வவ்வால் அவர்களின் பங்குசந்தை குறித்த சமீபத்திய பதிவினைப் படித்தேன்.அதில் அவர் "இந்தியாவின் gdp 8 சதவிகிதமாக இருக்கும் போது பங்குச்சந்தையின் வளர்ச்சி மட்டும் எப்படி 800 சதவிகிதமாக உள்ளது?" என்ற நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
இதைப் படித்ததும் எனக்கும் பின்வரும் சந்தேகங்கள் தோன்றின.யாராவது விளக்குங்களேன் ப்ளீஸ்...
பங்கு சந்தையில் லாப / நட்டங்கள் 2 வழிகளில் வருகிறது.அவையிவை.
1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் Textile துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.
2)இரண்டாவது வழி அடுத்தவனை நஷ்டம் அடையச் செய்து நாம் லாபம் சம்பாதிப்பது.100 ரூபாய் பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை போகலாம்.200 ரூபாய்க்கு எப்படிப்போகும்? பெரிய பெரிய முதலைகள் "இந்நிறுவனம் நன்றாக உள்ளது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என்றெல்லாம் போங்கு ஆட்டம் ஆடி விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன.என்னைப் போல் அதி புத்திசாலிகள் அடடே...இப்படி ஒரு பங்கு இருப்பது நமக்குத் தெரியாம போச்சே!! என்று நினைத்து கொண்டு 200 ரூபாய் கொடுத்து வாங்குவோம்.அவ்வளவு தான்..விலை அப்படியே பேக் அடிக்க ஆரம்பிக்கும்.நம் பணம் கோவிந்தா...இது சரியா?
இது அரசாங்கத்தின் அனுமதியோடு நடத்தப் படும் சூதாட்டம் இல்லையா.நாம் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக நாம் நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை.ஆனால் எவனோ ஒருவன் பங்கு சந்தையில் லாபம் அடைய நாம் நஷ்டம் அடைவது என்ன நியாயம்?.
ஏற்கனவே 40% வட்டி தருகிறோம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் முதலீடு செய்து மோசம் போன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள்.எங்களிடம் வந்து "Fundamental Analysis, Technical Analysis "என்று பல டெக்னிக்கல் விஷயங்களப் பேசி கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம்?