Thursday, November 1, 2007

சிம்பிள் லாஜிக்...இது தெரியாதா??

இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.பெற்றோர்களை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கே சென்று விட்டு விட்டு,டாடா காட்டி விட்டு வந்து விடுகிறார்கள்.

தாம் பெற்ற பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்கிறார்கள்.எனக்குத் தோன்றுவதெல்லாம், நம் குழந்தைகள் நம்மை உற்று கவனித்து வருகின்றன.நாம் செய்வதை அப்படியே திருப்பி செய்கின்றன.அப்படி இருக்கும் போது, நாம் நம் குழந்தைகள் மீது பாசம் வத்தால் நம் குழந்தைகள் அவர்கள் குழந்தைகள் மீது தான் பாசம் வைப்பர்கள்.

மாற்றாக நாம் நம் பெற்றோர் மீது பாசம் வைத்தால், அது அவர்கள் மனதில் பதிந்து நம் மீது பாசம் வைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.நாம் தான் அதற்கு இடம் கொடாமல் அடுத்த தலைமுறையினரைக் குறை கூறி வருகிறோம்.

1 comment:

துளசி கோபால் said...

ஏம்ப்பா லாஜிக் கொஞ்சம் உதைக்குதே......

நாம் எதைப்பார்த்து வளர்ந்தோம்?
நம் பெற்றோர்களைத்தானெ?
அப்படி இருக்க இதை மட்டும் யார்கிட்டே இருந்து கத்துக்கிட்டோம்?
பக்கத்து வீட்டுக்காரன்கிட்டே இருந்தா?:-)

அது போகட்டும்.
முதியோர் இல்லத்தை ஏன் வெறுக்கணும்? அது(வும்) ஒரு ஆரோக்கியமான இடம்தான்.
அவுங்க வயசுக்கேத்த மனிதர்களின் கம்பெனி கிடைக்குமில்லையா?

எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு. ப்ரைட் சைடையும் கொஞ்சம் பாருங்க.