Thursday, November 5, 2009

எனக்கு கல்யாணம் .......எனக்கு கல்யாணம்

அப்பாவும், அம்மாவும் திடீரென்று பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு கடந்த ஜனவரி மாதம் திடு திப்பென்று வந்தார்கள்.

"உனக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கோம்....நீ என்ன சொல்ற‌"

"இப்பவே என்ன அவசரம் ? இன்னும் 2 வருஷம் போட்டுமே". (இப்பவே வயது 35 மாதிரி தெரியுது. இன்னும் 2 வருஷம் போனா கிழிஞ்சுறும்)

"அதெல்லாம் எங்களுக்கு எப்ப பண்ணனும்னு தெரியும். ஆனா நாங்க பேச வந்தது வேற..." என்று இழுத்தார்கள்.

நேற்று நீயா...நானா ரேஞ்சுக்கு காதல் திருமணத்தைப் பற்றிப் பேசிய விளைவுதான் அது என்பது புரிய எனக்கு சற்று நேரமானது.

"நானெல்லாம் எந்தப் பொண்ணையும் லவ் பண்ணல‌. (பொண்ணுங்கள்லாம் ரொம்பத் தெளிவா இருக்காங்க). நீங்களே பாருங்க".

அப்போது ஆரம்பித்தது. அப்பாவும் அம்மாவும் ஓவர்டைம் வேலை எல்லாம் பார்த்தார்கள்.

"பையன் நல்லாத்தான் இருக்காரு...ஆனா குண்டா இருக்காரு"

"பையன் இஞ்ஜினியரிங்னு சொன்னாங்க....ஆனா ஏதோ தலகாணி கம்பெனில வேலை செய்றாறு.... நான் படிச்சது டெக்ஸ்டைல்ங்க"

"பையனுக்கு என்ன வருமானம் வரும்?............. பூ இவ்வளவுதானா ஏப்பா நீ பேசாம பாரின் கீரின் ட்ரை பண்லாம்ல.

"பையனுக்கு ஆயல்யம் நட்சத்திரமா? ஐயையோ !!!!!!!!!!!!! பெண்ணின் அம்மா அலறிய போது கோபம் வந்தது. தன் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில்தான் அலறினார்கள் என்று தெரிய வந்த போது சிரிப்பு வந்தது.

"ஏம்பா அவன் போட்டாவையும், ஃபுல் டீடைல்ஸையும் முதல்ல அனுப்புங்க. பாத்துட்டு புடிச்சிருந்தா மட்டும் அவன வந்து பாக்கச் சொல்லுங்க. சும்மா இப்படி வந்து ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கே கோபம் வந்திடும்" தம்பி அப்பாவை அரட்டினான்.

இவ்வளவையும் மீறி கோவில்பட்டியில் ஒரு கோவிலில் வைத்து பார்க்கப்பட்ட கெளரி என்னைப் பார்த்து பிடிச்சுருக்கு என்று சொல்லியவாறே 5 ஸ்டார் சாக்லேட்டை நீட்டியது இன்று திருமணம் வரை வந்துள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் (கோவில்பட்டி அருகில்) எனக்குத் திருமணம் நடக்க உள்ளது. அது மட்டுமின்றி நவம்பர் 29 ஆம் தேதி சேலத்தில் ரிசப்ஷனும் நடக்க உள்ளது. இரு நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து எங்களை வாழ்த்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பத்திரிக்கை இணைக்கப் பட்டுள்ளது.அனைவரும் வருக.

என்றென்றும் அன்புடன்

செல்வம்





10 comments:

Subankan said...

வாழ்த்துக்கள்!!!

மாயாவி said...

இனிய வாழ்த்துக்கள்.

வாங்க, வாங்க வந்து நம்ம ஜோதியில கலந்துக்குங்க!!

பேரு போடலேனா கோவிச்சிக்க மாடீங்கேல்ல said...

வாழ்த்துக்கள்.....

(பத்திரிக்கைய தமிழ்ல போட ரொம்ப கூச்சப்படரிங்க எல்லாரும் )

கணேஷ் said...

Best wishes for your marriage!

அன்பேசிவம் said...

தம்பி டீ இன்னும் வரலை, சாரி ட்ரீட் இன்னும் வரலை

சந்திர கிருஷ்ணா said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

சந்திர கிருஷ்ணா said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் நண்பா....

கோவி.கண்ணன் said...

இனிய நல்வாழ்த்துகள்.

தனி மரம் தோப்பு (கரணம் இல்லை) ஆகும் நேரம் !
:)

தமிழ் said...

வாழ்த்துகள்