌த்தின் சிற‌ப்பு.எல்லோரும் சினிமாத்தனமாக இல்லாமல் நிச‌த்தில் நாம் பார்க்கும் ம‌னித‌ர்க‌ள் போல‌வே இருக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலும்,தமன்னாவும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள். க‌ய‌ல்விழியாக வ‌ரும் பெண் ப‌ட்ட‌ய கிள‌ப்பி உள்ளார்.குடும்ப‌ நிலை உண்ர்ந்து ப‌டிப்ப‌து, த‌ப்பு செய்ப‌வ‌ர்க‌ளின் ச‌ட்டையைப் பிடிப்ப‌து, த‌ம‌ன்னா த‌ன் காத‌ல் ப‌ற்றி சொல்லும் போது அதைப் புரிந்து கொள்வ‌து என அத்த‌னையும் அழ‌கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதில‌ட்சுமியாக வ‌ரும் பெண், ச‌ர‌வ‌ண‌ணாக வ‌ரும் பைய‌ன் அகிலின் தங்கை, தமன்னாவை ஒரு தலையாக லவ் பன்னும் சீனியர் என அனைவ‌ரும் நம் நினைவில் நிற்பார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே காட்சியில்,9 மாண‌வ‌ர்க‌ளின் குடும்ப க‌ஷ்ட‌ங்க‌ளையும் உறுத்தாம‌ல் காட்டியிருப்பது க‌விதை.&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டையர்களாக வந்து "ஏங்க நீங்க சொல்லுங்க? ஏன் நீங்க சொல்லக்கூடாதா" என்ற ஒரு டயலாக் மட்டும் வைத்துக் கொண்டு படம் முழுக்க வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாஜி ச‌க்திவேல் காட்சிக‌ளால் க‌விதை வ‌டிக்கிறார் என்றால்,நா.முத்துக்குமார் க‌விதைக‌ளால் காட்சி அமைக்கிறார்.(ச‌ரியா? த‌வ‌றா? பாட‌ல் மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.)பாடல்கள் அத்தனையும் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;செழிய‌னின் கேமரா இய‌ல்பாக‌ உறுத்தாமல் எல்லாவற்றையும் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைகோர்ட்டில் தூக்குத் த‌ண்ட‌ணை உறுதியாகி உள்ள‌ இந்த சூழ‌லில், ஆந்திர‌ அர‌சிய‌ல் போல் காட்டினாலும் அந்த‌ ச‌ம்பவ‌த்தை அழுத்தமாக காட்டியுள்ளது இயக்குநரின் துணிச்சல்.(ஐயையோ கிளைமேக்ஸ சொல்லிட்டேனா???) &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு இருந்தும் படம் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வு.படத்தில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.(உ.ம் க‌ய‌ல்விழி கோபிப்ப‌து, இர‌ட்டைய‌ர்க‌ள் காட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;கதையும் ஏப்ரல் மாதத்தில்,பிரியாத வரம் வேண்டும் போன்ற‌ க‌ல்லூரிக‌ளில் பார்த்த‌து தான்.(காத‌ல் ப‌ட‌த்தில‌ ம‌ட்டும் க‌த‌ புதுசோ??)&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம் உண‌ர்ச்சிக‌ளை வைத்து இவ‌ர்க‌ள் வியாபார‌ம் செய்வ‌து ம‌ட்டும் நெருட‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ரிந்துரை:&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் பார்க்க‌லாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-2432215456732503639?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/2432215456732503639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=2432215456732503639' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2432215456732503639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/2432215456732503639'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post_09.html' title='கல்லூரி - விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3641263730705566391</id><published>2007-12-05T20:16:00.000-08:00</published><updated>2007-12-05T21:18:48.464-08:00</updated><title type='text'>தமிழ்சினிமாவும்‍ - பிள்ளைக் காதல்களும்</title><content type='html'>"அறியாத வயசு, புரியாத மனசு&lt;br /&gt;இரண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்"&lt;br /&gt;&lt;br /&gt;யுவனின் இசையில் இளையராஜாவின் வாய்சில் மனசை அள்ளும் பாடல்.பாடலைக் கேட்டு முடித்த பிறகு என்றாவது நமக்கு குற்ற உணர்வு வந்திருக்கிறதா???.நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது நாம் அவ‌ர்கள் பருவத்திற்குப் போகாமல் அவர்களை நம் பருவத்திற்கு இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;1990 ல் வெளிவந்த அஞ்சலி படத்தில் மணிரத்தினம் ஆரம்பித்து வைத்த கூத்து இது.