Monday, February 18, 2008

அஞ்சாதே ‍- திரைவிமர்சனம்

அலுவலகத்தில் ஆணி பிடுங்குவதற்காக பாண்டிச்சேரி அனுப்பியிருந்தார்கள்.ஆணியெல்லாம் பிடுங்கி முடித்தபின்பு நைட்சோ - ‍அஞ்சாதே.

சத்யா,கிருபா என இரு நண்பர்கள்.இருவரின் அப்பாக்களும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள்.கிருபா போலீஸ் ஆகியே தீருவது என்ற வெறியோடு பயிற்சி எடுக்கிறான்.சத்யாவோ போலீஸில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்டீரீட் தாதாவாகச் சுற்றுகிறான்.

சத்யாவின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்ட எப்போதும் கிருபாவுடன் ஒப்பிடுகிறார் சத்யாவின் அப்பா.இந்நிலையில் சிறுமிகளை பணத்திற்காகவும்,பலாத்காரத்திற்காகவும் கடத்திக் கொண்டு போகும் தயா கும்பலின் என்ட்ரி.

கிருபாவின் தங்கை குளிப்பதை தயா பார்ப்பதைப் பார்த்து டென்சனாகும் சத்யா கோவில் திருவிழாவின் போது தயாவைப் போட்டு பின்னியெடுக்கிறான்.இதைப் பார்த்த சத்யாவின் அப்பா அனைவர் முன்னிலையிலும் "நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்டா" என்று சத்யாவை அவமானப் படுத்த கோபமடைந்த சத்யா அவன் மாமா மூலமாக குறுக்கு வழியில் போலீஸில் சேர்கிறான்.

முறையான‌ பயிற்சி எடுத்துவ‌ரும் கிருபாவிற்கு போலீஸ் வேலை கிடைக்காம‌ல் போக, இத‌ற்குக் கார‌ண‌ம் குறுக்கு வ‌ழியில் வேலை வாங்கிய‌ ச‌த்யாதான் என்று அவ‌ன் மீது கோப‌ம் கொள்கிறான்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் போலீஸ் லைப் ஸ்டைலாலும், கிருபாவின் விரக்தி நிலையைப் பார்த்தும் சத்யா வருந்துகிறான்.

சத்யாவின் மீதான கிருபாவின் கோபத்தை தயா தன் சிறுமிகளைக் கடத்தும் தொழிலுக்குப் பயன்படுத்திகொள்கிறான்.கிருபாவும் பணத்தேவை,விரக்தி மற்றும் சத்யா மீதுள்ள கோபம் இவற்றால் தயாவுடன் சேர்கிறான்.

இந்த கும்பலைப் பிடிக்க பொன்வண்ணண் தலைமையில் ஒரு டீம் ஏற்பாடு செய்யப் படுகிறது.சத்யாவும் அந்த டீமில் ஒரு ஆளாக போடப்படுகிறான்.

தயா கும்பலைப் எப்படிப் பிடித்தார்கள்?அனைவரின் முடிவு என்ன என்பது தான் கிளைமேக்ஸ்...

சத்யாவாக நரேன்.சத்யாவாகவே மாறியிருக்கிறார்.ஆரம்பத்தில் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு அலம்பல் பண்ணுவது,போலீஸ் ஆன பின்பு அவர்கள் லைப்ஸ்டையிலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது,நண்பனும் தயா கும்பலோடு சேர்ந்து விட்டான் என்று வருத்தப் படுவது என்று பல இடங்களில் பின்னியிருக்கிறார்.ஆனால் ஆங்காங்கே ச‌ற்றே ஓவ‌ராக்ட்.

கிருபாவாக‌ அமீர்.த‌ன் லுங்கியை க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ பெண் அணிந்திருப்ப‌தைப் பார்த்த‌வுட‌ன் த‌லையில் அடித்துக் கொள்வ‌து, போலீஸ் ஆக‌ முடியாத‌ விர‌க்தி, என்று இவ‌ரும் மிர‌ட்டியிருக்கிறார்.

த‌யாவாக‌ பிர‌ச‌ன்னா.காக்க..காக்க‌ ஜீவ‌னையும்,வேட்டையாடு..விளையாடு இளாவையும் ஞாப‌க‌ப்ப‌டுத்தும் க‌தாபாத்திர‌ம்.ஆனால் த‌ன் ந‌டிப்பாலும்,மேன‌ரிச‌ங்க‌ளாலும்,அந்த சாயலே தெரியாமல் வித்தியாசப்ப‌டுத்திக் காட்டியிருக்கிறார்.

