"சார் அடுத்த படத்துக்கு கதை ரெடி" என்ற தரணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகப் பார்க்கிறார் விஜய்.
"ண்ணா இந்தப் படத்துக்கே வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு உட்காந்திருக்கோம்.அதுக்குள்ள அடுத்த படமா???ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு..."
"சார் இது வேற மாதிரி இருக்கும்.கேளுங்க..."
"விஜய் தலையை இடதும், வலதுமாக ஆட்டி ம் என்கிறார்.தரணி, சம்மதம் கொடுத்துவிட்டார் என்று நினைத்து கதையை ஆரம்பிக்கிறார்".
"படத்த ஓப்பன் பண்ணவுடனேயே ஒரு பிரச்சினையைக் காட்டுறோம் சார்..."
"அது என்ன பிரச்சினை????"
"அது ஒரு பிரச்சினையே இல்லை சார்."
"இப்பத்தான் பிரச்சினைன்னு சொன்னீங்க..."
"அத சொல்லல சார்.பிரச்சினை ஒரு மாட்டேர இல்ல.ஏன்னா இன்ட்டர்வெல்க்கு 30 நிமிஷம் கழிச்சுத்தான் நீங்க பிரச்சினைக்கு உள்ளேயே போறீங்க..."
"அதுவரைக்கும்....."
"இப்படியெல்லாம் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுட்டு இருந்தீங்கன்ன பரதன்ட்ட சொல்லி இன்னொரு படத்துக்கு பூஜை போட சொல்லிருவேன்..."
"என்னது பரதனா???...அண்ணா நீங்க சொல்லுங்கன்னா..."
"படத்தோட பேரு குண்டு...இதுல நீங்க ஒரு கோலிக் குண்டு சாம்பியன்.இரண்டாவது சீன்ல பயங்கரமா ஒரு கோலிக்குண்டு மேட்சு நடக்குது..அதுல நீங்க ஜெயிக்கிறீங்க..."
விஜய்..மனதிற்குள்(ஏதோ IPL match ரேஞ்சுக்குப் பேசுறாரே)
"நீங்க ஜெயிச்சி கப் வாங்குறீங்க...ஸ்கீரன்ல உங்கள ப்ரீஸ் பண்ணி கதை,திரைக்கதை,இயக்கம் தரணின்னு போடுறோம்."
"ஆங்...இதுல மட்டும் தெளிவா இருங்க.."
"என்னது???"
அண்ணா நீங்க கதைய மேல சொல்லுங்கன்னா...
"விஜய் You are insulting me...அதான் சொல்லி முடிச்சிட்டேனே..."
"என்னது சொல்லி முடிச்சுட்டீங்களா?????"
"ஆமா..."
"இது 15 நிமிஷத்துக்குத்தான ஓடும்.மீதி 2 மணி நேரத்துக்கு..."
"வித்யாசாகர்ட்ட சொல்லி 6 பாட்டு வாங்கிட்டேன்.அப்புறம் காமெடிக்கு விவேக் கிட்ட சொல்லி பெருச்சாளி, வச்சுக்கிட்டு இருக்கிறது அப்படி இப்படின்னு ஏதாவது அசிங்கமா பேசச் சொல்லி சமாளிச்சுக்கலாம்..."
"அப்ப ஹீரோயினு..."
"விஜய் நீஙக 2 படம் என் கூட பண்ணியும் என் frequency க்கு வரல.திரிசா தான் ஹீரோயின்.அத அமெரிக்காவுல இருந்து நீங்க இழுத்துக்கிட்டு ஓடி வறீங்க..."
"என்னது அமெரிக்காவுல இருந்தா???"
"ஆமா மதுரை முடிச்சாச்சு, மலேசியா முடிச்சாச்சு...அடுத்து அமெரிக்கா தானே..."
"கிழிஞ்சது..."
"அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.உங்களோட இன்ட்ரோ சாங்குக்கு மாளவிகா கிடையாது.நமீதா தான்."
"ஏன் ???"
"ஏன்னா இந்தப் படத்துலேயே ஏன் மாளவிகாவுக்குப் பதிலா நமீதாவ போடலன்னு ஒருத்தர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருக்கிறார்."
விஜய் மயங்கி விழுகிறார்.
கட்டாய பின்குறிப்பு..
இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது இல்லை.