அதில் தான் குழந்தைகளின் வாழ்க்கையைக் காட்டுகிறேன் என்று அதுகள்  "I LOVE YOU",சொல்வதையும், காதலுக்கு ஹெல்ப் செய்வது போலவும் வயதுக்கு மீறிய செய்கைகளைப் பதிவு செய்திருப்பார்.நல்ல வேலையாக தாலி சென்டிமென்ட் (சின்னத்தம்பி) அம்மாசென்டிமென்ட் படங்களும் அப்போது வந்ததாலும்,பெண்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துக்கொண்டிருந்ததால் அவ்ர்களுக்கு இது பிடிக்காது என்பதாலும் மற்றவர்கள் யாரும் இந்த வழியைப் பின்பற்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை" மீண்டும் பிள்ளைப் பருவக் காதலைக் கையில் எடுத்தது.சொல்லப்போனால் அவர் அதில் ஒரு படி தாண்டி உடலுறவையும் காண்பித்து தமிழ்சினிமாவை உலகத் தரத்திற்கு (??) உயர்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து இதே கதை அம்சம் கொண்ட சுமார் 15 படங்களுக்கு பூசை போடப்பட்டது.நல்ல வேளையாக ஒன்றும் வரவிலை.வெளிவந்த +2, பருவம், கிச்சா போன்ற படங்களும் ஊத்திக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கரின் "அழகி" இந்த நேரத்தில் வெளிவந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.எல்லோரும் தங்கள் இளவயதுக் காதலுடன் கம்பேர் செய்து பார்த்து இது ஒரு மிகச் சிறந்த படம் என்று certificate கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த "ஆட்டோகிராப்" இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.ஒரு ஆண் தன் வாழ்க்கையில் சந்தித்த / காதலித்த 3 பெண்களுக்கு, 4 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக பத்திரிக்கை வைக்கும் நாயகனைப் பற்றிய கதை இது.இதிலும் சேரன் பள்ளிக்கூடக் காதலைக் காட்டியிருப்பார்.திருவள்ளுவரையே எதிர்க்கும் பெண்ணிய வாதிகள் கூட இந்தப்படத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில்,ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு இதேபோல் பத்திரிக்கை வைக்கப் போனால் ஏற்றுக் கொள்வார்களா?? என்ற கேள்வி கூடக் கேட்காமல் வழக்கம் போல இது உலகத்தரமான படம் என்று கூடிக் கும்மிஅடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாஜிசக்திவேலின் "காதல்" வெளிவந்தது.படத்தை மேக்கிங்,மற்றும் திரைக்கதையால் எங்கோ கொண்டு சென்றிருப்பார்.ஆனால் அதிலும் இதே பள்ளிக்கூட காதல் எழவு தான்.அந்தப் படம் வெளிவந்த போது அப்படத்தில் வருவதாக காட்டப்படும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் நிசத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்."இப்படத்தை பார்த்து விட்டு எங்கள் பள்ளி பிள்ளைகள் கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.எனவே படத்தைத் தடை செய்யவேண்டும்",என்று தொடர்ந்தார்.தினத்தந்தியில் இந்த செய்தி 8 ம் பக்கத்தில் யாரும் படிக்காத ஒரு இடத்தில் வந்தது.அனைவராலும் இது உலகத்தரமான திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்சினிமாவின் மைல்கல்லில் ஒன்று என்று அழைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் (பாடலில்) ஆகட்டும், பருத்திவீரன் ஆகட்டும், தமிழ் M.A ஆகட்டும்,ஒன்பது ரூபாய் நோட்டு ஆகட்டும் நல்ல படங்கள் என்று சொல்லப்படும் எல்லாப் படங்களுமே பிள்ளைக்காதலைத் தான் காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லிஸ்டில் தொலைக்காட்சியில் வரும் "கனா காணும் காலங்களும்" சேர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;படம் எடுப்பவர்களுக்கு இது வாழ்க்கை, வியாபாரம்.எது ஓடுமோ அதைத் தான் காட்டுவார்கள்.நல்ல படங்களைத் தேர்ந்து எடுப்பது நம் கையில் தான் உள்ளது.பல நல்ல படைப்புகளை / படைப்பாளிகளை நாம் தான் தேர்ந்து எடுத்து அங்கீகரித்து உள்ளோம்.இளையராஜாவை அவர் ஆகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த போது தலையில் வைத்து ஆடியதும் நாம் தான்.அவர் மோசமான பாடல்களைக் கொடுத்த போது அங்கீகரிக்க மறுத்ததும் நாம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;17 வயது வரை உள்ள பருவம் காதலிக்க ஏற்றது அல்ல.