Monday, January 11, 2010

கமலும், வைணவமும்....

கமல் கஷ்டப்பட்டுத் தன்னை நாத்திகர் என்று சொல்லி வந்தாலும் இஷ்டப்பட்டு சில விஷ(ய)ங்களைத் தன் படங்களின் மூலம் சொல்லி வந்துள்ளார்.

ஆதரவாக அவரது பின்வரும் 4 படங்களைக் காண்போம்.

காதலா..காத‌லா..
க‌ம‌ல் த‌மிழ்க்க‌ட‌வுளாம் முருக‌னின் வேட‌ம‌ணிந்து ந‌டித்த‌ காம‌டி.கம‌ல் கிருஷ்ணராக வேடமேற்று, செளந்தர்யா பாமாவாகவும்,ரம்பா ருக்மணியாகவும் நடித்திருந்தாலும் அக்காட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் கதை விவாத‌த்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகள் நாத்திகரான கமல் முருகனை வைத்துக் காமடி செய்தால் தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று கமலை ஏமாற்றிவிட்டார்கள்.

அன்பே சிவம்...
இந்த கதையின் நாயகன் கம்யூனிசம் பேசும் நாத்திகனாக இருந்த போதிலும், வில்லன் "ஓம் நமோ நாராயாணாய" என்று சொல்லாமல்,"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லும் சிவபக்தராய் அமைந்தது நாத்திகரான கமலே எதிர்பாராத விஷயம்.

பம்மல் கே சம்பந்தம்...
ராயபுரம் சிவன் போல் நடிக்கத் தெரிந்த கமல் என்ற நாத்திகருக்கு ராயபுரம் விஷ்ணு போல் நடிக்கத் தெரியாது.

தசாவதாரம்...
இப் படத்திற்கு வசனம் தேவையில்லை :-))

இது போக வால் துண்டாக "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் தீவிரவாதியாக இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்க, கணிப்பொறி மேதையாக வரும் மாணவன் இந்து மதத்தைச் சார்ந்தவனாக‌ இருப்பது கமல் ஒரு மிகத் தெளிவான "நாத்திகர்" என்பதையே காட்டுகிறது.

"இதைய‌ல்லாம் பார்க்காதீர்க‌ள்...சினிமாவை சினிமாவாக‌ப் பாருங்க‌ள்" என்று கூறும் ந‌ண்ப‌ர்க‌ளுக்குப் ப‌தில்...

"சினிமாவை சினிமாவாக‌ எடுங்க‌ள்"