Tuesday, June 17, 2008

தசாவதாரம் -‍ கடலையூர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.

என்ன அண்ணாச்சி தசாவதாரம் படம் பாத்தீயளா??? எப்படி இருக்கு?

"பாத்தம்வே என்னத்த சொல்ல"???

அண்ணாச்சி....என்ன ஆளவந்தான் பார்ட் டூ மாதிரி ஆயிடுச்சா???

சே..சே அப்படி இல்லவே ....படம் பரவாயில்லவே....என்ன சில இடத்துல தான் மனசொப்பல..

விவரமா சொல்லுங்க அண்ணாச்சி.....

நீயே சொல்லும்வே.... நாம தமிழ் படத்துக்குதான போயிருக்கொம்...ஆனா இங்கன பாதி பேரு என்ன பேசுரானே புரியல....

அதுக்குத்தான் கீழே எழுதுராங்கலாம்ல...

என்னல நீயும் ஆக்கங்கெட்ட கூவ கணக்க பேசுத....நாம என்ன மாநில மொழி திரைப்படத்துக்கால போயிருக்கோம்....கீழ எழுத்துக் கூட்டிப் படிக்க....

சரி விடுங்க அண்ணாச்சி...மேல சொல்லுங்க....

நானும் இந்த ஊருல 40 வருசமா இருக்கம்ல.ஆனா இங்கன இருக்கிற எட்டயபுரத்துக்கே வழி தெரியாது.ஆனா எங்கனையோ இருந்து வந்த வெள்ளக்காரன் வில்லன் பய மெட்ராஸ், செங்கல்பட்டுனு சந்து சந்தா ஹீரோவைத் துரத்துராம்வே....

என்ன அண்ணாச்சி நீங்களும் லாஜிக் எல்லாம் பாத்துக்கிட்டு......

எல கேக்குரவன் கேனையனா இருந்தா......

இருந்தா.....

விடுல அதுக்கு மேலே அவுகளே நிரப்பிக்கிடுவாகா....

அப்புறம் ஒப்பனை பத்தி சொல்லலியே அண்ணாச்சி....

அதுல சும்மா சொல்லக்கூடாதுவே....நல்லா பண்ணியிருகாக...ஆனா பல மேக்கப்பு இந்தியன் தாத்தா மாதிரியும், சண்முகி மாமி மாதிரியும் இருக்குறத தவித்துருக்கலாம்வே....அதே மாதிரி தேவையே இல்லாத மேக்கப்புகளும் படத்துல இருக்குதுவே....

அண்ணாச்சி என்ன சும்மா நொள்ளை சொல்லிக்கிட்டே இருக்கீங்க....படத்துல நல்லதே இல்லையா....

என்னவே இப்படி பேத்தனமா கேட்டுப்புட்ட.படத்துல வார தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்சினிமாவ அடுத்தக் கட்டத்துக்கு கூட்டிட்டு போவுதுவே....உதாரணமா கேமரா.நம்ம ரவிவர்மன் தம்பி இருக்குல்ல அது ஏதொ ஸ்பீல்பெர்க் படம் எடுத்த மாதிரில எடுத்துருக்கு....

என்ன இவ்வளவு உழைப்பையும், நல்ல கதைக்கு, நல்ல படத்துக்கு கொட்டியிருந்தா எல்லாத்துக்கும் சந்தோஷம் தானவே....அதான் துக்கமா கிடக்கு.ஆனா படத்த பாக்காம மட்டும் இருந்துராதல....பாரு என்ன‌!!!!

பின்குறிப்பு :அடுத்த பதிவு ... தசாவதாரத்தில் அரசியல்

5 comments:

Athisha said...

ஏல என்னலே

தினமும் தசாவதாரமா...

அடுத்து வேற போடுவீயலா....

கோவி.கண்ணன் said...

கலக்கல்,

வட்டாரவழக்கில் நன்றாக எழுதி இருக்கீக.

mumu said...

pothum niruthunga mudiyala

mumu said...

thanga mudiyala

செல்வம் said...

வாங்க அதிஷா அண்ணாச்சி...என்ன இப்படி கேட்டுப்புட்டீரு...நானு இன்னொரு பதிவுல போடலாம்னு இருக்கேன்...

...........................................................................

நன்றி கண்ணன்

............................................................................

வாங்க mumu ...முகவரி எல்லாம் பலானதா இருக்கு....