Sunday, May 4, 2008
தரணி - விஜய் அடுத்து இணையும் "குண்டு" (கற்பனைக்)கதை ரெடி...
Posted by
செல்வம்
at
11:35 AM
8
comments
உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??
உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி..
"தம்பி எங்க வேலைபார்க்கிறான்???"
"Wipro வுல"
"சம்பளம் எவ்வளவு வரும்???"
"17000 வரும்."
"என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே சேத்தீங்க??"
"இல்ல Campus Interview....
"சரி உனக்கு எவ்வளவு வரும்??"
"எனக்குத் திக் என்றது.என் தம்பிக்கே இந்தக் கதியென்றால் துகிலியல் துறையில் பணிபுரியும் என் கதி...."
"ஒரு 9000 வரும்."
"என்னது??9000...இதெல்லாம் ஒரு வேலைன்னு பாத்துக்கிட்டு இருக்க...பேசாம வுட்டுடு".
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன்.
சரி..சரி ஊருக்குப் போகனும்.பஸ்ஸுக்கு காசில்லை.ஒரு 250 ரூபாய் இருந்தாக் கொடு..கல்யாணத்துக்கு வரும் போது தந்திர்றேன்...
Posted by
செல்வம்
at
7:46 AM
21
comments
Labels: அனுபவம்
குருவி - திரைவிமர்சனம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரன் உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குருவி.
குவாரியில் வில்லன்களால் அடிமைபடுத்தப் பட்டு இருக்கும் தந்தையையும்,மற்றவர்களையும் விஜய் காப்பாற்றுவது தான் கதை.
படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் தரணி தூள் படத்தை ரீமேக் செய்துவிட்டாரோ??என்ற பயம் மனதில் எழுகிறது.திரிசாவை இழுத்துக் கொண்டு விஜய் ஓடும் காட்சிகளில் கில்லி தேவையில்லாமல் ஞாபகம் வந்து தொலைக்கிறது.(ஒரு படம் பார்த்தா பார்த்த அன்னிக்கே மறந்து போற சக்தியக் கொடு இறைவா!!!!!)
விஜய் ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துள்ளார்.(பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்ற அறிவுரை உட்பட).விஜயை சூப்பர்(காமெடி)மேனாக மாற்றியுள்ளார்கள்.வில்லன்கள் படம் முழுக்க சுட்டும் ஒரு குண்டு கூட மேலே படவில்லை.அடுத்த முறை சுடறதுக்கு நல்லா ட்ரெயினிங் எடுங்கப்பா...(ஹி..ஹி துப்பாக்கியைச் சொன்னேன்)
திரிசா...டிட்டோ....பலபடங்களில் செய்தது தான்.
விவேக் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் க்ராஸ் ஆகும் பெண்களை அசிங்கமாகப் பேசி காமெடி செய்வாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.இந்தப் படத்தில் டபுள்மீனிங் தூக்கல் தான்.
வில்லன்களாக சுமன், ஆசிஷ்வித்யார்த்தி போன்றோர்.வில்லன்களாக அறிமுகமாகி காமெடியன்களாக முடிந்திருக்கிறார்கள்.
பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன.அதுவும் அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கும் மொழ..மொழன்னு பாட்டிற்கு விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.வித்யாசாகர் பின்னியுள்ளார்.
பரதன் இல்லாத குறை வசனங்களில் தெரிகிறது.வெறும் பில்டப்புகள் படத்தின் முதல் வாரக் கலெக்சனுக்கு மட்டுமே உதவும் என்பதை வசனகர்த்தா உணர்வார் என நம்புவோம்.
கோபிநாத்தின் காமிரா படத்தைப் பிரம்மாண்டமாக காட்டியுள்ளது.
தரணியின் படங்களில் இருக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் படத்தில் இல்லாதது பெறும் குறை.அதிலும் இரண்டாம் பகுதி முழுவதும் சண்டைகளால் நகர்கிறது.
சங்கர் எப்படி நாட்டைத் திருத்தும் கதைகளில் சிக்கிக் கொண்டாரோ அதுபோல் தரணியும் இந்த வகைக் கதைகளில் சிக்கிக் கொண்டாரோ என்று தோன்றுகிறது..
மொத்ததில் படம் பரவாயில்லை.ஆனால் கில்லி போல் இல்லை.:-((
Posted by
செல்வம்
at
7:15 AM
7
comments
Labels: திரைவிமர்சனம்
