Saturday, January 31, 2009

நாகேஷ்

எதிர்நீச்சல்...

தாம‌ரைநெஞ்ச‌ம்...

திருவிளையாட‌ல்...

க‌லாட்டாக‌ல்யாண‌ம்...

தேன்ம‌ழை...

சோப்புசீப்புக‌ண்ணாடி...

பாமாவிஜ‌ய‌ம்...

மேஜ‌ர்ச‌ந்திரகாந்த்...

நினைவில்நின்ற‌வ‌ள்...

தில்லான‌ மோக‌னாம்பாள்...

ப‌ட்டிண‌த்தில்பூத‌ம்...

மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌ன்...

அபூர்வ‌ச‌கோத‌ர‌ர்க‌ள்...

ம‌க‌ளிர்ம‌ட்டும்...

ஐயா நீங்க‌ள் பிற‌விக்க‌லைஞ‌ன் தான். ந‌ன்றி உங்க‌ளுக்கு...வேறொன்றும் சொல்ல‌த்தோண‌வில்லை.

Wednesday, January 14, 2009

படிக்காதவன் - ‍திரைவிமர்சனம்

முதல் நாள் எடுத்த சபதத்தையும் மறந்து,"வில்லால் ஏற்பட்ட காயத்தைப் படிக்காதவனைக் கொண்டு ஆற்றலாம்" என்று எண்ணி கூச்ச நாச்சமேயில்லாமல் திரையரங்கிற்குச் சென்றுவிட்டோம்.

ப‌ட‌த்தின் முற்ப‌குதியும் ந‌ம் காய‌ங்க‌ளுக்கு ம‌ருந்து போடுவ‌து போல் தான் இருந்தது.ப‌ட‌த்தின் க‌தை பின்வ‌ருமாறு.(சொல்ற‌துக்கு கதைன்னு ஒன்னு இருக்குதே‍ நன்றி சுராஜ்)

மெத்த‌ப் ப‌டித்த‌ பெரிய‌ குடும்ப‌த்தில் ஒரே ஒரு ப‌டிக்காத‌ ஆள் த‌னுஷ்.இத‌னால் ப‌ல‌ அவ‌மானங்க‌ளுக்கு உள்ளாகும் த‌னுஷ், தான் ஒரு ப‌டித்த பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் தன் அவமானங்கள் குறையும் என்று ஒரு தியரியைக் கண்டுபிடித்து அதற்காக பொறியியல் படித்து வரும் தமன்னாவைக் காதலிக்கிறார்.தமன்னாவும் தனுஷைக் காதலிக்கத் துவங்கும் போது அவரது தந்தையான சுமன் ஹெலிகாப்டரில் வந்து தன் பொண்ணைக் கூட்டிச் செல்கிறார்.ஆந்திராவிற்குச் சென்று த‌ம‌ன்னாவைக் தனுஷ் எப்படி கைப்பிடிக்கிறார்? என்ப‌தே மீதிக்க‌தை.

இந்த‌க் குட்டியூண்டு கதையில், 2 பெரிய‌ ஆந்திரா ர‌வுடிகள் (சுமன்,சாயாஜி ஷிண்டே)ஒரு பெரிய‌ திருநெல்வேலி ர‌வுடி(காதல் தண்டபாணி)/அவரது மகன், ஒரு மிக‌ப்பெரிய‌ திருநெல்வேலி ர‌வுடி (அதுல் குல்கர்னி) / அவ‌ர‌து த‌ம்பி(நிதின் சத்யா), ஒரு சின்ன‌ சென்னை ர‌வுடி(விருமாண்டி படத்தில் வருவாரே அவர்), அவ‌ர்க‌ள் கேங் எல்லாம் சேர்த்து சுமார் 500 உப‌ ர‌வுடிகள்,ஒரு காமெடி ரவுடி (விவேக்)/அவரது கேங் (செல் முருகன்,போண்டாமணி) (வேறு யாராவ‌து விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க‌வும்)த‌னுஷ் சண்டை போட்டு சமாளிப்ப‌த‌ற்குள் ந‌ம‌க்கு மூச்சு வாங்கிவிடுகிற‌து.

தனுஷ் பொல்லாதவன் படத்திற்குப் பிறகு நல்ல மெட்சூராக நடிக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.ரியாக்ஷன், வசன உச்சரிப்பு, நகைச்சுவை, டான்ஸ், பைட் என்று எல்லாமே இவருக்கு நன்றாக வருகிறது.

தமன்னா கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

ப‌ட‌த்தில் காமெடிய‌னாக‌ச் செய்திருப்ப‌து வ‌டிவேலு...ச்சே சாரி விவேக். விவேக் எம்.ஆர் ராதா, சிவாஜி இவ‌ர்க‌ளையெல்லாம் மிமிக்ரி செய்து முடித்து விட்டு இப்போது வ‌டிவேலுவைச் செய்ய‌த் தொட‌ங்கியிருக்கிறார்.ட‌ய‌லாக் டெலிவ‌ரி, பாடி மாடுலேஷ‌ன் உட்ப‌ட‌ அப்ப‌டியே டிட்டோ. ஒரே ஒரு சீனில் ஆபாச‌மாக காட்சிய‌மைத்து தான் விவேக் தான் என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தியுள்ளார்.இருந்தாலும் நிறைய‌ இட‌ங்க‌ளில் சிரிக்க வைக்கிறார்.