அந்த வயதில் காதலித்துக் கொண்டிருந்தால்,அந்த வயதில் கிடைக்க வேண்டிய அனுபவம்,நட்பு,படிப்பு,விளையாட்டு,அறியாமை,அறிந்துகொள்ளல்,பாராட்டு,மகிழ்ச்சி இன்ன பிற வஸ்துக்களையும் இழக்க நேரிடும்.20 வயதுக்கு மேல் காதலிப்பவர்களுக்கே அது காதலா?? இனக்கவர்ச்சியா?? என்று தெரியாத நிலையில் பாவம் சிறுவர்களை விட்டுவிடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3641263730705566391?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3641263730705566391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3641263730705566391' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3641263730705566391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3641263730705566391'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post_05.html' title='தமிழ்சினிமாவும்‍ - பிள்ளைக் காதல்களும்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-4806084153893845729</id><published>2007-12-04T01:07:00.000-08:00</published><updated>2007-12-04T07:02:54.281-08:00</updated><title type='text'>ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்</title><content type='html'>முதலில் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரக் கோட்டை கிராமத்தில் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் தம்பதிகள் மாதவபடையாச்சி,வேலாயி.அவர்களுக்கு 3 ஆண்குழந்தைகள்,2 பெண்குழந்தைகள்.விவசாயியாக இருக்கும் மாதவர் கொடையாளியாகவும் உள்ளார்.ஊர் மக்கள் பிரச்சினையை அவ்வப்போது பணம் கொடுத்தோ / கொடாமலோ தீர்த்து வைக்கிறார்.அவர் நண்பர் பாய்க்கு(நாசர்) தொழிலில் முன்னேற தம்பதிகள் இருவரும் முகம் சுளிக்காமல் பண உதவி செய்கிறார்கள்.அவரும் தோல் தொழில் வியாபாரம் ஆரம்பித்து முன்னேறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் வளர்கிறார்கள்.கல்யாணம் முடித்த முதல் இரண்டு பையன்களும் தங்கள் மனைவி மற்றும் மாமாவால் (நடன இயக்குநர் சிவசங்கர்)தூண்டப்பட்டு அப்பாவை எதிர்க்கிறார்கள்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிப் பையன் ஊரில் துணி துவைக்கும் சாதியை சார்ந்த பெண்ணைக் காதலிக்கின்றான்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மனம் உடைந்த மாதவரும்,வேலாயியும் ஊரை விட்டே வெளியேறி ஆம்பூரில் இருக்கும் நாசரிடம் தஞ்சம் அடைகிறார்கள்.ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகள் கழித்து கடைசி பிள்ளையை ஏதேச்சையாக பார்க்கும் மாதவர் பிள்ளை நிலை கண்டு வெதும்பி திரும்பி ஊருக்கே செல்ல முடிவு எடுக்கிறார்கள்.தீடீரென பாம்பால் தீண்டப் பட்டு வேலாயி இறந்துவிட ஊருக்குப் போகும் முடிவைக் கை விடுகிறார் மாதவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசரும் உடல் நலிவுற்று பெங்களூரு சென்று விட,பிறகு நாசரின் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்டு ஊருக்கே செல்கிறார்.அங்கு பிள்ளைகள் நிலை கண்டு மனம் வெறுத்து உயிர் விடுகிறார் மாதவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமா இதாங்க கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் டிக்கெட்டிற்கு முழு பணம் இல்லாமல் பண்ருட்டி பஸ்ஸில் ஏறும் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிடுகிறார் சத்தியராஜ்.திருடு போன பலாப்பழங்களைக் கண்டு பிடிப்பது, கால் மேல் கால் போட்டுத் தூங்குவது, கத்தும் குருவி என்னவென்று சரியாகச் சொல்வது, என மாதவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.விருதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடித்தாரோ என்னவோ பல இடங்களில் இயல்பு மிஸ்ஸிங்.பத்திரக்கோட்டை சிலாங்கும் அங்கங்கே மிஸ்ஸிங்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சனா எப்போதும் அழத் தயாராகவே உள்ளார்.