ஆபாசம்,வன்முறை இல்லாத,வித்தியாசமான படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சிம்புதேவனைப் பாராட்டலாம்.
கடவுளாகப் பிரகாஷ்ராஜ்...அழகாக செய்திருக்கிறார்.கடவுளாகவும்,பின்பு பவர் திருடப்பட்ட பிறகு சாதாரண மனிதனாகவும் பின்னியிருக்கிறார்.ஆனால் தான் கடவுள் என்பதை நிரூபிக்க அடிக்கடி விண்டோஸ் டெஸ்க்டாப் பேக்ரவுண்டு மாற்றுவது போல் அடிக்கடி பேக்ட்ராப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.
சந்தானம்...அநியாயத்திற்கு நடித்துள்ளார்.இப்படியே போனால் அடுத்த பேரரசு படத்தின் நாயகன் ஆகிவிடுவார் போல் இருக்கிறது.சந்தானத்திடம் நாம் எதிர்பார்க்கும் டைமிங் மிஸ்ஸிங்.:-((
கஞ்சா கருப்பு நிறைவாக செய்துள்ளார்.தன் குடும்பத்தாருடனான காட்சிகளில் கலக்கியுள்ளார்.
நம் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கூட கொஞ்சம் அதிகமாக வைத்திருப்போம்.அதைவிட குறைவாகத்தான் நாயகி மதுமிதாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.ஜோதிர்மதியும் அவ்வப்போது வந்து போகிறார்.
ராஜேஷ்,M.S பாஸ்கர்,இளவரசு,தலைவாசல் விஜய்,V.S ராகவன் என ரகளையான கேரக்டர்களை இயக்குநர் அறிமுகம் செய்கிறார்.ஆனால் அந்த அளவு இவர்களைப் பயன்படுத்தவில்லை என்பது கூடுதல் சோகம்.
குறையேதும் இல்லை....,அட அட அட என்ற இரண்டு பாடல்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது.
படத்தின் மிகப் பெரிய குறை சிரிப்பு தேவனாக இருந்திருக்க வேண்டிய சிம்புத்தேவன்,அட்வைஸ் தேவனாக மாறி மொக்கை போட்டு இருப்பதுதான்.பல இடங்களில் கொத்தி விட்டார்.
கடைசி சீனில் வரும் காமெடி படம் முழுக்க வந்திருந்தால் ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக இருந்திருக்கும்.இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.:-(((
சங்கரின் ராசி எண்ணாண 8 வரும்படி டைட்டில் வைத்தால் மட்டும் போதாது என்பதை சிம்புத்தேவன் உணர அறை எண் 305 ற்கு வர்ம் கடவுளைப் பிரார்த்திப்போம்.
பின்குறிப்பு.
85000 சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையினரின் கைகளை மொன்னையாக்கும் சிம்புத்தேவன் இப்படத்தை இயக்குவத்ற்கு மாதம் 3500 சம்பளத்திற்கும்,அவருடைய காட்பாதர் சங்கர் ரோபோ படத்தை இயக்குவதற்கு மாதம் 2500 சம்பளத்திற்கும் வேலை செய்துள்ளார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது...
கேட்கிறவன் கேனையனாக இருந்தால்............