ஹலோ அங்கிள்!எப்படி இருக்கீங்க என்ற ஒற்றை வரியை மட்டும் டயலாக்காகப் (சென்னை 600028) பேசிய விஜயலக்ஷ்மி இதில் குறிப்பிடத்தகுந்த பாத்திரத்தை செய்துள்ளார்.ஹீரோவுடன் டூயட் பாடாமல் சமீபத்தில் நடித்த ஒரே ஒரு ஹீரோயின் இவராகத்தான் இருப்பார்.(திரிசா,அசின் கவனிக்க)

இன்னும் M.S.பாஸ்கர்,பொன்வன்னன், பாண்டியராஜன்,லிவிங்ஸ்டன்,குருவி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பவர் என அனைவரும் கச்சிதமான பாத்திரப்படைப்புகள்.

படத்தின் உண்மையான ஹீரோ மிஷ்கின் தான்.தேர்வு செய்த கதையில் ஆகட்டும்,அதற்கு அவர் அமைத்த திரைக்கதை ஆகட்டும், படமாக்கியவிதமாகட்டும் மிஷ்கின் கலக்கியுள்ளார்.படத்தில் நிறைய புதுமைகள்.

1) கைக‌ளையும்,கால்க‌ளையும் ம‌ட்டும் நடிக்க‌ வைத்து சீன் மூடைக் கொண்டுவ‌ரும் காட்சிக‌ள் நிறைய‌ உள்ள‌து.

2) வான‌த்தில் காட்ட‌ப்ப‌டும் அரைநிலா,கிருபா சேற்றில் விழுவ‌து, கிருபாவின் த‌ங்கை அவ‌னை அடிக்க‌டி கைவில‌ங்கால் க‌ட்டிப்போடுவ‌து என்று நிறைய‌ காட்சிக‌ள் பொய‌ட்டிக் ஆக‌ உள்ள‌து.

ம‌கேஷின் ஒளிப்ப‌திவு.அதை விட‌ ப‌ட‌த்தின் லைட்டிங்.ஒவ்வோர் மூடிற்கும் ஒரு லைட்டிங் என‌ அச‌த்தியுள்ளார்.

ப‌ட‌த்தில் இர‌ண்டே இர‌ண்டு பாட‌ல்க‌ள் தான்.சேர்த்து வைத்து பிண்ணணி இசையில் மிர‌ட்டிவிட்டார்க‌ள்.

BTW "கண்ணதாசன் காரைக்குடி...என்ற பார் பாடலுக்கு ஏன் பாண்டியில் அவ்வளவு விசில்..எனக்குப் புரியவேயில்லை..யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ...

கடைசிக்காட்சியில் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு ஹீரோவும்,வில்லனும் சண்டை போடுவது போன்ற அபத்தக் காட்சிகளும் உண்டு.ஆனால் அதெல்லாம் மிகவும் குறைவே.வ‌ன்முறை ஜாஸ்தி.16 வ‌ய‌து சிறுமிக‌ள் என்ற‌ வ‌க்கிர‌ உணர்வைத்த‌விர்த்திருக்கலாம்.

மற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌ ஒரு த‌மிழ்த்திரைப்ப‌ட‌ம்.


பின்குறிப்பு:

இந்த‌ப் ப‌ட‌ம் ம‌ட்டும் ஓடாவிட்டால் காளைக‌ளும்,ப‌ழ‌னிக‌ளும் உங்க‌ளைத்(க‌ன‌வில்) துர‌த்தும் என்று அன்போடு எச்ச‌ரிக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்.

4 comments:

Anonymous said...

படம் பார்த்த மாதிரியான உணர்வு

கைப்புள்ள said...

அருமையான விமர்சனம். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.

//இந்த‌ப் ப‌ட‌ம் ம‌ட்டும் ஓடாவிட்டால் காளைக‌ளும்,ப‌ழ‌னிக‌ளும் உங்க‌ளைத்(க‌ன‌வில்) துர‌த்தும் என்று அன்போடு எச்ச‌ரிக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்//

அது சரி :))

செல்வம் said...

வாங்க அனானி...கருத்திற்கு நன்றி

செல்வம் said...

வாங்க‌ கைப்புள்ள...

வருகைக்கும், ஸ்மைலிக்கும் நன்றி