முருகனையும், வாழுமுனி ஆண்டவனையும் அடிக்கடி கூப்பிட்டு நம்மைக் கடுப்பேற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவசங்கர், ராமலிங்கமாக வருபவர், ராமலிங்கத்தின் காதலியாக வரும் பெண், அழகியில் "ஒளியிலே தெறிவது" பாட்டிற்கு வருவாரே அவர், அனைவரும் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான தேர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் குறிப்பிடத் தகுந்த மற்றோர் அம்சம் எடிட்டிங். B.லெனின் விளையாடியுள்ளார்.காமிராவும் அழகாக உள்ளது. இசை சுமார்.பல பாடல்கள் எங்கோ கேட்டது போன்ற உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;குறைகளே இல்லையா?? இருக்கிறது.அது இல்லாமல் எப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியராஜ்,அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக சொல்லப்பட்டு இருப்பது&lt;br /&gt;சரியான சப்பை.குடும்ப வன்முறை ஜாஸ்தி.யாராவது யாரையாவது அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க சோகம்.மனிதனின் சோகங்களைப் பதிவு செய்வது தான் நல்ல படம் என்ற கருத்தை எப்போது தான் மாற்றுவார்களோ?? தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் காதலிக்கிறது.லிப் கிஸ் கொடுக்கிறது.எல்லாமும் செய்கிறது.ஸ்கூல் பசங்களைக் கொஞ்சம் படிக்க விடுங்கப்பா ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ரொம்ப நீளம்.அந்த ஊர் ஸ்லாங் பாதி பேத்துக்கு வரவில்லை.இருந்தாலும் மதுரை,நெல்லை, தேனி கிராமங்களையே பார்த்து வந்த நமக்கு பத்திரக்கோட்டை சற்று புதிது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி கிளைமாக்ஸ் ஒரு நல்ல‌ சிறுகதை.வாழ்த்துக்கள் தங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிந்துரை ‍- பார்க்கலாம்(எல்லாரும் அல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:(தியேட்ட‌ரில் ந‌ட‌ந்த‌து)&lt;br /&gt;&lt;br /&gt;1)இந்த‌ப் ப‌ட‌ம் வேணாம்,வேணாம்னு சொன்னேன் கேட்டியா?? (இர‌ண்டு டீனேஜ்க‌ள்)&lt;br /&gt;&lt;br /&gt;2)இவ்வ‌ள‌வு டிக்கெட் வாங்கி வ‌ச்சிருக்கு,ஒர்த்த‌னும் வ‌ர‌ மாட்டேங்கிரானுங்க‌ளே(பிளாக் டிக்கெட் விற்ப‌வ‌ர்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-4806084153893845729?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/4806084153893845729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=4806084153893845729' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4806084153893845729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/4806084153893845729'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post.html' title='ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3010681970807757103</id><published>2007-11-28T02:49:00.000-08:00</published><updated>2007-11-28T03:20:19.284-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாலி'/><title type='text'>அவ்வை சண்முகி‍ - தரமான நகைச்சுவைப் படமா???</title><content type='html'>முன்னுரை:&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பார்வடை என்ற பதிவர் "நீங்கள் சிபாரிசு செய்யும் படங்கள்" என்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று பதிவர் கோவி.கண்ணண் அவர்கள் சிபாரிசு செய்த படங்களின் வரிசையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அதில் அவர் குறிப்பிட்டு இருந்த படங்களில் அவ்வை சண்முகியும் ஒன்று.அக் கருத்தில் இருந்து மாறுபடுவதால் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி‍    : அவ்வை சண்முகி தரமான நகைச்சுவைப் படமா?&lt;br /&gt;என் பதில்  : இல்லை.மூன்றாம் தரமான நகைச்சுவைப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்:&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைப் பற்றிக் கூறும் முன்பு படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்பது விதி.படத்தின் ஒன்லைன் "குழந்தைக்காக மனைவியை விட்டுப் பிரிந்த ஒரு ஆண்,பெண்ணாக மாறுவதால் ஏற்படும் குழப்பங்கள்".