Thursday, November 1, 2007

சிம்பிள் லாஜிக்...இது தெரியாதா??

இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.பெற்றோர்களை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கே சென்று விட்டு விட்டு,டாடா காட்டி விட்டு வந்து விடுகிறார்கள்.

தாம் பெற்ற பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்கிறார்கள்.எனக்குத் தோன்றுவதெல்லாம், நம் குழந்தைகள் நம்மை உற்று கவனித்து வருகின்றன.நாம் செய்வதை அப்படியே திருப்பி செய்கின்றன.அப்படி இருக்கும் போது, நாம் நம் குழந்தைகள் மீது பாசம் வத்தால் நம் குழந்தைகள் அவர்கள் குழந்தைகள் மீது தான் பாசம் வைப்பர்கள்.

மாற்றாக நாம் நம் பெற்றோர் மீது பாசம் வைத்தால், அது அவர்கள் மனதில் பதிந்து நம் மீது பாசம் வைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.நாம் தான் அதற்கு இடம் கொடாமல் அடுத்த தலைமுறையினரைக் குறை கூறி வருகிறோம்.