Friday, December 16, 2011

Why this Kolaveri di ? - நமக்கு சொல்வது என்ன ???



Kolaveri Di...ஒரு அறிமுகம் :

இன்றைய தேதியில் கொலவெறி பாடலை யூத் தமிழர்களிடம் அறிமுகம் செய்வது என்பது அவர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வெளிவரப்போகும் 3 படத்தில் தனுஷ் கொலைவெறியோடு பாடிய பாடல் இன்று சமூக வளைத்தளங்களின் உதவியாலும் ஊடகங்களின் ஊதிப் பெருக்கும் தன்மையாலும் அநியாயத்திற்கு ஹிட்டடித்து உள்ளது.

இதே அளவிற்கு முல்லைப்பெரியார் பற்றியும், கூடங்குளம் பற்றியும் அதே யூத் தமிழர்களுக்கு தெரியுமா என்று கேட்டால் நம்மை கிழட்டு தமிழர்கள் பட்டியலில் சேர்த்து விடும் வாய்ப்பு உள்ளதால் எஸ்கேப்...

கொலைவெறி ஏன் நமக்கு பிடித்தது????

திரைப்படங்களை ஓட வைக்க உதவும் முக்கிய விதிகளில் ஒன்று “ரசிகர்கள் தங்களை கதாநாயகர்களாக உருவகம் செய்து கொள்ளுமாறு கதை அமைப்பது”, தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இருந்தே இதே விதியைக் கடைபிடித்துத் தான் வெற்றியடந்து வருகிறார். தன்னைப் போலவே உள்ள ஒரு கதாநாயகன் திரையில் தான் செய்வதையே அல்லது செய்ய விரும்புவதை செய்வது கண்டு ரசிகர்கள் கிளர்ச்சியடைவது தான் இவ்வகைப்படங்களின் வெற்றி.

காப்பாற்றப்படும் ஆணாதிக்க சிந்தனை :

”நான் ஒரு பெண்ணைக் காதலிப்பேன். அவளுடனான காதல் தோல்வியில் முடிந்தால் சரக்கடித்து விட்டு அவளைத் திட்டுவேன்” என்பது தான் பாடலின் ஒன்லைன். இதே இப்பாடலில் ஒரு பெண் காதலில் தோற்று அவளும் சரக்கடித்து விட்டு ஒரு ஆணைத் திட்டியிருந்தால் இப்பாடல் இதே அளவு வெற்றியடைந்திருக்குமா???

மறுபடியும் படத்தில் ரேவதி நிழல்கள் ரவி மீதான கோபத்தில் மது அருந்துவதை அதிர்ச்சியோடு பார்த்தவர்கள் தாம் நாம். <இக்காட்சி வேறு வகையில் தவறு என்றாலும்>

டாஸ்மாக் வாழ்க :

மது இன்று பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், மகிழ்ச்சியைக் கொண்டாடவும் எப்படி இரண்டு முரண் பட்ட விடயங்களுக்கு வடிகாலாக இருக்கிறது என்பது புரியவில்லை. ஏற்கனவே மது விற்பனை 20000 கோடியைத் தொடப்போகும் தமிழ்நாட்டில் தற்போது வரும் படங்களில் மதுவும் ஒரு கதாபாத்திரமாகவே கிட்டத்தட்ட அத்துனை திரைப்படங்களிலும் உலா வருகிறது. தான் செய்யும் தவறுகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது மனம் அதைக் கொண்டாடவே செய்யும்.

அரைகுறை ஆங்கிலம் :

ஆங்கிலத்தில் பேசுவது தான் உயர்வு என்று அனைவருமே நம்ப ஆரம்பித்து விட்ட காலம் இது. முறையான மொழிப் பழக்கம் இல்லாவிட்டால் ஒரு மொழியில் புலமை பெற முடியாது என்பது ஆதார விதி. நமக்கு முறையான மொழிப்பழக்கம் இல்லாத காரணத்தால் தான் ஆங்கிலத்தைப் பேசவும் முடியாமல், விடவும் முடியாமல் தடுமாற்றத்தோடே வாழ்ந்து வருகிறோம். இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. அந்த தடுமாற்றத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் கொலவெறி....

நாட்டுப்புற இசையின் நீர்த்த வடிவம் :

காலங்காலமாக நம்மை மகிழ்வித்து வந்த நாட்டுப்புற இசையை அழித்து விட்டு...அதே இசையை மேற்கத்திய கருவிகளில் கேட்டு புளகாங்கிதம் அடைகிறோம்.

பன்னாட்டு நிறுவனத்தின் பணம் :

பாடலை வெளியிட்டுள்ள சோனி மியூஸிக்கின் ஒரு கோடி ரூபாய் முதலீடு இந்தப் பாடலின் வெற்றிக்கு பின் உள்ளது. < இத் தகவல் த.மு.எ.க.ச மேடையில் கேட்டது>. இதை விட திறமையான கலைகள், கலைஞர்கள் வெளிவராமலே மடிந்து விடும் கொடுமையை ராஜீமுருகனின் விகடன் தொடரில் படித்திருப்பீர்கள். எனவே பணம் இருந்தால் குடித்து விட்டு உளருவதைக் கூட வெற்றியடைய வைக்க முடியும் என்பது தான் இப்பாடல் நமக்கு சொல்லும் செய்தி....

கொலவெறி யின் வெற்றியின் வெற்றிக்குப் பின்னால் நம் சமூகத்தின் தோல்விதான் கண்ணுக்குத் தெரிகிறது.

3 comments:

சிவக்குமார் said...

என்னைப் போலவே நீங்களும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். எந்தக் குப்பையாக இருந்தாலும் இசை அதை வெற்றியடைய வைத்து விடும். இதற்கு உதாரணம் இதை விட மோசமாக சிம்பு எழுதிய பாடல்கள் வெற்றியடைவது. ஆணாதிக்கம் என்பது மிக இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படதுதான். ஆணாதிக்கம் உள்ள பாடல்களை ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். பல அற்புதமான கலைகள் கலைஞசர்கள் வெளிவராமல் போவதற்கு இவைகள் முக்கியக் காரணம் என்பதும் சரிதான்.

செல்வம் said...

நன்றி...தமிழானவன் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

Jayachar said...

நண்பா, கொலை வெறி பாடல் பற்றி உங்களுடிய கருத்து முற்றிலும்
சரியே. இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்ச்சி பெறவேண்டும் .
இம்மாதிரி கருத்துக்கள் மேலும் வரவேண்டும். இம்மாதிரி பாடல்களை
நம் இளைஞர்கள் புறக்கணிக்கிறார்களோ அன்று தான் நம் நாட்டிற்கு
விடிவு. வரழ்த்துக்கள்.
ஜெயாசார்