நன்றாகத் தான் உள்ளது(மிஸஸ் டவுட் பயரில் இருந்து சுட்டது ஆச்சே)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பட‌த்தை எடுத்திருக்கும் வித‌ம்.முழுக்க முழுக்க‌ ஆபாச‌ம்.இர‌ட்டை அர்த்த வ‌ச‌ன‌ங்க‌ளையும்,விர‌ச‌மான காட்சிஅமைப்புக‌ளாலும் ம‌ட்டுமே காட்சிக‌ளை நக‌ர்த்தி இருப்பார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பெண்ணல்ல‌ ,ஆண் என்று மீனாவிற்கு க‌ம‌ல் சொல்லும் உச்சக் கட்ட‌ காட்சி ஒரு உச்ச‌க் க‌ட்ட‌ உதார‌ண‌ம்.இதே க‌தையை வைத்து சுரேஷ் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி எடுத்த‌ ச‌ன் தொலைக்காட்சி நாட‌க‌ம் (பதி சபாபதி)இதை விட‌ எவ்வள‌வோ பெட்ட‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருளிராஜ‌ன்,வெண்ணிற‌ ஆடை மூர்த்தி வ‌கைய‌றாக்க‌ள் இருந்தாலும் நாம் அனைவ‌ரும் சிலாகிப்பது நாகேஷைப் பார்த்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய‌ த‌ர‌மான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌ங்க‌ளின் லிஸ்ட்:&lt;br /&gt;&lt;br /&gt;1)காத‌லிக்க‌ நேர‌மில்லை.&lt;br /&gt;2)இன்று போய் நாளை வா.&lt;br /&gt;3)தேன்மழை.&lt;br /&gt;4)ச‌பாபதி.&lt;br /&gt;5)ச‌பாஷ்மீனா+வாலிப‌விருந்து=உள்ள‌த்தை அள்ளித்தா.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுரை:&lt;br /&gt;&lt;br /&gt;இது என் க‌ருத்து. அனைவரும் ஏற்றுக் கொள்ள‌ வேண்டும் என்று இல்லை.மாறுப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள் தான் வாழ்க்கையை சுவார‌சிய‌ம் ஆக்குகின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: &lt;br /&gt;&lt;br /&gt;1) நானும் க‌ம‌ல் ர‌சிக‌ன் தான்.&lt;br /&gt;2) கோவிச்சுக்காதீங்க கோவி(இதான‌ முர‌ண்தொடை)&lt;br /&gt;&lt;br /&gt;இக்க‌ட்டுரைக்கு எத்த‌ன‌ மார்க் கொடுப்பீங்க‌&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-3010681970807757103?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/3010681970807757103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=3010681970807757103' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3010681970807757103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/3010681970807757103'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/11/blog-post_28.html' title='அவ்வை சண்முகி‍ - தரமான நகைச்சுவைப் படமா???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-7793309280928415950</id><published>2007-11-26T01:06:00.000-08:00</published><updated>2007-11-26T01:26:09.585-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாலி'/><title type='text'>அழகிய தமிழ்மகன்‍ -பாடலும் போலியா???</title><content type='html'>அழகிய தமிழ்மகன் கதை "போலி" கதை என்பது நாம் அறிந்ததே.அப்படத்தில் இடம் பெற்று இருக்கும் "மதுரைக்குப் போகாதடி"என்ற பாடலைக் கேட்ட அன்றிலிருந்தே மண்டைக்குள் ஒரு குரல்.ஆ! தொடர்கதையின் நாயகனுக்கு வருமே அந்த மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்கும் போதும்,நடக்கும் போதும்,பறக்கும் போதும் யோசித்ததில் கானல் நீர் விலகியது.காட்சிப் பிழை தெளிந்தது.(courtesy - ‍பாரதி)&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாடலின் முதல் பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த "பள்ளிக்கூடம் போகாமலே,நாங்க பாடம் படிக்காமலே" (வைகாசி பொறந்தச்சு)பாடல் போலவே இருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;A.R Rahman அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா காபி அடிப்பதின் copyrightவைத்திருந்த தேவாவின் மெட்டையே சுட்டது காலத்தின் comedy.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-7793309280928415950?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/7793309280928415950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=7793309280928415950' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7793309280928415950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/7793309280928415950'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/11/blog-post_26.html' title='அழகிய தமிழ்மகன்‍ -பாடலும் போலியா???'