ப‌ட‌த்தில் ம‌ற்றொரு குறிப்பிட‌த்த‌குந்த‌ கதாபாத்திர‌ம் த‌னுஷின் தந்தையாக‌ வ‌ரும் பிரதாப் போத்த‌ன்.ம‌னித‌ர் த‌னுஷைப் பார்த்து டென்ச‌ன் ஆகி ஆகியே க‌ல‌க‌ல‌க்க‌ வைக்கிறார்.

வில்லன்கள் அனைவரும் வந்து நம்மை வேறு வகையில் பயமுறுத்தியிருக்கிறார்கள்.

ம‌யில்சாமி,க‌னேஷ்,ஆர்த்தி,சுவாமிநாத‌ன் எல்லோரும் ந‌கைச்சுவைக்கு உத‌வியிருக்கிறார்க‌ள்.அதிலும் சில‌ சீன்க‌ள் லொல்லுச‌பா / சூப்ப‌ர் 10 பார்ப்ப‌து போல‌வே உள்ள‌து.

சுராஜ் "ஆங்கில / மற்ற மொழிப்ப‌ட‌ங்க‌ளை எல்லாம் காப்பி அடித்து ப‌ட‌ம் எடுக்க‌த்தேவையில்லை,ந‌ம் த‌மிழ்ப்ப‌ட‌ங்களையே புத்திசாலித்த‌ன‌மாக‌ காப்பி அடித்தாலே போதும்" என்ற‌ உண்மையைக் க‌ண்டுபிடித்துள்ளார். அதிலும் அதுல்குல்க‌ர்னியை வைத்து ர‌ன் ப‌ட‌ கிளைமேக்சையும்,பொல்லாத‌வ‌ன் பினிஷிங்கையும்,புதுப்பேட்டை காட்சியையும் வைத்தே கிளைமேக்சை முடித்த‌தில் இருந்தே இவ‌ர் திற‌மையைக் க‌ண்டுகொள்ள‌லாம்.

ம‌ற்ற‌ப‌டி ப‌டிக்காத‌வ‌ன் நம்மை சந்தோஷ‌ப்ப‌டுத்துவான்.

Tuesday, January 13, 2009

வில்லு - நமக்கே நாம் வைத்துக்கொள்ளும் ஆப்பு??????

என்ன ஆச்சு பிரபுதேவா???

தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழிவாங்கல் கதையை, டாக்டர் விஜய் / நயந்தாராவின் எல்லை மீறிய கவர்ச்சி / வடிவேலுவின் மொக்கைக் காமெடி / பிரகாஷ்ராஜின் காமெடியான வில்லத்தனம் / பார்த்து சலித்த சென்டிமென்ட்ஸ் / வந்துவிட‌க்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த பிளாஷ்பேக் என்று படம் பார்க்க வரும் எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று எத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தீர்கள் பிரபுதேவா?

புதியகீதை படத்தில் ஆறு விரல்கள் வைத்து கெட்டப் மாற்றி நடித்தபிறகு இதில் தான் கெட்டப் மாற்றியுள்ளார் (மீசையை சற்று முறுக்கிவிட்டுள்ளார்) டாக்டர் விஜய். விஜய் சண்டை போடுகிறார், பாட்டுபாடுகிறார், நயந்தாராவுடன் காதல் என்ற பெயரில் ஏதோ செய்கிறார், வடிவேலுவுடன் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். மொத்தத்தில் தியேட்டரில் பின்ட்ராப் சைலன்ஸ். யாருக்காக இதையெல்லாம் செய்கிறார் என்று தான் தெரியவில்லை.

நயந்தாரா படம் முழுக்க கவர்ச்சி காட்டுகிறார்.அதிலும் படத்தின் ஆரம்பக்காட்சிகள்......ஒரு வேளை திரையரங்கக் கோளாரா ? என்று தெரியவில்லை. நான் பார்த்தது பரங்கிமலை ஜோதியில்.

பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பிட்டுப் படம் போல் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும் போது வடிவேலு காட்சிகளை மிஞ்சிவிடுகிறது விஜய் -வில்லன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

வடிவேலு இந்திரலோகம் படத்திற்குப் பிறகு இதில் தான் இவ்வளவு சீரியஸாக மொக்கைப் போட்டுள்ளார். வரவர குசேலன், வில்லு என்று பயமுறுத்திக்கொண்டே வருகிறார்.

"போக்கிரி" ஓடியது என்பதற்காக அதில் வரும் பல காட்சிகளை ஜெராக்ஸ் எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?
உ.ம் வடிவேலு ஹிட் பாடலுக்கு ஆடும் காமெடி நடனம், இன்ட்ரோ சாங்கில் பிரபுதேவா ஆடுவது...

தேவிசிரிபிரசாத்தின் பாடல்களுக்கு விஜய் படுத்து எழுந்து , படுத்து எழுந்து நடனமாடியுள்ளார். அதுக்கு?

ரவிவர்மன் கலர் கலராக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபுதேவா இந்த "அபூர்வசகோதரர்கள்"காலத்திய கதையை இவ்வளவு ரிச்சாக எடுத்திருக்கத்தேவையில்லை.

மற்றபடி யாரும் அவசரப்பட்டு அவதிப்பட்டு துன்பப்பட்டு....................