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-649264087492367909</id><published>2007-11-22T20:15:00.000-08:00</published><updated>2007-11-22T20:27:33.937-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாலி'/><title type='text'>ஓசை செல்லாவிற்கு ஒரு அவசரக்கடிதம்</title><content type='html'>விடுநர்&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம்&lt;br /&gt;கடலையூர்&lt;br /&gt;தமிழ்மணம்&lt;br /&gt;&lt;br /&gt;பெறுந‌ர்&lt;br /&gt;&lt;br /&gt;ஓசை செல்லா&lt;br /&gt;த‌மிழ்ம‌ண‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                             பொருள்:ந‌மீதாவிற்குத் த‌மிழ் க‌ற்றுத்த‌ர‌க்&lt;br /&gt;                                          கோரி விண்ண‌ப்ப‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌வும் 25௧‍.11.2007 தேதியிட்ட‌ ஞாயிற்றுக் கிழ‌மையில் க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்ப‌ப் போவ‌தாக‌க் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் மானாட‌ ம‌யிலாட‌ நிக‌ழ்ச்சியின் துளிக‌ளைப் பார்க்கும் போது சிர்ப்பு,சிர்ப்பாக‌ வ‌ருவ‌தால்(பிழை என்னுடைய‌து இல்லை),இக் க‌டித‌த்தை த‌ந்தி போல் பாவித்து த‌ங்க‌த் த‌லைவி ந‌மீதாவிற்கு ந‌ல்ல‌ த‌மிழ் ந‌ல்குமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌டிக்கு&lt;br /&gt;செல்வ‌ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4621400993926989770-649264087492367909?l=kadalaiyur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalaiyur.blogspot.com/feeds/649264087492367909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4621400993926989770&amp;postID=649264087492367909' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/649264087492367909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4621400993926989770/posts/default/649264087492367909'/><link rel='alternate' type='text/html' href='http://kadalaiyur.blogspot.com/2007/11/blog-post_22.html' title='ஓசை செல்லாவிற்கு ஒரு அவசரக்கடிதம்'/><author><name>செல்வம்</name><uri>http://www.blogger.com/profile/11259647274492871312</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://3.bp.blogspot.com/-SvRbVQsaLmg/Tf3SJTOiXfI/AAAAAAAAAHI/B9t0N5i6nR4/s220/DSC00196.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-3787813500907906755</id><published>2007-11-04T20:27:00.000-08:00</published><updated>2007-11-04T20:58:54.048-08:00</updated><title type='text'>நீயா?நானா?...ஒரு கண்டணம்</title><content type='html'>நேற்று அப்பாவை பஸ் ஏத்தி விட்டு விட்டு நீயா?நானா? பார்க்கலாம் என்று வேக வேகமாக வீட்டிற்கு வரும் போது மணி 9.40.சரி முடிவையாவுது பார்க்கலாமே என்று டி.வி.ஆன் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒரு பெண்,தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததற்கு தான் மிகவும் பெருமைப்படுவதாகவும்,அது போன ஜென்மத்தில் தான் செய்த புண்ணியம் என்றும் கூறிக்கொண்டிருந்தது.இதைக் கேட்டவுடன் காலம் சில நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற கருத்து தான் இன்று வரை உலக அளவில் நம்மைப் பெருமைப் படுத்துவதாக உள்ளதேயன்றி 2007ல் சொல்லப்பட்ட‌"குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தது தான் செய்த புண்ணியம்" என்ற கருத்து பெருமைப் படுத்துவதாக ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தவறு அந்தப் பெண்ணின் மீது மட்டும் இல்லை.அதன் பெற்றோர் மீதும்,சமூகத்தின் மீதும் உள்ளது.இந்த நவீன வலைப்பதிவு உலகில் கூட ஒரு மூத்த வலைப்பதிவர் இதே கருத்துடன் உள்ளது நோக்கத் தக்கது
